தவெக மாநாடு: 100 டிகிரி வெயில்; டிரோன்கள் மூலம் குடிநீர் விநியோகம்!
தில்லி பயங்கரம்! ஒரே குடும்பத்தில் 3 பேர் கொலை! இளைய மகனைத் தேடும் போலீஸ்
தெற்கு தில்லியின் சத்பாரி கார்க் கிராமத்தில், ஒரே குடும்பத்தில் தாய் - தந்தை மகன் கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.
கொலை செய்யப்பட்ட மூன்று பேரும் கழுத்தறுத்தும், கல்லால் தலையை நசுக்கியும் கொல்லப்பட்டிருக்கிறார்கள். வீடு முழுவதும் ரத்தமாகக் காணப்படுவதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.
கொலை செய்யப்பட்டவர்கள் பிரேம் சிங், அவரது மனைவி ரஜனி, மூத்த மகன் ரித்திக் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது. அவர்களது இளைய மகன் சித்தார்த் (22) காணவில்லை என்றும், அவர்தான் குற்றத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.