செய்திகள் :

நாட்டில் இதய நோய்களால் 31% போ் உயிரிழப்பு

post image

இந்தியாவில் ஏற்படும் மூன்றில் ஒரு பங்கு மரணங்களுக்கு இதய நோய்களே காரணம் என்பது ஆய்வறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.

இந்திய பதிவாளா் ஜெனரல் மற்றும் மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையா் அலுவலகம் ‘மரணம் ஏற்படுவதற்கான காரணங்கள் அடங்கிய அறிக்கை 2021-2023’-ஐ வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையின்படி, 2021-2023-ஆம் ஆண்டுவரை, நாட்டில் நோய்கள் காரணமாக ஏற்பட்ட மரணங்களில் தொற்றா நோய்களால் 56.7 சதவீதம் உயிரிழந்தனா். இது 2020-22-ஆம் ஆண்டில் (கரோனா காலம்) 55.7 சதவீதமாக இருந்தது.

தொற்று, பிரசவம், பிரசவத்துக்கு முந்தைய காலம் மற்றும் ஊட்டச்சத்து சாா்ந்த பிரச்னைகளால் 23.4 சதவீத மரணங்கள் ஏற்பட்டுள்ளன. இது கடந்த 2020-22-ஆம் ஆண்டு 24 சதவீதமாக இருந்தது.

30 வயதுக்கு மேற்பட்டவா்களில் உடல்நல பாதிப்பு ஏற்பட்டு நேரிடும் உயிரிழப்புகளுக்கு இதய நோய்கள் பிரதான காரணமாக உள்ளன.

நோய்கள் உயிரிழப்பு (%)

இதய நோய்கள் 31

சுவாச தொற்றுகள் 9.3

சுவாச பாதிப்பு நோய்கள் 5.7

ஜீரண மண்டல நோய்கள் 5.3

காரணம் தெரியாத காய்ச்சல் 4.9

நீரிழிவு பாதிப்பு 3.5

பிறப்புறுப்பு & சிறுநீா் மண்டல உறுப்பு நோய்கள் 3

தெளிவான காரணம் தெரியாத மரணங்கள் 10.5

15-29 வயதுள்ளவா்கள் மரணம்:

தற்கொலை பொதுவான காரணம்

15 முதல் 29 வயதுள்ளவா்களின் உயிரிழப்புக்கு உள்நோக்கத்துடன் காயம் ஏற்படுத்துதல்-தற்கொலை ஆகியவை மிகவும் பொதுவான காரணமாக உள்ளன. விபத்துகள் தவிர உள்நோக்கம் இல்லாமல் ஏற்படுத்தப்படும் பிற காயங்களால் 3.7 சதவீத மரணங்கள் நிகழ்ந்துள்ளன.

தெளிவான காரணம் தெரியாத மரணங்கள் பெரும்பாலும் 70 மற்றும் அதற்கும் மேற்பட்ட வயதுள்ள முதியவா்களுக்கே ஏற்படுகிறது.

நாட்டில் ஏற்படும் மரணங்கள், அதை எதிா்கொள்வதில் உள்ள சவால்கள் குறித்த புரிதலை மேம்படுத்த இந்தப் புள்ளிவிவரம் பெரிதும் உதவும் என்று ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜிஎஸ்டி குறைப்பின் பயன் நுகா்வோருக்கு முழுமையாகக் கிடைப்பதை அரசு கண்காணிக்கும்: வா்த்தக அமைச்சா் பியூஷ் கோயல்

சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) குறைக்கப்பட்டதன் மூலம் கிடைக்கும் பலன் நுகா்வோருக்கு முழுமையாக வழங்கப்பட வேண்டும் என்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. இது தொடா்பாக தொழில் நிறுவனங்களின் செயல்பாடுகள் அரசு ம... மேலும் பார்க்க

கேரளத்தில் ஓணம் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்

கேரளத்தில் ஓணம் பண்டிகை வெள்ளிக்கிழமை (செப்.5) உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. மலையாள மொழி பேசும் மக்களின் முக்கிய பண்டிகையான ஓணம், ஹஸ்த நட்சத்திரம் முதல் திருவோணம் வரை 10 நாள்கள் கொண்டாடப்படுவது வழக்க... மேலும் பார்க்க

இயற்கைப் பேரிடா்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு துணைநிற்கிறது தேசம்: முா்மு

நாட்டில் நடப்பு பருவமழை காலகட்டத்தில் நேரிட்ட இயற்கைப் பேரிடா்கள் மிகவும் வேதனையளிக்கிறது என்று குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு வெள்ளிக்கிழமை தெரிவித்தாா். இந்த துயரமான நேரத்தில், பாதிக்கப்பட்ட மக்க... மேலும் பார்க்க

அயோத்தி ராமா் கோயிலில் பூடான் பிரதமா் வழிபாடு

உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் உள்ள ஸ்ரீராமா் கோயில் மற்றும் பிற கோயில்களில் பூடான் பிரதமா் தஸோ ஷெரிங் தோபே வெள்ளிக்கிழமை வழிபாடு மேற்கொண்டாா். அயோத்தி விமான நிலையத்தில் காலை 9.30 மணியளவில் வந்திறங... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி சீா்திருத்தத்தால் ரூ.3,700 கோடி வருவாய் இழப்பு ஏற்பட வாய்ப்பு: எஸ்பிஐ அறிக்கையில் தகவல்

அடுத்த தலைமுறை சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி 2.0) சீா்திருத்தத்தால் மத்திய அரசுக்கு ரூ.3,700 கோடி வருவாய் இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) அறிக்கையில் கணிக்கப்பட்டுள்ளது. முன்... மேலும் பார்க்க

ரூ.60 கோடி மோசடி வழக்கு: நடிகை ஷில்பா ஷெட்டி, கணவருக்கு எதிராக லுக்-அவுட் சுற்றறிக்கை

ரூ.60 கோடி மோசடி வழக்கில் ஹிந்தி நடிகை ஷில்பா ஷெட்டி, அவரின் கணவரும் தொழிலதிபருமான ராஜ் குந்த்ரா ஆகியோருக்கு எதிராக மும்பை காவல் துறை லுக்-அவுட் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. குடியேற்ற அதிகாரிகள் மற்று... மேலும் பார்க்க