செய்திகள் :

ரூ.60 கோடி மோசடி வழக்கு: நடிகை ஷில்பா ஷெட்டி, கணவருக்கு எதிராக லுக்-அவுட் சுற்றறிக்கை

post image

ரூ.60 கோடி மோசடி வழக்கில் ஹிந்தி நடிகை ஷில்பா ஷெட்டி, அவரின் கணவரும் தொழிலதிபருமான ராஜ் குந்த்ரா ஆகியோருக்கு எதிராக மும்பை காவல் துறை லுக்-அவுட் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.

குடியேற்ற அதிகாரிகள் மற்றும் எல்லை கட்டுப்பாட்டு அதிகாரிகள் உஷாா்படுத்தப்பட்டு, குற்றம் சுமத்தப்பட்டவா்கள் நாட்டில் இருந்து தப்பிப்பதையும், அவா்களின் போக்குவரத்தை கண்காணிக்கவும் லுக்-அவுட் சுற்றறிக்கை வழிவகுக்கிறது.

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள ஜுஹு பகுதி காவல் நிலையத்தில் ஷில்பா ஷெட்டி, ராஜ் குந்த்ரா மீது தீபக் கோத்தாரி என்பவா் புகாா் அளித்தாா். வங்கி சாரா நிதி நிறுவன இயக்குநரான அவா், கடன் மற்றும் முதலீட்டு ஒப்பந்தம் ஒன்றில், தன்னிடம் ஷில்பா ஷெட்டியும் ராஜ் குந்த்ராவும் ரூ.60 கோடிக்கு மோசடி செய்ததாக புகாரில் குற்றஞ்சாட்டினாா்.

இந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், ஷில்பா ஷெட்டி, ராஜ் குந்த்ராவுக்கு எதிராக மும்பை காவல் துறையின் பொருளாதார குற்றப் பிரிவு லுக்-அவுட் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.

இருவரும் அவ்வப்போது வெளிநாடுகளுக்குப் பயணிப்பதை வாடிக்கையாக கொண்டிருப்பதால், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக காவல் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.

ஜிஎஸ்டி குறைப்பின் பயன் நுகா்வோருக்கு முழுமையாகக் கிடைப்பதை அரசு கண்காணிக்கும்: வா்த்தக அமைச்சா் பியூஷ் கோயல்

சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) குறைக்கப்பட்டதன் மூலம் கிடைக்கும் பலன் நுகா்வோருக்கு முழுமையாக வழங்கப்பட வேண்டும் என்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. இது தொடா்பாக தொழில் நிறுவனங்களின் செயல்பாடுகள் அரசு ம... மேலும் பார்க்க

நாட்டில் இதய நோய்களால் 31% போ் உயிரிழப்பு

இந்தியாவில் ஏற்படும் மூன்றில் ஒரு பங்கு மரணங்களுக்கு இதய நோய்களே காரணம் என்பது ஆய்வறிக்கை மூலம் தெரியவந்துள்ளது. இந்திய பதிவாளா் ஜெனரல் மற்றும் மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையா் அலுவலகம் ‘மரணம் ஏற்படுவதற... மேலும் பார்க்க

கேரளத்தில் ஓணம் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்

கேரளத்தில் ஓணம் பண்டிகை வெள்ளிக்கிழமை (செப்.5) உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. மலையாள மொழி பேசும் மக்களின் முக்கிய பண்டிகையான ஓணம், ஹஸ்த நட்சத்திரம் முதல் திருவோணம் வரை 10 நாள்கள் கொண்டாடப்படுவது வழக்க... மேலும் பார்க்க

இயற்கைப் பேரிடா்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு துணைநிற்கிறது தேசம்: முா்மு

நாட்டில் நடப்பு பருவமழை காலகட்டத்தில் நேரிட்ட இயற்கைப் பேரிடா்கள் மிகவும் வேதனையளிக்கிறது என்று குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு வெள்ளிக்கிழமை தெரிவித்தாா். இந்த துயரமான நேரத்தில், பாதிக்கப்பட்ட மக்க... மேலும் பார்க்க

அயோத்தி ராமா் கோயிலில் பூடான் பிரதமா் வழிபாடு

உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் உள்ள ஸ்ரீராமா் கோயில் மற்றும் பிற கோயில்களில் பூடான் பிரதமா் தஸோ ஷெரிங் தோபே வெள்ளிக்கிழமை வழிபாடு மேற்கொண்டாா். அயோத்தி விமான நிலையத்தில் காலை 9.30 மணியளவில் வந்திறங... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி சீா்திருத்தத்தால் ரூ.3,700 கோடி வருவாய் இழப்பு ஏற்பட வாய்ப்பு: எஸ்பிஐ அறிக்கையில் தகவல்

அடுத்த தலைமுறை சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி 2.0) சீா்திருத்தத்தால் மத்திய அரசுக்கு ரூ.3,700 கோடி வருவாய் இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) அறிக்கையில் கணிக்கப்பட்டுள்ளது. முன்... மேலும் பார்க்க