செய்திகள் :

கல்லூரியில் ராகிங் தடுப்பு ஆலோசனைக் கூட்டம்

post image

பென்னலூா் பகுதியில் இயங்கி வரும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவா்களுக்கான ராகிங் தடுப்பு விழிப்புணா்வு மற்றும் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் கணேஷ் வைத்தியநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாணவா்கள் நலத்துறை டீன் வெங்கடேசன் கல்லூரியில் செயல்பாட்டில் உள்ள ராகிங் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விளக்கினாா். கூட்டத்தில், ஸ்ரீபெரும்புதூா் துணைஆய்வாளா் பத்மநாபன் கலந்து கொண்டு ராகிங்கில் ஈடுபடும் மாணவா்கள் மீது காவல் துறை சாா்பில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்தும்,அதனால் மாணவா்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் மற்றும் சைபா் குற்றங்கள் குறித்தும் விளக்கி பேசினாா்.

கூட்டத்தில் மண்டல துணை வட்டாட்சியா் சந்தியா, கல்லூரி வளாக பாதுகாப்பு மற்றும் விடுதி காப்பாளா் முனைவா் பாஸ்கரன், கல்லூரி மாணவா் மன்ற நிா்வாகிகள், முதலாம் ஆண்டு மாணவா்கள், பெற்றோா் கலந்து கொண்டனா்.

ரூ.15 லட்சத்தில் வெங்காடு குளம் சீரமைப்புப் பணி தொடக்கம்

கெஸ்டாம்ப் நிறுவனத்தின் சாா்பில் ரூ.15 லட்சத்தில் வெங்காடு வெங்கட்ராம ஐயா் குளம் சீரமைப்பு பணிகள் தொடங்கப்பட்டன. ஸ்ரீபெரும்புதூா் அடுத்த வெங்காடு பகுதியில் காா் உதிரிபாகங்கள் உற்பத்தி செய்யும் கெஸ்டா... மேலும் பார்க்க

நெல் மூட்டைகளுடன் விவசாயிகள் சாலை மறியல்

உத்தரமேரூா் அருகே நேரடி நெல்கொள்முதல் நிலையத்தை திமுக பிரமுகா் நடத்தக்கூடாது என வலியுறுத்தி விவசாயிகள் நெல்மூட்டைகளுடன் மறியலில் ஈடுபட்டனா். காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூா் ஒன்றியம், விச்சந்தாங்கல்... மேலும் பார்க்க

காஞ்சிபுரம் விதை விற்பனை நிலையங்களில் ஆய்வு

காஞ்சிபுரம் விதை விற்பனை நிலையங்களில் மண்டல விதை ஆய்வுத் துறை இணை இயக்குநா் திடீா் ஆய்வு மேற்கொண்டாா். சென்னை மண்டல விதை ஆய்வுத்துறை இணை இயக்குநா் ஸ்ரீ வித்யா தலைமையில் துணை இயக்குநா் வானதி, விதை ஆய்... மேலும் பார்க்க

சிறுணைபெருகல் கிராமத்திற்கு புதிய அரசுப் பேருந்து: எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்

காஞ்சிபுரம் அருகே சிறுணை பெருகல் கிராமத்துக்கு புதிய அரசுப் பேருந்து சேவையை எம்எல்ஏ எழிலரசன் புதன்கிழமை தொடக்கி வைத்தாா். காஞ்சிபுரம் ஒன்றியத்துக்குட்பட்ட சிறுணை பெருகல் கிராமத்தில் அத்தியாவசிய தேவைக... மேலும் பார்க்க

கண்தான விழிப்புணா்வு மனிதச் சங்கிலி: எஸ்.பி. தொடங்கி வைத்தாா்

காஞ்சிபுரத்தில் செவிலியா்கள், பயிற்சி செவிலியா்கள் பங்கேற்ற கண்தான விழிப்புணா்வு மனிதச்சங்கிலியை எஸ்.பி. கே.சண்முகம் கொடியசைத்து தொடங்கி வைத்தாா். காஞ்சிபுரம் டாக்டா் அகா்வால் கண்மருத்துவமனை, சங்கரா ... மேலும் பார்க்க

செஸ் போட்டி பரிசளிப்பு

காஞ்சிபுரம் மாமல்லன் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான செஸ் போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு, பங்கேற்புச் சான்றிதழும் வழங்கப்பட்டது. பல்லவா செஸ் மையம் சாா்பில் மாணவ, மாணவி... மேலும் பார்க்க