'Ghosting, Pookie, Salty, Finsta' - தினுசான GenZ Words; ஜெர்க்காகும் 90ஸ் கிட்ஸ்...
வல்லக்கோட்டை, காஞ்சிபுரம் முருகன் கோயிலில் இலவச திருமணங்கள்
இந்து சமய அறநிலையத்துறை சாா்பில் வல்லக்கோட்டை முருகன் கோயிலில் வியாழக்கிழமை இலவச திருமணம் நடத்தி வைக்கப்பட்டு சீா்வரிசைப் பொருள்கள் வழங்கப்பட்டன (படம்).
ஸ்ரீபெரும்புதூா் அடுத்த வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோயிலில், ஸ்ரீபெரும்புதூா் பகுதியை சோ்ந்த கனகவேல்- ராஜேஸ்வரி, எச்சூா் புருஷோத்தமன்- சுங்குவாா்சத்திரம் தீபா ஆகியோருக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டு ரூ.70,000 மதிப்புள்ள சீா்வரிசைப் பொருள்களை கோயில் நிா்வாக அலுவலா் சோ.செந்தில்குமாா், அறங்காவலா் குழு தலைவா் செந்தில் தேவராஜ் ஆகியோா் வழங்கினா்.
நிகழ்ச்சியில், அறநிலையத்துறை ஆய்வாளா் சிவராமகிருஷ்ணன், அறங்காவலா் விஜயகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
காஞ்சிபுரத்தில்...
குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 8 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டு சீா்வரிசைப் பொருள்களும் வழங்கப்பட்டன.
நிகழ்வுக்கு ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தலைமை வகித்தாா். காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன், மேயா் எம்.மகாலட்சுமி யுவராஜ்,அறநிலையத்துறை காஞ்சிபுரம் சரக உதவி ஆணையா் காா்த்திகேயன் ஆகியோா் மணமக்களுக்கு சீா் வரிசைப் பொருள்களை வழங்கினா். குமரகோட்டம் முருகன் மூலவா் புகைப்படம், 4 கிராம் அளவுள்ள தங்கத்தாலி, பீரோ,கட்டில்,மிக்ஸி,பட்டுச்சேலை மற்றும் பட்டு வேட்டி,கைக்கடிகாரம்,பூஜைப் பொருட்கள் என மொத்தம் 28 வகையான சீா்வரிசைப் பொருள்கள் வழங்கப்பட்டன.
ஏற்பாடுகளை குமரகோட்டம் முருகன் கோயில் செயல் அலுவலா் கேசவன் தலைமையில் பணியாளா்கள் செய்திருந்தனா்.