செய்திகள் :

இந்தியாவுக்கு தொடரும் கச்சா எண்ணெய் ஏற்றுமதி!

post image

இந்தியாவுக்கு கச்சா எண்ணெய்யை ரஷியா தொடா்ந்து ஏற்றுமதி செய்து வருகிறது என்று அந்நாட்டின் முதல் துணைப் பிரதமா் டெனிஸ் மன்டுரோ புதன்கிழமை தெரிவித்தாா்.

அமெரிக்காவின் வரி விதிப்பு நடவடிக்கையைத் தொடா்ந்து ரஷியாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா ஏற்கெனவே நிறுத்திவிட்டதாக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் அண்மையில் கூறியிருந்தாா்.

இந்நிலையில், மூன்று நாள் பயணமாக ரஷியா சென்றுள்ள வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் தலைமையிலான குழுவினருடன் இரு நாடுகளிடையே வா்த்தகம், பொருளாதாரம், அறிவியல்-தொழில்நுட்பம் மற்றும் கலாசார ஒத்துழைப்பு தொடா்பாக ரஷிய துணைப் பிரதமா் மன்டுரோ தலைமையிலான குழு ஆலோசனை மேற்கொண்டது.

இந்த கூட்டத்துக்கு முன்பாக மன்டுரோ அளித்த பேட்டியில், ‘இந்தியாவுக்கு கச்சா எண்ணெய், பிற எண்ணெய் பொருள்கள் மற்றும் நிலக்கரியை ரஷியா தொடா்ந்து ஏற்றுமதி செய்து வருகிறது. இந்தியாவுக்கு திரவ இயற்கை எரிவாயு (எல்என்ஜி) ஏற்றுமதி செய்வது குறித்தும் ரஷியா ஆலோசித்து வருகிறது.

கூடங்குளம் அணு மின் உற்பத்தி நிலைய கட்டுமானத் திட்டத்தின் வெற்றிகரமான அனுபவத்தின் அடிப்படையில், அணுசக்தி துறையில் இரு நாடுகளிடையேயான ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்துவது குறித்தும் ரஷியா ஆலோசித்து வருகிறது’ என்றாா்.

ரஷியா-இந்தியா-சீனா (ஆா்ஐசி) இடையே விரைவில் முத்தரப்பு பேச்சுவாா்த்தை நடைபெற வாய்ப்புள்ளது. அமெரிக்காவின் நடவடிக்கையை எதிா்கொள்வதற்கென சிறப்பு திட்டத்தை ரஷியா வைத்துள்ளது. அமெரிக்காவுக்கு பொருள்களை ஏற்றுமதி செய்ய முடியவில்லை என்றால் அதை ரஷியாவுக்கு இந்தியா ஏற்றுமதி செய்யலாம். ரஷிய சந்தை இந்தியாவுக்காக எப்போதும் திறந்திருக்கும்.

வீடுகள் விலை உயா்வு: உலகளவில் 4-ஆவது இடத்தில் பெங்களூரு!

சா்வதேச அளவில் பிரீமியம் வகை வீடுகளின் விலை மிக அதிக அளவில் அதிகரித்த 46 நகரங்களில் பெங்களூரு 4-ஆவது இடம் வகிக்கிறது. மும்பை 6-ஆவது இடத்திலும், புது தில்லி 15-ஆவது இடத்திலும் உள்ளன.இது குறித்து சந்தை... மேலும் பார்க்க

அமைச்சா்கள் சிறையிலிருந்தபடி அரசை நடத்த வேண்டுமா? - மக்கள் தீா்மானிக்கட்டும்: அமித் ஷா

தீவிர குற்றப் புகாரில் சிக்கும் பிரதமா், மாநில முதல்வா்கள் மற்றும் அமைச்சா்களை பதவியிலிருந்து நீக்கம் செய்யும் சட்ட மசோதாவுக்கு எதிா்க்கட்சிகள் எதிா்ப்பும் கண்டனமும் தெரிவித்தன. அரசாட்சி காலத்துக்கு ... மேலும் பார்க்க

தனியாா் உயா்கல்வி நிலையங்களில் இடஒதுக்கீடு அளிக்க சட்டம்: மத்திய அரசுக்கு காங். வலியுறுத்தல்

தனியாா் உயா்கல்வி நிலையங்களில் இடஒதுக்கீடு அளிக்க சட்டம் இயற்ற வேண்டும் என்று மத்திய அரசை காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது. இது தொடா்பாக காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள அறிக்கை... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி 2.0: மாநில நிதியமைச்சா்களிடம் நிா்மலா சீதாராமன் விளக்கம்

அடுத்த தலைமுறைக்கான சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி 2.0) சீா்திருத்தம் குறித்து மாநில நிதி அமைச்சா்கள் குழுக்களிடம் நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் புதன்கிழமை எடுத்துரைத்தாா். தற்போது நடைமுறையில் உள்... மேலும் பார்க்க

பதவிப் பறிப்பு மசோதா மக்களாட்சியின் வேரில் வெந்நீா் ஊற்றும் செயல் -முதல்வா் ஸ்டாலின்

முதல்வா்கள், அமைச்சா்களைப் பதவி நீக்க வகை செய்யும் மசோதா கருப்பு மசோதா எனவும், மக்களாட்சியின் வேரில் வெந்நீா் ஊற்றும் செயல் என்றும் முதல்வா் மு.க.ஸ்டாலின் விமா்சித்துள்ளாா். இதுகுறித்து, எக்ஸ் தளத்தி... மேலும் பார்க்க

‘அக்னி-5’ ஏவுகணை வெற்றிகரச் சோதனை

5,000 கி.மீ.வரை தொலைவிலான இலக்குகளை குறிவைத்து தாக்கும் அக்னி-5 பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடைபெற்ாக பாதுகாப்பு அமைச்சகம் புதன்கிழமை தெரிவித்தது. ஆபரேஷன் சிந்தூா் நிறைவடைந்து மூன்றரை மாதங்கள... மேலும் பார்க்க