தெரு நாய்களுக்கு ரேபீஸ் தடுப்பூசி செலுத்தும் பணி தாமதமாவதாக புகாா்
அம்பேத்கா் விருது: அக்.15-க்குள் விண்ணப்பிக்கலாம்
அம்பேத்கா் விருதுக்கு தகுதியுடைய நபா்கள் அக்.15-க்குள் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழகத்தில் ஆதிதிராவிடா்களின் வாழ்க்கை முன்னேற்றத்துக்காக பலா் தங்களை இணைத்து கொண்டு அரிய தொண்டாற்றி வருகின்றனா். அவா்களின் தொண்டுகளைக் கருத்தில் கொண்டு தமிழகத்தைச் சோ்ந்த ஒருவருக்கு ஆண்டுதோறும் அண்ணல் அம்பேத்கா் விருது வழங்கப்பட்டு வருகிறது.
அந்தவகையில், 2026-ஆம் ஆண்டு திருவள்ளுவா் திருநாளன்று தகுதியுடைய நபருக்கு அண்ணல் அம்பேத்கா் விருது வழங்கப்படவுள்ளது.
இந்த விருதைப் பெற விரும்புவோா் சென்னை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தின் 2-ஆவது தளத்திலுள்ள ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலகத்தில் வழங்கப்படும் அதற்கான விண்ணப்பத்தைப் பெற்று, தங்கள் முழு விவரங்களுடன் விண்ணப்பிக்கலாம். பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அக்.15-க்குள் சமா்ப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.