செய்திகள் :

விருதுநகர்: நோய், வறுமை, மன உளைச்சல்.. பேச முடியாத மகள்களுடன் ரயில் முன் விழுந்து உயிரை மாய்த்த தாய்

post image

விருதுநகர் அருகே பட்டம்புதுாரில் ரயில்வே தண்டவாளத்தில் உடல்கள் கிடப்பதாக விருதுநகர் ரயில்வே போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. இதை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த ரயில்வே போலீசார் விசாரித்ததில் இறந்தது தாய் மற்றும் இரு மகள்கள் என்பது தெரியவந்தது.

பின்னர் இவர்கள் பட்டம்புதுார் காலனியைச் சேர்ந்த ராஜவள்ளி (60) எனத் தெரியவந்துள்ளது. இவருக்குச் சிறுநீரக குறைபாடு இருந்துள்ளது. கணவர் தர்மர் கூலித் தொழிலாளியாக உள்ளார். இவர்களுக்கு மாரியம்மாள் (30), முத்துமாரி (27), முத்துபேச்சி (25) என மூன்று மகள்கள் உள்ளனர்.

இதில் மாரியம்மாள், முத்துப்பேச்சி இருவரும் வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளிகள். சிறுநீரக நோய்ப் பாதிப்பு, வறுமை, மன உளைச்சல் உள்ளிட்ட காரணங்களால் நேற்று இரவு திருவனந்தபுரத்திலிருந்து திருச்சி செல்லும் ரயில் முன்பு பாய்ந்து தாய் ராஜவள்ளி, மகள்கள் மாரியம்மாள், முத்துபேச்சி என மூவரும் தற்கொலை செய்து கொண்டனர் என்பது விசாரணையில் தெரியவந்தது.

விருதுநகர் ரயில் நிலையம்

ரயில்வே போலீசார் அவர்களின் உடலின் பாகங்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வறுமை காரணமாக மகள்களுக்குத் திருமணம் செய்து கொடுக்க முடியாமல் திணறி வந்ததால் இந்த முடிவுக்கு அவர்கள் வந்திருக்கலாம் எனப் போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. தூத்துக்குடி ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

விருதுநகர்: தவெக மாநாட்டுக்கு பேனர் வைத்த கல்லூரி மாணவர்; மின்சாரம் தாக்கி உயிரிழந்த சோகம்

தமிழக வெற்றிக்கழகத்தின் இரண்டாவது மாநாடு நாளை மதுரையில் நடைபெற உள்ளது. இதற்காக தமிழகம் முழுவதும் தமிழக வெற்றிக்கழக தொண்டர்கள் மாநாட்டை வரவேற்கும் விதமாக பேனர்கள் போஸ்டர்கள் வைத்து வருகின்றனர். இந்த நி... மேலும் பார்க்க

மும்பை: நடுவழியில் நின்ற மோனோ ரயில்; அந்தரத்தில் உயிருக்கு போராடிய பயணிகள்; கிரேன் மூலம் மீட்பு

மும்பை மோனோ ரயில்மும்பையில் செம்பூரில் இருந்து ஜேக்கப் சர்க்கிள் வரை மோனோ ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்தியாவிலேயே இந்த ஒரு மோனோ ரயில் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. இந்த மோனோ ரயில் ஒரு சிமெண்ட் பீம... மேலும் பார்க்க

விருதுநகர்: எரிந்து சாம்பலான வைக்கோல் கட்டுகள்; 4 மணி நேரத்திற்கு மேல் போராடிய வீரர்கள் |Photo Album

மட மடவென்று எரிந்த வைக்கோல்மட மடவென்று எரிந்த வைக்கோல்மட மடவென்று எரிந்த வைக்கோல்மட மடவென்று எரிந்த வைக்கோல்மட மடவென்று எரிந்த வைக்கோல்மட மடவென்று எரிந்த வைக்கோல்மட மடவென்று எரிந்த வைக்கோல்மட மடவென்று... மேலும் பார்க்க

விருதுநகர்: பற்றி எரிந்த வைக்கோல் கட்டுகள்; 4 மணிநேரப் போராட்டம்; ரூ.14 லட்சம் நஷ்டம்; என்ன நடந்தது?

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே கூமாபட்டி ராமசாமியாபுரத்தைச் சேர்ந்தவர் சாமிக்காளை. இவர் வைக்கோல் வியாபாரம் செய்து வருகிறார். இவர் அதே பகுதியில் உள்ள காலி இடத்தில் வைக்கோல் கட்டுகளை விற்பனைக... மேலும் பார்க்க

ராமநாதபுரம்: ரயில்கேட்டை மூட மறந்த கேட்கீப்பர்; இண்டர்லாக் சிஸ்டத்தால் விபத்திலிருந்து தப்பிய ரயில்!

ரயில் கேட்டை மூட சென்ற கோகோ பைலட்ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று காலை மதுரைக்கு பயணிகள் ரயில் புறப்பட்டது. அந்த ரயில் வாலாந்தரவை ரயில் நிலையத்தை கடந்து வழுதூர் - பெரியபட்டிணம் செல்லும் வழியில் அமைந்துள்... மேலும் பார்க்க

தஞ்சாவூர்: டூவீலர் மீது கார் மோதி விபத்து - தந்தை, மகள் உட்பட 3 பேர் பலியான சோகம்!

தஞ்சாவூர் அருகே உள்ள வல்லம் கொள்ளுப்பேட்டை தெருவை சேர்ந்தவர் அறிவழகன்(37). இவரது மனைவி உஷா(35). இவர்களின் மகள்கள் ரூபா(10), பாவ்யாஸ்ரீ(9). அறிவழகனின் சகோதரி மகள் தேஜாஸ்ரீ(4). அறிவழகன் தன் மனைவி உட்பட ... மேலும் பார்க்க