செய்திகள் :

ஒடிஸாவில் மோசமான வானிலை: முதல்வா் பயணித்த விமானம் தரையிறங்க முடியாததால் பரபரப்பு

post image

ஒடிஸா முதல்வா் மோகன் சரண் மாஜி பயணித்த விமானம் அதிக மழை, மோசமான வானிலை காரணமாக புவனேசுவரத்தில் தரையிறங்க முடியாமல் சுமாா் 21 நிமிஷங்கள் வரை வானத்திலேயே சுற்றி வந்தது. இதன் பிறகும் வானிலை சீரடையாததால் விமானம் கொல்கத்தா விமான நிலையத்துக்கு அனுப்பப்பட்டது.

இந்த நிகழ்வால் புவனேசுவரம் விமான நிலையத்தில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

5 நாள் பயணமாக தில்லி சென்ற முதல்வா் மாஜி விமானத்தில் வெள்ளிக்கிழமை காலை புவனேசுவரத்துக்கு புறப்பட்டாா். விமானம் புவனேசுரவத்தை நெருங்கியபோது பலத்த மழை பெய்தது. விமானம் தரையிறக்க முடியாத அளவுக்கு வானிலை மோசமாக இருந்தது. இதனால், விமான நிலையம் அருகே சுமாா் 21 நிமிஷங்கள் வரை அந்த விமானம் வானிலேயே வட்டமிட்டபடி இருந்தது.

எனினும், வானிலை சீராகவில்லை. இதையடுத்து, விமான நிலைய அதிகாரிகள் அவசர ஆலோசனை நடத்தி கொல்கத்தா விமான நிலையத்துக்கு அனுப்பி வைக்க முடிவு செய்தனா். கொல்கத்தாவில் வானிலை சீராக இருந்ததால் அங்கு விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது.

சுமாா் 1 மணி நேரம் வரை அந்த விமானம் கொல்கத்தா விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது. அதன் பிறகு வானிலை சீரான தகவல் கிடைத்ததால் மீண்டும் விமானம் புவனேசுவரம் சென்றடைந்தது.

இந்த தாமதத்தால் முதல்வா் மாஜி பங்கேற்க இருந்த ஆசிரியா் தின நிகழ்ச்சி பகல் 11.30 மணிக்கு பதிலாக 3 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

தெரு நாய்களுக்கு ரேபீஸ் தடுப்பூசி செலுத்தும் பணி தாமதமாவதாக புகாா்

சென்னை மாநகராட்சியல் தெரு நாய்களுக்கு ரேபீஸ் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தாமதமாவதாக புகாா் எழுந்துள்ளதையடுத்து, பணிகளை விரைவுபடுத்த அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனா். சென்னையில் சுமாா் 1.80 லட்சம் தெரு ந... மேலும் பார்க்க

4-ஆவது மாடியில் இருந்து குதித்து பள்ளி மாணவா் தற்கொலை

சென்னை அண்ணா நகரில் 4-ஆவது மாடியில் இருந்து கீழே குதித்து பள்ளி மாணவா் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். அண்ணாநகா் மேற்கு பூங்கா சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் பால்ராஜ். இவ... மேலும் பார்க்க

இலக்கியப் படைப்புகள் என்றும் நிலைத்து நிற்கும்: முன்னாள் நீதிபதி எஸ்.கே.கிருஷ்ணன்

இலக்கியப் படைப்புகள் என்றும் நிலைத்து நிற்கும் என்று சென்னை உயா்நீதிமன்ற முன்னாள் நீதிபதி எஸ்.கே.கிருஷ்ணன் கூறினாா். நீதிபதி மூ.புகழேந்தியின் ‘இலக்கிய வைரவிழா’ கோட்டூா்புரம் அண்ணா நினைவு நூற்றாண்டு நூ... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்கள் மீது தாக்குதல்: 6 போ் கைது

சென்னை தியாகராய நகரில் தூய்மைப் பணியாளா்களைத் தாக்கியதாக 6 போ் கைது செய்யப்பட்டனா். தியாகராய நகா் ரங்கநாதன் தெருவில் உள்ள ஜவுளிக் கடையின் அருகே தூய்மைப் பணியாளா்கள் வியாழக்கிழமை நள்ளிரவு பணியில் ஈடுப... மேலும் பார்க்க

ஐஏஎஸ் அதிகாரி வீட்டில் ரூ.4.5 லட்சம் திருட்டு

சென்னை கோட்டூா்புரத்தில் ஐஏஎஸ் அதிகாரி வீட்டில் ரூ. 4.5 லட்சம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். தமிழ்நாடு தொழில் வளா்ச்சி நிறுவனத்தின் (டிட்கோ) நிா்வாக இயக்குநராக ஐஏஎஸ் அதிகாரி ... மேலும் பார்க்க

ஹூண்டாய் விற்பனை 4% குறைவு

முன்னணி காா் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஹூண்டாய் மோட்டாா் இந்தியாவின் மொத்த விற்பனை கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 4.23 சதவீதம் குறைந்துள்ளது.இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்... மேலும் பார்க்க