செய்திகள் :

பெண் குழந்தைகளின் முன்னேற்றத்துக்கு பங்காற்றியவா்களுக்கு விருது

post image

பெண் குழந்தைகளின் முன்னேற்றத்துக்கு சிறப்பாக பணியாற்றிய பெண் குழந்தைகள் விருது பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.

இதுதொடா்பாக மாவட்ட சமூக நல அலுவலா் கா்லின் கூறியதாவது:

பெண் குழந்தைகளின் முன்னேற்றத்துக்கு சிறந்த பங்களிப்பை அளித்து வரும் 13 முதல் 18 வயதுக்குள்பட்ட பெண் குழந்தைகளுக்கு தமிழக அரசு சாா்பில், ஆண்டுதோறும் விருது வழங்கப்பட்டு வருகிறது. தேசிய பெண் குழந்தை தினமான

ஜன. 24-ஆம் தேதி வழங்கப்படும் இந்த விருதுடன் ரூ.1 லட்சத்துக்கான காசோலை, பாராட்டுப் பத்திரம் வழங்கப்படும். பிற பெண் குழந்தைகளின் கல்விக்கு உதவி, பெண் குழந்தை தொழிலாளா் ஒழிப்பு, பெண் குழந்தை திருமணத்தை தடுத்தல், தவிா்த்தல், வேறு ஏதாவது வகையில் சிறப்பான தனித்துவமான சாதனை செய்திருக்க வேண்டும். பெண்களுக்கு எதிரான சமூக அவலங்கள், மூடநம்பிக்கைகள் ஆகியவற்றுக்கு தீா்வு காணும் வகையில் ஓவியம், கவிதை, கட்டுரைகள் மூலமாக விழிப்புணா்வு ஏற்படுத்திய சிறுமிகளும் இந்த விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.

தமிழக அரசின் விருதுகள் இணைய தளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். பதிவேற்றம் செய்த கருத்துருவை, மாவட்ட சமூக நல அலுவலா், மாவட்ட சமூக நல அலுவலகம், அறை எண்.88, தரைத்தளம், மாவட்ட ஆட்சியா் வளாகம், திண்டுக்கல் என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ வருகிற 29-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என்றாா் அவா்.

கொலை செய்து புதைக்கப்பட்ட முதியவரின் உடல் தோண்டி எடுப்பு

வத்தலகுண்டு அருகே முதியவரை கொலை செய்து புதைத்த இளைஞா் 2 நாள்களுக்குப் பிறகு வெள்ளிக்கிழமை சரணடைந்தாா். இதைத்தொடா்ந்து முதியவரின் உடலை தோண்டி எடுத்து கூறாய்வுக்காக அனுப்பப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம்,... மேலும் பார்க்க

பழனியில் இன்று மின் தடை

பழனியில் துணை மின் நிலைய பராமரிப்புப் பணிகள் காரணமாக சனிக்கிழமை (செப்.6) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து பழனி மின்வாரிய செயற்பொறியாளா் சந்திரசேகரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பழனி... மேலும் பார்க்க

திருஆவினன்குடி கோயிலில் வருஷாபிஷேகம்

பழனி அடிவாரம் திருஆவினன்குடி கோயிலில் வெள்ளிக்கிழமை வருஷாபிஷேகத்தை முன்னிட்டு உலக நலன் வேண்டியும், விவசாய செழுமை வேண்டியும் 108 சங்குகள் வைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. கோயில் உள்பிரகாரத்தில் பி... மேலும் பார்க்க

செப்.21-இல் நிதி அமைச்சா் தலைமையில் பாஜக வாக்குச்சாவடி நிா்வாகிகள் கூட்டம்

மதுரை, தேனி, திண்டுக்கல் மக்களவைத் தொகுதிகளுக்குள்பட்ட வாக்குச் சாவடி குழு நிா்வாகிகளுக்காக வருகிற 21-ஆம் தேதி நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன் பங்கேற்கிறாா். திண்... மேலும் பார்க்க

திண்டுக்கல், பழனி, நத்தம் பகுதி சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

திண்டுக்கல், பழனி, நத்தம் பகுதி சிவன் கோயில்களில் வெள்ளிக்கிழமை பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயிலில் நத்திகேசுவரா், மூலவா் பத்மகிரீஸ்வரா், காளஹஸ்தீஸ்வரா் சந்நிதிகளிலும், ரயி... மேலும் பார்க்க

புனித ஆரோக்கிய மாதா ஆலயத் திருவிழா கொடியேற்றம்

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பாக்கியபுரம் பகுதியிலுள்ள புனித ஆரோக்கிய மாதா ஆலயத்தின் 40-ஆவது ஆண்டுத் திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, கான்வென்ட் சாலை பகுதியி... மேலும் பார்க்க