செய்திகள் :

தவெக மாநாட்டில் தொண்டர்கள் மயக்கம்!

post image

தவெக மாநாட்டுத் திடலில் கூட்ட நெரிசல் மற்றும் வெயில் காரணமாக 10-க்கும் மேற்பட்ட தொண்டர்கள் மயக்கமடைந்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநாடு மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பாரப்பத்தி கிராமத்தில் இன்று (ஆக.21) மாலை பிரமாண்டமாக நடைபெற உள்ளது.

இதற்காக 506 ஏக்கரில் மாநாட்டு திடல், பார்க்கிங் இடங்கள், 1.5 லட்சம் பேர் அமர இருக்கைகள், தொண்டர்கள் அமரும் இடங்களிலேயே சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

முன்னெச்சரிக்கை கருதி அவசர மருத்துவ உதவிக்காக மாநாடு நடைபெறும் இடத்தில் ஆயிரக்கணக்கில் மருத்துவ ஊழியர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் ஆம்புலன்ஸ்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் மதுரை மாநாட்டுத் திடலில் இன்று காலை முதலே தொண்டர்கள் குவிந்து வருகின்றனர். பல்லாயிரக்கணக்கில் தொண்டர்களால் கூடியுள்ளதால் மாநாட்டுத் திடல் அருகே கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும் வெயிலும் அங்கு அதிகமாக இருப்பதால் 10-க்கும் மேற்பட்ட தொண்டர்கள் மயக்கமடைந்தனர்.

அவர்கள் ஆம்புலன்ஸ் மூலமாக மாநாட்டில் அமைக்கப்பட்ட மருத்துவ முகாமில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அவசர மருத்துவ முதலுதவி சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

மாநாட்டு திடலில் 50-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள், 3500-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், செவிலியர்கள் பணியில் ஈடுபட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Volunteers faint due to crowding at tvk 2nd conference meeting at madurai

இதையும் படிக்க |இந்தியாவுக்கு 5% தள்ளுபடியில் கச்சா எண்ணெய் விநியோகம் தொடரும்: ரஷியா அறிவிப்பு

தவெக மாநாடு! இரும்புக் கம்பிகளுக்கு கிரீஸ் தடவுவதை ஆச்சரியத்துடன் பார்க்கும் தொண்டர்கள்

தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு, மதுரை பாரப்பத்தியில் இன்று நடைபெறவிருக்கும் நிலையில், மாநாட்டுத் திடலில் இருக்கும் இரும்புக் கம்பிகளுக்கு க்ரீஸ் தடவப்பட்டு வருவதை தொண்டர்கள் ஆச்சரியமா... மேலும் பார்க்க

இபிஎஸ்ஸுக்கு எதிரான வழக்கின் விசாரணைக்குத் தடையில்லை! - உயர்நீதிமன்றம்

அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து உரிமையியல் நீதிமன்றத்தில் சூரியமூர்த்தி என்பவர் தாக்கல் செய்த வழக்கின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்த உத்தரவை சென்னை உயர்நீதி... மேலும் பார்க்க

தங்கம் விலை அதிரடியாக உயர்வு! எவ்வளவு?

சென்னையில் தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ. 400 உயர்ந்துள்ளது. தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது. எனினும் கடந்த ஒரு வாரமாக தங்கம் விலை குறைந்து வந்த நிலையில் இன்று உயர்ந்துள்ளது. ஒரு ... மேலும் பார்க்க

தவெக மாநாடு: பணியில் 100-க்கும் மேற்பட்ட செவிலியர்கள்!

மதுரை தவெக மாநாட்டுத் திடலில் அவசர மருத்துவ உதவிக்காக 100-க்கும் மேற்பட்ட மருத்துவ செவிலியர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநாடு மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்ச... மேலும் பார்க்க

வெற்றி பெறுமா விஜயின் வியூகம்...?

பொதுவாக இன்றைய ஜனநாயகத்தில் இரண்டு கட்சிகள் ஆட்சிமுறை வலுவாக உள்ள நாடுகள் பல. மூன்றாவதாக ஒரு கட்சி, இரண்டில் ஒன்றை முறியடித்து வெற்றிபெறுவது முயல்கொம்புதான். மூன்றாவதாக கட்சி தொடங்குவோா் ஏற்கெனவே உள்... மேலும் பார்க்க

புதுமண தம்பதிகளுக்கு இலவச பட்டுவேட்டி, பட்டுச் சேலை: இபிஎஸ் வாக்குறுதி!

எதிர்வரும் 2026 பேரவைத்தேர்தலில் அதிமுக ஆட்சிக்கு வந்தால், புதுமண தம்பதிகளுக்கு இலவச பட்டுவேட்டி, பட்டுச் சேலை வழங்கப்படும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளார்.மக்களை க... மேலும் பார்க்க