செய்திகள் :

Snake: இறந்த பிறகும் விஷத்தைக் கக்கும் இந்தியப் பாம்புகள்; புதிய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது என்ன?

post image

இந்தியாவில் காணப்படும் சில கொடிய பாம்பு இனங்கள், குறிப்பாக நாகப்பாம்பு (Cobra) மற்றும் கிரைட் (Krait) போன்ற பாம்புகள் இறந்துபோன பின்பும் கூட பல மணி நேரத்திற்கு விஷம் வெளிப்படுத்தக் கூடியவை எனப் புதிய ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு ராட்டில் ஸ்நேக், ஸ்பிட்டிங் கோப்ரா போன்ற சில பாம்புகளுக்கு மட்டுமே இத்திறன் இருப்பதாக நம்பப்பட்டிருந்தது.

ஆனால் அஸ்ஸாமில் நடைபெற்ற ஆராய்ச்சியில், இந்திய மோனாகிள் கோப்ரா (Naja kaouthia) மற்றும் பிளாக் கிரைட் (Bungarus lividus) இனங்களுக்கும் இத்திறன் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

பாம்பு
பாம்பு

இந்த ஆய்வு குறித்து Frontiers in Tropical Disease என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த ஆய்வை அஸ்ஸாமின் நாம்ருப் கல்லூரியைச் சேர்ந்த சுச்மிதா தாக்கூர் தலைமையிலான குழு மேற்கொண்டது. அஸ்ஸாமில் உள்ள கிராமப்புற சுகாதார மையங்களில் பதிவான மூன்று சம்பவங்கள் இதற்கான ஆதாரமாகக் கூறப்படுகிறது.

அந்த மூன்று சம்பவங்களிலும் பாம்புகள் இறந்த பின்பும் விஷத்தை வெளியிட்டுள்ளது. இதனால் பாதிப்பும் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து ஆராய்ச்சியாளர்கள் விளக்கும்போது, ”பாம்பின் விஷக் குழாய் (venom gland) பற்களுடன் இணைந்திருப்பதால், பாம்பு இறந்த பின்பும் அந்தப் பகுதியில் அழுத்தம் கொடுக்கப்பட்டால் விஷம் வெளியேறும்.

இதுவே இறந்த பாம்புகளும் விஷம் செலுத்தக்கூடிய காரணமாக உள்ளது. பாம்பு கொல்லப்பட்ட பிறகும் அதைக் கையால் தொடக்கூடாது என்று எச்சரித்துள்ளனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

‘டைனோசர்’ என்ற பெயர் எப்படி வந்தது தெரியுமா? ஓர் ஆச்சரியப் பின்னணி

‘டைனோசர்’ என்ற வார்த்தையைக் கேட்டவுடன் பெரிய, செதில்கள் நிறைந்த மிருகங்கள், முன்பு ஒரு காலத்தில் உலவிய காட்சிகள் நம் மனதில் தோன்றும். இந்த பெயர் எங்கிருந்து வந்தது என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்க... மேலும் பார்க்க

China: குழந்தையைப் பெற்றெடுக்கப் போகும் `ரோபோக்கள்' - மனிதனுக்கு கிடைக்கும் பயன் என்ன?

சீன விஞ்ஞானிகள் மனித குழந்தையைப் பெற்றெடுக்கும் ரோபோவை உருவாக்கி வருகின்றனர்.சீனாவில் உள்ள விஞ்ஞானிகள் உலகின் முதல் "கர்ப்ப ரோபோவை” உருவாக்கி வருவதாக தி டெலிகிராஃப் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த தொழில்... மேலும் பார்க்க

ஒட்டக கண்ணீர் பல வகை பாம்பு விஷங்களை எதிர்க்கும் திறன் கொண்டதா? - ஆராய்ச்சி சொல்வது இதுதான்!

ஒட்டக கண்ணீரில் உள்ள ஆன்டிபாடிகள் பல பாம்பு இனங்களின் விஷங்களை எதிர்க்கும் திறன் கொண்டவை என தகவல்கள் வெளியாகின. துபாயில் உள்ள ஒரு கால்நடை ஆய்வகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் முடிவில் இவ்வாறு வந்ததா... மேலும் பார்க்க

நிலவில் அணுமின் நிலையம்: ``சந்திரனை உரிமை கோருவோம்'' - அமெரிக்காவின் திட்டம் என்ன?

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் அரசாங்கம் நிலவில் அணு மின் நிலையத்தை அமைக்கும் திட்டத்தை விரைவாக நிகழ்த்த உத்தரவிட்டுள்ளது. நாசாவின் தற்காலிக நிர்வாகி சீன் டஃபி கூறியதன்படி, 2030-க்குள் இந்த திட்டத்தைப் ச... மேலும் பார்க்க

மர்மமான முறையில் இறக்கும் கடல் நட்சத்திரங்கள்; காரணத்தைக் கண்டறிந்த ஆராய்ச்சியாளர்!

வட அமெரிக்காவின் பசிபிக் கடற்கரையில் கடந்த பத்தாண்டுகளாக ஏராளமான கடல் நட்சத்திரங்கள் (சீ ஸ்டார்ஸ்) மர்மமான முறையில் இறந்ததற்கான காரணம் கண்டறியப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.கடல் நட்சத்திரங... மேலும் பார்க்க

2025: விண்வெளியில் கண்டறியப்பட்ட 3I/ATLAS; பாபா வங்கா கணிப்புடன் இதை தொடர்புபடுத்துவது ஏன்?

பல ஆண்டுகளுக்கு முன்பு மறைந்த பல்கேரிய கணிப்பாளர் பாபா வங்காவின் கணிப்புகள் இன்றும் சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. 2025-ஆம் ஆண்டிற்கான அவரது கணிப்பு, தற்போது உலகளவில் பேசுபொருளாகியுள்ள... மேலும் பார்க்க