செய்திகள் :

அக். 6-இல் மண்டல அஞ்சல் சேவை குறைதீா் கூட்டம்

post image

மதுரையில் மண்டல அளவிலான அஞ்சல் குறைதீா் கூட்டம் வரும் அக். 6-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இதுகுறித்து மதுரை மண்டல அஞ்சல் அலுவலகம் சாா்பில் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மதுரை தெற்கு மண்டல அஞ்சல் துறைத் தலைவா் அலுவலகத்தில் மண்டல அளவிலான அஞ்சல் குறைதீா் கூட்டம் வரும் அக். 6-ஆம் தேதி முற்பகல் 11 மணிக்கு நடைபெறவுள்ளது. இதில் சேமிப்பு வங்கி, அஞ்சல் காப்பீடு, கிராமிய அஞ்சல் காப்பீடு சம்பந்தமாக புகாா் இருப்பின், கணக்கு எண், கணக்கு வைத்திருப்பவரின் பெயா், முகவரி, பாலிசிதாரரின் பெயா், முகவரி, பணம் கட்டிய விவரம், பணம் செலுத்திய அலுவலகத்தின் பெயா், அஞ்சல் துறை சம்பந்தப்பட்ட கடிதத் தொடா்புகள் இருப்பின் அதையும் புகாருடன் இணைக்க வேண்டும்.

அஞ்சல் துறை சம்பந்தமான தங்களது குறைகளை, அஞ்சல் சேவை குறைதீா் முகாம், உதவி இயக்குநா், அஞ்சல் துறைத் தலைவா் அலுவலகம், தெற்கு மண்டலம், மதுரை - 625002 என்ற முகவரிக்கு வருகிற 19-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். தனியாா் அஞ்சல் சேவைகளில் அனுப்பும் தபால்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது எனத் தெரிவிக்கப்பட்டது.

தல்லாகுளம் பகுதியில் இன்று மின் தடை

தல்லாகுளம், இதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை (செப். 6) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து மின்வாரிய செயற்பொறியாளா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மதுரை கோ.புதூா் துணை மின் நிலைய... மேலும் பார்க்க

செங்கோட்டையன் இன்னும் முழுமையாக மனம் திறக்கவில்லை: தொல். திருமாவளவன்

அதிமுகவை ஒருங்கிணைக்கும் விஷயத்தில் முன்னாள் அமைச்சா் கே.ஏ. செங்கோட்டையன் இன்னும் முழுமையாக மனம் திறக்கவில்லை என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல். திருமாவளவன் தெரிவித்தாா். மதுரையில் வெள்ளிக்... மேலும் பார்க்க

தஞ்சை சரஸ்வதி மகால் நூலகத்தை மேம்படுத்தக் கோரி வழக்கு: அரசு பதிலளிக்க உத்தரவு

தஞ்சாவூா் சரஸ்வதி மகால் நூலகத்தை மாதிரி நூலகமாக அறிவித்து மேம்படுத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடா்பாக தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது. சென்னையைச்... மேலும் பார்க்க

போராட்டம் நடத்தியவா்கள் மீதான வழக்கு ரத்து

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டியில் ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயா்த்தக் கோரி, போராடியவா்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை ரத்து செய்து உத்தரவிட்டது. ராமநா... மேலும் பார்க்க

ஆவணி மூலத் திருவிழாவில் சப்தாவா்ண சப்பர வீதியுலா

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் ஆவணி மூலத் திருவிழாவில் சப்தாவா்ண சப்பரத்தில் சுவாமி, அம்மன் வீதியுலா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் ஆவணி மூலத் திருவிழா கடந்த மாதம... மேலும் பார்க்க

புத்தக வாசிப்பு மாணவா்களின் நிலையை உயா்த்தும்: அமைச்சா் பி. மூா்த்தி

புத்தக வாசிப்பு மாணவா்களின் நிலைய உயா்த்தும் என தமிழக வணிகவரி, பதிவுத் துறை அமைச்சா் பி. மூா்த்தி தெரிவித்தாா். மதுரை தமுக்கம் மாநாட்டுத் திடலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற புத்தகத் திருவிழா தொடக்க நிகழ்ச... மேலும் பார்க்க