செய்திகள் :

Airplane: விமானங்கள் வெள்ளை நிறத்தில் மட்டும் இருப்பதற்கு என்ன காரணம் தெரியுமா?

post image

பெரும்பாலும் விமானங்கள் வெள்ளை நிறத்தில் இருப்பதை பார்த்திருப்போம். எதற்காக பெரும்பாலான விமானங்கள் வெள்ளை நிறத்தில் இருக்கின்றன என்பது குறித்தும் இதற்கு பின்னால் இருக்கும் அறிவியல் காரணங்களை குறித்தும் இந்த கட்டுரையில் விரிவாக தெரிந்துக்கொள்ளலாம்.

பாதுகாப்பிற்காக வெள்ளை நிறம்

விமானங்களில் வெள்ளை நிற பூசுவதற்கு முக்கிய காரணமே வெள்ளை நிறம் சூரிய ஒளியை பிரதிபலிக்கும் தன்மையை கொண்டது. இதனால் விமானத்தின் மேற்பரப்பில் அதிக வெப்பம் உறிஞ்சப்படாமல் இருக்கிறது.

உயரத்தில் விமானங்கள் பறக்கும் போது சூரிய ஒளி உட்புறத்தில் உறிஞ்சப்படாமல் இருக்கும் வண்ணம் பாதுகாக்கிறது. இதனால் விமானத்தில் உட்புறத்தில் உள்ள மின்னணு உபகரணங்களையும் பயணிகளையும் வெப்பத்திலிருந்து இது பாதுகாக்க உதவுகிறது.

விமானம்
விமானம்

சோதனையை எளிதாக்கும் வெள்ளை நிறம்

விமானம் வெள்ளை நிறத்தில் இருப்பதால் வெளிப்புறத்தில் ஏற்படும் சிறு சேதங்கள், விரிசல்கள் என பல விஷயங்களை எளிதாக கண்டறிய உதவுகிறது. இது விமானத்தின் பாதுகாப்பு மற்றும் சோதனைகளை எளிதாக்குகிறது. வெள்ளை நிறம் நன்றாக புலப்படுகிறது. இதனால் விமானங்கள் தரையில் இருக்கும் போது புலப்படுத்தலை மேம்படுத்துகிறது.

செலவு குறைவு

வெள்ளை நிறப் பூச்சு மற்ற நிறங்களை விட மலிவாகவும் பராமரிப்பு செலவுகள் குறைவானதாகவும் காணப்படுகிறது. வெள்ளை நிறம் நீண்ட காலத்திற்கு நிறத்தை இழக்காமல் இருக்கும். அடிக்கடி அதன் நிறத்தை மாற்ற வேண்டிய அவசியம் இல்லாததால் அதனையே பயன்படுத்த முன்வருகின்றனர் .

இப்படி விமானங்கள் வெள்ளை நிறத்தில் இருப்பதற்கு அழகில் மட்டும் காரணமாக இல்லாமல் அறிவியல், பாதுகாப்பு, பொருளாதார நன்மைகள் என பல்வேறு விஷயங்கள் உள்ளன.

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே...!

Link : https://chat.whatsapp.com/G7U0Xo0F63YA5PC6VgYMBQ

அழகான குழந்தைகளை பார்க்கும் போது கிள்ளிவைக்க தோன்றுகிறதா?- இதற்கு பின்னால் இருக்கும் காரணம் இதுதான்!

அழகான குழந்தைகளை பார்க்கும்போது அல்லது சிறிய நாய்க்குட்டி பூனைக்குட்டி என கியூட்டாக ஏதேனும் ஒரு விஷயத்தை பார்க்கும்போது அவற்றை கிள்ளவோ, இறுக்கி அணைக்கவோ, விளையாட்டாக கடிக்கவோ தோன்றும். இந்த உணர்வினை க... மேலும் பார்க்க

இசையால் சாக்லேட்டின் சுவையை அதிகரிக்க முடியுமா? - புதிய ஆய்வில் கண்டறியப்பட்ட சுவாரஸ்யத் தகவல்!

இசையால் மனதை அமைதிப்படுத்தவும் உணர்ச்சிகளை வெளிப்படுத்தவும் முடியும் என்று பலரும் அறிந்திருப்போம். ஆனால் ஒரு இசை உணவின் சுவையைக் கூட மேம்படுத்தும் என்று கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இசை நிபுணர்கள் இசைய... மேலும் பார்க்க

Snake: இறந்த பிறகும் விஷத்தைக் கக்கும் இந்தியப் பாம்புகள்; புதிய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது என்ன?

இந்தியாவில் காணப்படும் சில கொடிய பாம்பு இனங்கள், குறிப்பாக நாகப்பாம்பு (Cobra) மற்றும் கிரைட் (Krait) போன்ற பாம்புகள் இறந்துபோன பின்பும் கூட பல மணி நேரத்திற்கு விஷம் வெளிப்படுத்தக் கூடியவை எனப் புதிய ... மேலும் பார்க்க

‘டைனோசர்’ என்ற பெயர் எப்படி வந்தது தெரியுமா? ஓர் ஆச்சரியப் பின்னணி

‘டைனோசர்’ என்ற வார்த்தையைக் கேட்டவுடன் பெரிய, செதில்கள் நிறைந்த மிருகங்கள், முன்பு ஒரு காலத்தில் உலவிய காட்சிகள் நம் மனதில் தோன்றும். இந்த பெயர் எங்கிருந்து வந்தது என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்க... மேலும் பார்க்க

China: குழந்தையைப் பெற்றெடுக்கப் போகும் `ரோபோக்கள்' - மனிதனுக்கு கிடைக்கும் பயன் என்ன?

சீன விஞ்ஞானிகள் மனித குழந்தையைப் பெற்றெடுக்கும் ரோபோவை உருவாக்கி வருகின்றனர்.சீனாவில் உள்ள விஞ்ஞானிகள் உலகின் முதல் "கர்ப்ப ரோபோவை” உருவாக்கி வருவதாக தி டெலிகிராஃப் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த தொழில்... மேலும் பார்க்க

ஒட்டக கண்ணீர் பல வகை பாம்பு விஷங்களை எதிர்க்கும் திறன் கொண்டதா? - ஆராய்ச்சி சொல்வது இதுதான்!

ஒட்டக கண்ணீரில் உள்ள ஆன்டிபாடிகள் பல பாம்பு இனங்களின் விஷங்களை எதிர்க்கும் திறன் கொண்டவை என தகவல்கள் வெளியாகின. துபாயில் உள்ள ஒரு கால்நடை ஆய்வகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் முடிவில் இவ்வாறு வந்ததா... மேலும் பார்க்க