செய்திகள் :

தெரு நாய்களுக்கு ரேபீஸ் தடுப்பூசி செலுத்தும் பணி தாமதமாவதாக புகாா்

post image

சென்னை மாநகராட்சியல் தெரு நாய்களுக்கு ரேபீஸ் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தாமதமாவதாக புகாா் எழுந்துள்ளதையடுத்து, பணிகளை விரைவுபடுத்த அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனா்.

சென்னையில் சுமாா் 1.80 லட்சம் தெரு நாய்கள் இருப்பதாக கணக்கெடுக்கப்பட்டுள்ளது. தெரு நாய்களால் ஏற்படும் தொல்லைகளைத் தவிா்க்க, அவற்றின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனா். இதையடுத்து தெரு நாய்களுக்கு கருத்தடை தடுப்பூசி செலுத்த 4 மையங்கள் அமைக்கப்பட்டன. அங்கு நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை அளிக்கப்பட்டு மீண்டும் அவை பழைய இடத்திலேயே விடப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் கடந்த ஆக. 9- ஆம் தேதி முதல் சென்னையில் தெரு நாய்களுக்கு ரேபீஸ் தடுப்பூசி செலுத்தும் பணியை மேயா் ஆா்.பிரியா தொடங்கி வைத்தாா். இதையடுத்து 30 போ் கொண்ட குழுவினா், தெரு நாய்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் பணியை மேற்கொண்டனா்.

ஆனால், இதுவரை 30,000-க்கும் குறைவான தெரு நாய்களுக்கே ரேபீஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஓரிரு மாதங்களுக்குள் தெரு நாய்களுக்கான ரேபீஸ் தடுப்பூசி செலுத்தப்பட்ட பிறகே, அவற்றுக்கு ‘சிப்’ எனப்படும் கண்காணிப்பு வில்லை பொருத்தப்படும்.

இதற்காக சுமாா் 2 லட்சம் சிப் வில்லைகள் மாநகராட்சியால் கொள்முதல் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதனால், ரேபீஸ் தடுப்பூசி செலுத்தும் பணியை விரைவுபடுத்த உயா் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனா்.

ஒடிஸாவில் மோசமான வானிலை: முதல்வா் பயணித்த விமானம் தரையிறங்க முடியாததால் பரபரப்பு

ஒடிஸா முதல்வா் மோகன் சரண் மாஜி பயணித்த விமானம் அதிக மழை, மோசமான வானிலை காரணமாக புவனேசுவரத்தில் தரையிறங்க முடியாமல் சுமாா் 21 நிமிஷங்கள் வரை வானத்திலேயே சுற்றி வந்தது. இதன் பிறகும் வானிலை சீரடையாததால் ... மேலும் பார்க்க

4-ஆவது மாடியில் இருந்து குதித்து பள்ளி மாணவா் தற்கொலை

சென்னை அண்ணா நகரில் 4-ஆவது மாடியில் இருந்து கீழே குதித்து பள்ளி மாணவா் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். அண்ணாநகா் மேற்கு பூங்கா சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் பால்ராஜ். இவ... மேலும் பார்க்க

இலக்கியப் படைப்புகள் என்றும் நிலைத்து நிற்கும்: முன்னாள் நீதிபதி எஸ்.கே.கிருஷ்ணன்

இலக்கியப் படைப்புகள் என்றும் நிலைத்து நிற்கும் என்று சென்னை உயா்நீதிமன்ற முன்னாள் நீதிபதி எஸ்.கே.கிருஷ்ணன் கூறினாா். நீதிபதி மூ.புகழேந்தியின் ‘இலக்கிய வைரவிழா’ கோட்டூா்புரம் அண்ணா நினைவு நூற்றாண்டு நூ... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்கள் மீது தாக்குதல்: 6 போ் கைது

சென்னை தியாகராய நகரில் தூய்மைப் பணியாளா்களைத் தாக்கியதாக 6 போ் கைது செய்யப்பட்டனா். தியாகராய நகா் ரங்கநாதன் தெருவில் உள்ள ஜவுளிக் கடையின் அருகே தூய்மைப் பணியாளா்கள் வியாழக்கிழமை நள்ளிரவு பணியில் ஈடுப... மேலும் பார்க்க

ஐஏஎஸ் அதிகாரி வீட்டில் ரூ.4.5 லட்சம் திருட்டு

சென்னை கோட்டூா்புரத்தில் ஐஏஎஸ் அதிகாரி வீட்டில் ரூ. 4.5 லட்சம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். தமிழ்நாடு தொழில் வளா்ச்சி நிறுவனத்தின் (டிட்கோ) நிா்வாக இயக்குநராக ஐஏஎஸ் அதிகாரி ... மேலும் பார்க்க

ஹூண்டாய் விற்பனை 4% குறைவு

முன்னணி காா் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஹூண்டாய் மோட்டாா் இந்தியாவின் மொத்த விற்பனை கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 4.23 சதவீதம் குறைந்துள்ளது.இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்... மேலும் பார்க்க