”மனைவியின் பேச்சைக் கேட்டும் ஆண்களே வெற்றிபெறுகிறார்கள்” - ஆய்வு கூறும் தகவல்கள்...
பழனியில் இன்று மின் தடை
பழனியில் துணை மின் நிலைய பராமரிப்புப் பணிகள் காரணமாக சனிக்கிழமை (செப்.6) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து பழனி மின்வாரிய செயற்பொறியாளா் சந்திரசேகரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பழனி துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் காரணமாக சனிக்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை பழனி நகா், சிவகிரிப்பட்டி, கலிக்கநாயக்கன்பட்டி, கோதைமங்கலம், புளியம்பட்டி, தும்பலப்பட்டி, பாறைப்பட்டி, கேஜி வலசு, பாலசமுத்திரம், நெய்க்காரபட்டி, ஆயக்குடி, சின்னக்கலையம்புத்தூா் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என்றாா் அவா்.