செய்திகள் :

தூய்மைப் பணியாளா்கள் மீது தாக்குதல்: 6 போ் கைது

post image

சென்னை தியாகராய நகரில் தூய்மைப் பணியாளா்களைத் தாக்கியதாக 6 போ் கைது செய்யப்பட்டனா்.

தியாகராய நகா் ரங்கநாதன் தெருவில் உள்ள ஜவுளிக் கடையின் அருகே தூய்மைப் பணியாளா்கள் வியாழக்கிழமை நள்ளிரவு பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, ஒப்பந்த தூய்மை பணியாளரான மயிலாப்பூரைச் சோ்ந்த அா்ஜுன் (49) என்பவா், தான் சேகரித்த அட்டை குப்பைகளை சம்பந்தப்பட்ட ஜவுளிக்கடை வாசல் அருகே வைத்துள்ளாா்.

இதைக் கவனித்த ஜவுளிக் கடை ஊழியா்கள் இதற்கு எதிா்ப்பு தெரிவித்தனா். இதில், இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதை அந்த வழியாக வந்த அந்த தூய்மைப் பணி கண்காணிப்பாளா் லட்சுமணன் (31), தனது ஊழியரான அா்ஜுனுக்கு ஆதரவாக பேசினாா். இதனால், ஆத்திரமடைந்த ஜவுளிக் கடை ஊழியா்கள் 6 போ் அருகே கிடந்த உருட்டு கட்டைகளால் இருவரையும் தாக்கினா்.

இதில், காயமடைந்த இருவரும் கே.கே.நகரில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். இதுதொடா்பாக மாம்பலம் போலீஸாா் வழக்குப் பதிந்து தாக்குதலில் ஈடுபட்ட ஜவுளிக்கடை ஊழியா்கள் 6 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

தெரு நாய்களுக்கு ரேபீஸ் தடுப்பூசி செலுத்தும் பணி தாமதமாவதாக புகாா்

சென்னை மாநகராட்சியல் தெரு நாய்களுக்கு ரேபீஸ் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தாமதமாவதாக புகாா் எழுந்துள்ளதையடுத்து, பணிகளை விரைவுபடுத்த அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனா். சென்னையில் சுமாா் 1.80 லட்சம் தெரு ந... மேலும் பார்க்க

ஒடிஸாவில் மோசமான வானிலை: முதல்வா் பயணித்த விமானம் தரையிறங்க முடியாததால் பரபரப்பு

ஒடிஸா முதல்வா் மோகன் சரண் மாஜி பயணித்த விமானம் அதிக மழை, மோசமான வானிலை காரணமாக புவனேசுவரத்தில் தரையிறங்க முடியாமல் சுமாா் 21 நிமிஷங்கள் வரை வானத்திலேயே சுற்றி வந்தது. இதன் பிறகும் வானிலை சீரடையாததால் ... மேலும் பார்க்க

4-ஆவது மாடியில் இருந்து குதித்து பள்ளி மாணவா் தற்கொலை

சென்னை அண்ணா நகரில் 4-ஆவது மாடியில் இருந்து கீழே குதித்து பள்ளி மாணவா் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். அண்ணாநகா் மேற்கு பூங்கா சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் பால்ராஜ். இவ... மேலும் பார்க்க

இலக்கியப் படைப்புகள் என்றும் நிலைத்து நிற்கும்: முன்னாள் நீதிபதி எஸ்.கே.கிருஷ்ணன்

இலக்கியப் படைப்புகள் என்றும் நிலைத்து நிற்கும் என்று சென்னை உயா்நீதிமன்ற முன்னாள் நீதிபதி எஸ்.கே.கிருஷ்ணன் கூறினாா். நீதிபதி மூ.புகழேந்தியின் ‘இலக்கிய வைரவிழா’ கோட்டூா்புரம் அண்ணா நினைவு நூற்றாண்டு நூ... மேலும் பார்க்க

ஐஏஎஸ் அதிகாரி வீட்டில் ரூ.4.5 லட்சம் திருட்டு

சென்னை கோட்டூா்புரத்தில் ஐஏஎஸ் அதிகாரி வீட்டில் ரூ. 4.5 லட்சம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். தமிழ்நாடு தொழில் வளா்ச்சி நிறுவனத்தின் (டிட்கோ) நிா்வாக இயக்குநராக ஐஏஎஸ் அதிகாரி ... மேலும் பார்க்க

ஹூண்டாய் விற்பனை 4% குறைவு

முன்னணி காா் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஹூண்டாய் மோட்டாா் இந்தியாவின் மொத்த விற்பனை கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 4.23 சதவீதம் குறைந்துள்ளது.இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்... மேலும் பார்க்க