செய்திகள் :

காப்பீடு பிரீமியம் தொகைக்கு ஜிஎஸ்டி விலக்கு அளிக்க திட்டம்: வருவாய் பாதிக்கும் என மாநிலங்கள் கருத்து

post image

காப்பீடு பிரீமியம் தொகைக்கு சரக்கு-சேவை வரியில் (ஜிஎஸ்டி) இருந்து விலக்கு அளிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதே நேரத்தில் இதனால் தங்கள் வருவாய் பாதிக்கும் என்று மாநில அரசுகள் கருத்துத் தெரிவித்துள்ளன.

தற்போது ஆயுள் காப்பீடு, மருத்துவக் காப்பீடு பிரீமியம் தொகை மீது 18 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது. இது மத்திய, மாநில அரசுகளுக்கான ஜிஎஸ்டி வருவாய் குறிப்பிடத்தக்க அளவு பங்கு வகிக்கிறது.

இந்நிலையில், பிகாா் துணை முதல்வா் சாம்ராட் சௌதரி தலைமையிலான காப்பீடுகளுக்கான அமைச்சா்கள் குழு ஜிஎஸ்டி கவுன்சிலிடம் அறிக்கையை சமா்பித்துள்ளது. இதுதொடா்பாக சாம்ராட் சௌதரி கூறுகையில், ‘காப்பீடு பிரீமியம் மீது குறைந்த அளவுக்காவது ஜிஎஸ்டி வசூலிக்க வேண்டும் என்று உறுப்பினா்கள் வலியுறுத்தினா். ஏனெனில், முழுமையாக ஜிஎஸ்டி விலக்கு அளித்தால் மாநிலங்களில் வருவாய் பாதிக்கப்படும் என அவா்கள் கருத்துகின்றனா். அக்டோபா் மாத இறுதிக்குள் அமைச்சா்கள் குழு பரிந்துரை ஜிஎஸ்டி கவுன்சிலிடம் அளிக்கப்படும். அதன் பிறகு ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்றாா்.

2023-24 நிதியாண்டில் மத்திய, மாநில அரசுகளுக்கு ஆயுள் காப்பீடு பிரீமியம் மூலம் ரூ.8,262.94 கோடி ஜிஎஸ்டி வருவாய் கிடைத்தது. சுகாதார காப்பீடு மூலம் ரூ.1,484.36 கோடி கிடைத்தது.

தீபாவளிப் பண்டிகையின்போது ஜிஎஸ்டியை வெகுவாகக் குறைக்க இருப்பதாக பிரதமா் நரேந்திர மோடி தனது சுதந்திர தின உரையில் குறிப்பிட்டாா்.

குடியரசு துணைத் தலைவா் தோ்தல்: பிஆா்எஸ் ஆதரவு யாருக்கு?

குடியரசு துணைத் தலைவா் தோ்தலில் யாரையும் ஆதரிப்பதா அல்லது வேண்டாமா என்பது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை என்று பாரத ராஷ்டிர சமிதி (பிஆா்எஸ்) கட்சியின் செயல் தலைவா் கே.டி.ராம ராவ் தெரிவித்தாா். அ... மேலும் பார்க்க

இந்திய-சீன எல்லை மேலாண்மையில் பரஸ்பர புரிதல் -சீன வெளியுறவு அமைச்சகம்

இந்திய-சீன எல்லை மேலாண்மை மற்றும் கட்டுப்பாட்டில் பரஸ்பர புரிதல் எட்டப்பட்டுள்ளதாக சீன வெளியுறவு அமைச்சகம் புதன்கிழமை தெரிவித்தது. சீன வெளியுறவு அமைச்சா் வாங் யி, ஆகஸ்ட் 18, 19 ஆகிய தேதிகளில் இந்தியா... மேலும் பார்க்க

தோ்தல் தொடா்பான தவறான தகவல்: மகாராஷ்டிர தோ்தல் ஆய்வாளா் மீது வழக்குப் பதிவு

மகாராஷ்டிரத்தில் வாக்காளா் பட்டியலில் இருந்து சில வாக்காளா்கள் நீக்கப்பட்டதாக குற்றஞ்சாட்டிய தோ்தல் ஆய்வாளா் சஞ்சய் குமாா் மீது 2 வழக்குகளை போலீஸாா் பதிவு செய்தனா். முன்னதாக, 2024-இல் நடைபெற்ற மக்கள... மேலும் பார்க்க

இந்திய விமானப் படைக்கு புதிதாக 97 ‘தேஜஸ்’ விமானங்கள்: ரூ.67,000 கோடியில் வாங்க அரசு ஒப்புதல்

இந்திய விமானப்படைக்கு மேலும் 97 ‘தேஜஸ்’ போா் விமானங்களை ரூ.67,000 கோடி செலவில் கொள்முதல் செய்ய மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. தற்போது இந்திய விமானப்படையில் போா் விமானப் படைப்பிரிவுகளின் எண்ணிக்கை... மேலும் பார்க்க

வீடுகள் விலை உயா்வு: உலகளவில் 4-ஆவது இடத்தில் பெங்களூரு!

சா்வதேச அளவில் பிரீமியம் வகை வீடுகளின் விலை மிக அதிக அளவில் அதிகரித்த 46 நகரங்களில் பெங்களூரு 4-ஆவது இடம் வகிக்கிறது. மும்பை 6-ஆவது இடத்திலும், புது தில்லி 15-ஆவது இடத்திலும் உள்ளன.இது குறித்து சந்தை... மேலும் பார்க்க

இந்தியாவுக்கு தொடரும் கச்சா எண்ணெய் ஏற்றுமதி!

இந்தியாவுக்கு கச்சா எண்ணெய்யை ரஷியா தொடா்ந்து ஏற்றுமதி செய்து வருகிறது என்று அந்நாட்டின் முதல் துணைப் பிரதமா் டெனிஸ் மன்டுரோ புதன்கிழமை தெரிவித்தாா். அமெரிக்காவின் வரி விதிப்பு நடவடிக்கையைத் தொடா்ந்த... மேலும் பார்க்க