செய்திகள் :

Stray Dogs Issue: `தெரு நாய்களை ஒழித்தால் நோய் வரும்...' - சீமான்

post image

இந்தியாவில் தெரு நாய்கள் அதிகரித்து வருவது, தெரு நாய் கடி உயிரிழப்புகள் பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. இந்த விவகாரத்தில் தெரு நாய்களுக்கு ஆதரவானவர்களும், அவற்றை எதிர்க்கும் தரப்பினரும் தங்களது வாதங்களை மாறி மாறி முன்வைத்து வருகின்றனர்.

தெரு நாய் தொல்லைகளை கட்டுப்படுத்துவது தொடர்பாக அரசும் பல்வேறு நடவடிக்கைகளை, திட்டங்களை வகுத்து வருகிறது. இதற்கிடையில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், பொது மக்களும் இந்த விவகாரத்தில் கருத்துத் தெரிவித்து வருவதும் பேசுபொருளாகி வருகிறது.

தெரு நாய் பிரச்னை

இதுகுறித்து நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான், "தெருநாய்கள் குறித்து இதில் கமலஹாசன் அவர்கள் கூறியது போல, கழுதை, சிட்டுக் குருவி, வண்ணத்துப் பூச்சிகள் போன்றவை அழிவின் விளிம்பிற்கு சென்று விட்டது.

நான் எந்த அழிவிற்கும் கவலைப்படவில்லை. நாம் சக மனிதன் சாவையே சகித்துக் கொண்டு தான் செல்கிறோம். நாயை முற்றிலுமாக ஒழிப்பதால், எலிகள் பெருகும், பிளேக் நோய்கள் பெருகக் கூடிய ஆபத்து இருக்கிறது. எதையும் ஒரு சம நிலையில் வைக்க வேண்டும்.

இதற்காக மாநகராட்சி முறையாக நாய்களை பராமரித்து தடுப்பூசி செலுத்த வேண்டும். நீங்கள் அதைத் தெரு நாய் எனக் கூறுகிறீர்கள், ஆனால் அது தான் நம்முடைய வீட்டு நாய். நாம் வெளிநாடுகளில் இருக்கக் கூடிய உயர் தர நாய்களை வீட்டிற்குள் கொண்டு வந்ததால் இவைகள் தெரு நாய்கள் ஆகிவிட்டது.

சீமான்
சீமான்

வெளிநாட்டு நாய்கள் வீட்டிற்குள்; நம் நாய்கள் தெருவில்

நம் நாட்டு நாய்களின் பராமரிப்பு செலவு மிகவும் கம்மி. நாம் உண்டது போக மிச்ச மீதிகளை தான் அதற்கு கொடுப்போம். வீட்டு வாசலில் கிடப்பான் பாதுகாப்பாகவும் இருப்பான்.

என் நாயை தெருவில் போட்டு விட்டு அவனின் நாயை வீட்டுக்குள் கொண்டு வந்து விட்டார்கள். அதனால் என் நாட்டு நாய் தெரு நாய் ஆகி விட்டது. அது உரிய பராமரிப்பு இல்லாததாலேயே இவ்வளவு பெருகி விட்டது. நாய்களை ஒழித்தால் நோய் வரும். நாய்களை முற்றிலுமாக ஒழித்தால் எலிகள் பெருகும். பிளேக் நோய் வரும். எதையும் சமநிலையில் வைக்க வேண்டும்" என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

GST 2.0: மோடியின் 'தீபாவளி கிஃப்ட்' மக்களுக்கும், மாநிலங்களுக்கும் நன்மை தருமா? - விளக்கும் நிபுணர்!

'ஒரே நாடு, ஒரே வரி' - இது தான் ஜி.எஸ்.டியின் சாராம்சம்.முன்பு, மத்திய அரசு வரி, மாநில அரசு வரி, இந்த வரி, அந்த வரி என ஏகப்பட்ட வரிகளைக் கட்ட வேண்டியதாக இருந்தது. 2017-ம் ஆண்டு, ஜூலை 1-ம் தேதி, இந்தியா... மேலும் பார்க்க

GST 2.0: 'இனி கார், பைக் விலை 12-14% குறையலாம்; ஆனால்...' - நிபுணர் விளக்கும் சிக்கல்கள்!

தற்போது அறிமுகப்படுத்தி உள்ள ஜி.எஸ்.டி 2.0-ல் மிக முக்கியமாக கவனிக்கப்படுவதில் ஒன்றில், கார், பைக் விலைகள். ஜி.எஸ்.டி கவுன்சிலின் லேட்டஸ்ட் அறிவிப்பின் படி, 1200 சி.சி மற்றும் 4000 மிமி தாண்டாத பெட்ரோ... மேலும் பார்க்க

Dogs: `நாய்களின் உடலில் மைக்ரோ சிப்' - சென்னை மாநகராட்சியின் திட்டம் என்ன? - முழு விவரம்!

தெரு நாய்கள்:தமிழ்நாட்டின் முக்கிய பிரச்னைகளில் ஒன்றாக தெரு நாய்கள் தொல்லை, ரேபிஸ் நோய் தாக்குதல் போன்றவை கவனம் பெறத் தொடங்கியிருக்கிறது. கடந்த சில மாதங்களாகவே இந்த விவகாரம் விவாதக்களத்துக்குள் இருக்க... மேலும் பார்க்க

GST: "வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவு...!" - மோடி, நிர்மலா சீதாராமனைப் பாராட்டும் இபிஎஸ்

2017 ஜூலை மாதத்தில் இந்தியாவில் ஜி.எஸ்.டி. அறிமுகப்படுத்தப்பட்ட போது, 5%, 12%, 18%, 28% என நான்கு வரி ஸ்லாப்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.இப்போது இந்த ஸ்லாப்கள் 5% மற்றும் 18% என இரண்டு ஸ்லாப்களாக மட்டும்... மேலும் பார்க்க

``இன்பநிதி அரசியலுக்கு வருவது திமுக-வின் உட்கட்சி விவகாரம்!" - சொல்கிறார் ஆர்.எஸ் பாரதி

"தி.மு.க ஆட்சியில் தனியார்மயம் தலைவிரித்தாடுகிறதே!" “அரசியலமைப்பின் வழிநின்று ஆட்சி நடத்த வேண்டிய ஒன்றிய பா.ஜ.க அரசு, அரசியல் எதிரிகளை பழிவாங்கிக் கொண்டிருக்கிறது. தமிழகத்துக்கு தரவேண்டிய நிதியை ஒன்றி... மேலும் பார்க்க

GST 2.0-ல் பாப்கார்ன், கிரீம் பனுக்கு எத்தனை சதவீத வரி? குட் நியூஸ் தான்!

2017-ம் ஆண்டு ஜி.எஸ்.டியை அறிமுகப்படுத்தியதிலிருந்தே, அதைக் குறித்து சர்ச்சைகள் எழுந்துகொண்டே இருந்தது.ஆனால், சமீபத்தில் ஜி.எஸ்.டி வரியில் அதிகம் கவனிக்கப்பட்ட இரண்டு சர்ச்சைகள்:ஒன்று, பாப்கார்ன்.இன்ன... மேலும் பார்க்க