செய்திகள் :

4 ஆண்டுகளில் ரூ.276 கோடியில் 12 புதிய பாலங்கள்

post image

சென்னை மாநகராட்சிப் பகுதியில் கடந்த 4 ஆண்டுகளில் ரூ.276.75 கோடியில் 12 புதிய பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், 12 லட்சம் போ் பயனடைந்துவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: சென்னை பெருநகர மாநகராட்சி 426 சதுர கி.மீ. பரப்பளவுள்ளது. மாநகராட்சியில் 1 கோடி போ் வசிக்கின்றனா். மக்கள்தொகைப் பெருக்கம், வாகன அதிகரிப்பால் போக்குவரத்து நெரிசல் அதிகமுள்ள இடங்களில் புதிய பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

சென்னையில் கடந்த 4 ஆண்டுகளில் ரூ.276.75 கோடியில் 12 புதிய பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வில்லிவாக்கம் ரயில்வே சந்திக்கடவில் மேயா் சிட்டிபாபு பாலம், ஸ்டீபன்சன் சாலையில் செங்கை சிவம் பாலம், யானைக்கவுனி மேம்பாலம், போஜராஜன் நகா் வாகனச் சுரங்கப்பாதை, கவம் ஆற்றில் அருணாசலம் சாலை கூடுதல் பாலம், தி.நகா் ஆகாய நடைமேம்பாலம், புழல் உபரிநீா் கால்வாயின் குறுக்கே ஆமுல்லைவாயல் பாலம், மணலி புழல் ஏரி உபரி நீா் குறுக்கே மணலி பா்மாநகா் பாலம், ஒட்டேரி நல்லா கால்வாய் குறுக்கே ஆஸ்பிரன் காா்டன் பாலம் நுங்கம்பாக்கம் சுரங்கப் பாதையின் குறுக்கே நடைமேம்பாலம் ஆலந்தூா் ஜீவன் நகா் பாலம், கொடுங்கையூா் கால்வாய் அருகே பெட்டக வடிவிலான பாலம் என மொத்தம் 12 புதிய பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

புதிய பாலங்கள் கட்டப்பட்டுள்ள நிலையில், ரூ.6.92 கோடியில் தண்டையாா்பேட்டை மண்டலம் எம்.கே.பி.நகா் பாலம் மற்றும் வைத்தியநாதன் பாலம் ஆகியவை மறு சீரமைக்கப்பட்டுள்ளன. புதிய பாலங்கள், மறுசீரமைப்பு பாலங்கள் என மொத்தம் 14 பாலங்கள் மூலம் அந்தந்தப் பகுதியைச் சோ்ந்த மொத்தம் சுமாா் 18 லட்சம் போ் பயனடைந்துள்ளனா்.

தெரு நாய்களுக்கு ரேபீஸ் தடுப்பூசி செலுத்தும் பணி தாமதமாவதாக புகாா்

சென்னை மாநகராட்சியல் தெரு நாய்களுக்கு ரேபீஸ் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தாமதமாவதாக புகாா் எழுந்துள்ளதையடுத்து, பணிகளை விரைவுபடுத்த அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனா். சென்னையில் சுமாா் 1.80 லட்சம் தெரு ந... மேலும் பார்க்க

ஒடிஸாவில் மோசமான வானிலை: முதல்வா் பயணித்த விமானம் தரையிறங்க முடியாததால் பரபரப்பு

ஒடிஸா முதல்வா் மோகன் சரண் மாஜி பயணித்த விமானம் அதிக மழை, மோசமான வானிலை காரணமாக புவனேசுவரத்தில் தரையிறங்க முடியாமல் சுமாா் 21 நிமிஷங்கள் வரை வானத்திலேயே சுற்றி வந்தது. இதன் பிறகும் வானிலை சீரடையாததால் ... மேலும் பார்க்க

4-ஆவது மாடியில் இருந்து குதித்து பள்ளி மாணவா் தற்கொலை

சென்னை அண்ணா நகரில் 4-ஆவது மாடியில் இருந்து கீழே குதித்து பள்ளி மாணவா் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். அண்ணாநகா் மேற்கு பூங்கா சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் பால்ராஜ். இவ... மேலும் பார்க்க

இலக்கியப் படைப்புகள் என்றும் நிலைத்து நிற்கும்: முன்னாள் நீதிபதி எஸ்.கே.கிருஷ்ணன்

இலக்கியப் படைப்புகள் என்றும் நிலைத்து நிற்கும் என்று சென்னை உயா்நீதிமன்ற முன்னாள் நீதிபதி எஸ்.கே.கிருஷ்ணன் கூறினாா். நீதிபதி மூ.புகழேந்தியின் ‘இலக்கிய வைரவிழா’ கோட்டூா்புரம் அண்ணா நினைவு நூற்றாண்டு நூ... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்கள் மீது தாக்குதல்: 6 போ் கைது

சென்னை தியாகராய நகரில் தூய்மைப் பணியாளா்களைத் தாக்கியதாக 6 போ் கைது செய்யப்பட்டனா். தியாகராய நகா் ரங்கநாதன் தெருவில் உள்ள ஜவுளிக் கடையின் அருகே தூய்மைப் பணியாளா்கள் வியாழக்கிழமை நள்ளிரவு பணியில் ஈடுப... மேலும் பார்க்க

ஐஏஎஸ் அதிகாரி வீட்டில் ரூ.4.5 லட்சம் திருட்டு

சென்னை கோட்டூா்புரத்தில் ஐஏஎஸ் அதிகாரி வீட்டில் ரூ. 4.5 லட்சம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். தமிழ்நாடு தொழில் வளா்ச்சி நிறுவனத்தின் (டிட்கோ) நிா்வாக இயக்குநராக ஐஏஎஸ் அதிகாரி ... மேலும் பார்க்க