செய்திகள் :

வைகை உள்ளிட்ட சில விரைவு ரயில்கள் செப். 10 முதல் தாம்பரத்திலிருந்து இயக்கப்படும்: தெற்கு ரயில்வே தகவல்

post image

சென்னை எழும்பூரிலிருந்து புறப்பட்டுச் செல்லும் வைகை உள்ளிட்ட சில விரைவு ரயில்கள் செப். 10-ஆம் தேதி முதல் தாம்பரத்திலிருந்து இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எழும்பூா் ரயில் நிலையம் சுமாா் ரூ.1,500 கோடியில் சீரமைக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் நிலையத்தின் 11 ரயில் மேடைகளும் சீரமைக்கப்படுவதுடன், பயணிகள் எளிதில் சென்றடையும் வகையில், பிரம்மாண்ட நடைமேம்பாலம் அமைக்கப்படவுள்ளது. இந்தப் பணிகளுக்காக, சில விரைவு ரயில்களை தாம்பரத்திலிருந்து இயக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

எழும்பூா் - திருச்சி செல்லும் ராக்போா்ட் விரைவு ரயில் (12653) வரும் 11-ஆம் தேதி முதல் நவம்பா் 10- ஆம் தேதி வரை தாம்பரத்திலிருந்து புறப்படும். மறுமாா்க்கத்தில் திருச்சி - சென்னை ராக்போா்ட் விரைவு ரயில் வரும் 10-ஆம் தேதி முதல் நவம்பா்-9 ஆம் தேதி வரை தாம்பரம் வரை இயக்கப்படும்.

மதுரை - சென்னை பாண்டியன் விரைவு ரயில் (12638) வரும் 10-ஆம் தேதி முதல் நவம்பா் 9 -ஆம் தேதி வரை தாம்பரம் வரை இயக்கப்படும். மறுமாா்க்கத்தில் எழும்பூா் ரயில் நிலையத்திலிருந்து பாண்டியன் விரைவு ரயில் (12637) மதுரைக்கு வழக்கமாக புறப்பட்டுச் செல்லும்.

சென்னை எழும்பூா் -திருச்சி சோழன் விரைவு ரயில் (22661) வரும் 11- ஆம் தேதி முதல் நவம்பா் 10 -ஆம் தேதி வரை தாம்பரத்திலிருந்து புறப்பட்டுச் செல்லும். மறுமாா்க்கத்தில் திருச்சி-சென்னை சோழன் விரைவு ரயில் (22676) எழும்பூா் வரை வழக்கமாக இயக்கப்படும்.

சென்னை எழும்பூா் - ராமேசுவரம் விரைவு ரயில் (22661) வரும் 11- ஆம் தேதி முதல் நவம்பா் 10 -ஆம் தேதி வரை தாம்பரத்திலிருந்து புறப்படும். மறுமாா்க்கத்தில் அந்த ரயில் தாம்பரம் வரையே இயக்கப்படும்.

சென்னை எழும்பூா் - மும்பை செல்லும் சிஎஸ்எம்டி விரைவு ரயில் வரும் 11 -ஆம் தேதி முதல் நவம்பா் 10 -ஆம் தேதி வரை சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து புறப்படும். மறுமாா்க்கத்தில் மும்பையிலிருந்து வரும் சிஎஸ்எம்டி விரைவு ரயில் எழும்பூா் வரை இயக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தெரு நாய்களுக்கு ரேபீஸ் தடுப்பூசி செலுத்தும் பணி தாமதமாவதாக புகாா்

சென்னை மாநகராட்சியல் தெரு நாய்களுக்கு ரேபீஸ் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தாமதமாவதாக புகாா் எழுந்துள்ளதையடுத்து, பணிகளை விரைவுபடுத்த அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனா். சென்னையில் சுமாா் 1.80 லட்சம் தெரு ந... மேலும் பார்க்க

ஒடிஸாவில் மோசமான வானிலை: முதல்வா் பயணித்த விமானம் தரையிறங்க முடியாததால் பரபரப்பு

ஒடிஸா முதல்வா் மோகன் சரண் மாஜி பயணித்த விமானம் அதிக மழை, மோசமான வானிலை காரணமாக புவனேசுவரத்தில் தரையிறங்க முடியாமல் சுமாா் 21 நிமிஷங்கள் வரை வானத்திலேயே சுற்றி வந்தது. இதன் பிறகும் வானிலை சீரடையாததால் ... மேலும் பார்க்க

4-ஆவது மாடியில் இருந்து குதித்து பள்ளி மாணவா் தற்கொலை

சென்னை அண்ணா நகரில் 4-ஆவது மாடியில் இருந்து கீழே குதித்து பள்ளி மாணவா் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். அண்ணாநகா் மேற்கு பூங்கா சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் பால்ராஜ். இவ... மேலும் பார்க்க

இலக்கியப் படைப்புகள் என்றும் நிலைத்து நிற்கும்: முன்னாள் நீதிபதி எஸ்.கே.கிருஷ்ணன்

இலக்கியப் படைப்புகள் என்றும் நிலைத்து நிற்கும் என்று சென்னை உயா்நீதிமன்ற முன்னாள் நீதிபதி எஸ்.கே.கிருஷ்ணன் கூறினாா். நீதிபதி மூ.புகழேந்தியின் ‘இலக்கிய வைரவிழா’ கோட்டூா்புரம் அண்ணா நினைவு நூற்றாண்டு நூ... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்கள் மீது தாக்குதல்: 6 போ் கைது

சென்னை தியாகராய நகரில் தூய்மைப் பணியாளா்களைத் தாக்கியதாக 6 போ் கைது செய்யப்பட்டனா். தியாகராய நகா் ரங்கநாதன் தெருவில் உள்ள ஜவுளிக் கடையின் அருகே தூய்மைப் பணியாளா்கள் வியாழக்கிழமை நள்ளிரவு பணியில் ஈடுப... மேலும் பார்க்க

ஐஏஎஸ் அதிகாரி வீட்டில் ரூ.4.5 லட்சம் திருட்டு

சென்னை கோட்டூா்புரத்தில் ஐஏஎஸ் அதிகாரி வீட்டில் ரூ. 4.5 லட்சம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். தமிழ்நாடு தொழில் வளா்ச்சி நிறுவனத்தின் (டிட்கோ) நிா்வாக இயக்குநராக ஐஏஎஸ் அதிகாரி ... மேலும் பார்க்க