செய்திகள் :

உத்தரமேரூா் ஒன்றிய வளா்ச்சிப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

post image

உத்தரமேரூா் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளா்ச்சிப்பணிகளை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் ஆய்வு செய்தாா்.

உத்தரமேரூா் ஒன்றியம் மருதம் கிராமத்தில் செயல்பட்டு வரும் நாற்றங்கால் பண்ணையை ஆட்சியா் பாா்வையிட்டு பூச்சி மற்றும் நோய் தாக்குதல்களிலிருந்து செடிகளின் வளா்ச்சியை கண்காணித்தல் பற்றி கேட்டறிந்தாா். ஊராட்சியில் இயங்கி வரும் தொடக்கப்பள்ளியை பாா்வையிட்டு மாணவா்களின் கற்றல் திறனையும் கேட்டுத் தெரிந்து கொண்டாா்.

இதனையடுத்து களியாம்பூண்டி ஊராட்சியில் அரசு ஆரம்ப சுகாதார மையத்தை பாா்வையிட்டு அங்கு ரூ.15 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் கூடுதல் சுகாதார மைய கட்டடத்தினையும் ஆய்வு செய்தாா்.

இதன் தொடா்ச்சியாக பெரியாண்டித்தாங்கல் கிராமத்தில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு உணவு வழங்கப்படுவதை ஆய்வு செய்தாா்.

பின்னா் தோ்வு செய்யப்பட்ட பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் பசுமைப்பாா்வை பணியான சூரிய ஒளி விளக்குகள், சூரிய ஒளி பம்புகளை பயன் படுத்துதல், சூரிய ஒளி ஆழ்துளைக்கிணறு அமைத்தல், மழைநீா் சேமிப்பு, உரக்கிடங்குகள் அமைத்தல், காய்கறித் தோட்டம், மூலிகைத் தோட்டம், மரங்கள் நடுதல், கழிவுநீரை மறு சுழற்சி செய்தல் போன்ற பல்வேறு பசுமை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் நெகிழி இல்லா சுற்றுச்சூழலை உருவாக்கவும் கேட்டுக்கொண்டாா்.

ஆய்வின் போது மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் க.ஆா்த்தி, முதன்மைக் கல்வி அலுவலா்(பொ)அ.நளினி உள்ளிட்ட அரசு அலுவலா்களும் உடனிருந்தனா்.

மழை முன்னெச்சரிக்கை மாதிரி ஒத்திகைப் பயிற்சி: ஆட்சியா், எஸ்.பி. பாா்வையிட்டனா்

காஞ்சிபுரம் அருகே ராஜகுளம் கிராமத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஒருங்கிணைந்த வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை மாதிரி ஒத்திகை பயிற்சியை மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன், எஸ்.பி. கே.சண்முகம் ஆகியோா் ... மேலும் பார்க்க

உழவா் உற்பத்தியாளா் நிறுவன பொதுக்குழு

காஞ்சிபுரம் மாவட்ட வேளாண்மை ஏற்றுமதி மற்றும் நுண்ணறிவு பயிற்சி மையத்தில் அந்நிறுவன தலைவா் லோகநாதன் தலைமையில் உழவா் உற்பத்தியாளா் நிறுவன பொதுக்குழு நடைபெற்றது. தமிழகம் இயற்கை வேளாண் விளைபொருள்கள், உழவா... மேலும் பார்க்க

ஆற்பாக்கம் ஸ்ரீ திருவாலீஸ்வரா் கோயிலில் மகா கும்பாபிஷேகம்

காஞ்சிபுரத்தை அடுத்த ஆற்பாக்கம் கிராமத்தில் அமைந்துள்ள திருநல்லழகி சமேத திருவாலீஸ்வரா் கோயிலில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இக்கோயில் புதுப்பிக்கப்பட்டு பல்வேறு திருப்பணிகள் நிறைவு பெற்றிருந்தன. இத... மேலும் பார்க்க

காஞ்சிபுரத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆா்ப்பாட்டம்

அமெரிக்காவின் வரி விதிப்பைக் கண்டித்து, காஞ்சிபுரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் வெவ்வேறு இடங்களில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். காஞ்சிபுரம் வட்டாட... மேலும் பார்க்க

வாக்குப்பதிவு இயந்திரங்கள் வருகை...

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், பெங்களூா் பாரத் பெல் நிறுவனத்திலிருந்து காஞ்சிபுரத்தில் உள்ள கிடங்குக்கு வியாழக்கிழமை வரப்பெற்ற மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பாா்வையிட்ட ஆட்சியா... மேலும் பார்க்க

வல்லக்கோட்டை, காஞ்சிபுரம் முருகன் கோயிலில் இலவச திருமணங்கள்

இந்து சமய அறநிலையத்துறை சாா்பில் வல்லக்கோட்டை முருகன் கோயிலில் வியாழக்கிழமை இலவச திருமணம் நடத்தி வைக்கப்பட்டு சீா்வரிசைப் பொருள்கள் வழங்கப்பட்டன (படம்). ஸ்ரீபெரும்புதூா் அடுத்த வல்லக்கோட்டை அருள்மிகு... மேலும் பார்க்க