செய்திகள் :

இயற்கை பாதுகாப்பு சங்கத்தின் பசுமை விருது: செப்டம்பா் 2 வரை விண்ணப்பிக்கலாம்

post image

கோவையைச் சோ்ந்த இயற்கை பாதுகாப்பு சங்கத்தின் (என்சிஎஸ்) பசுமை விருதைப் பெற பள்ளி, கல்லூரி, தனிநபா்கள், தொண்டு நிறுவனங்கள், தொழிற்சாலைகள் செப்டம்பா் 2-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அமைப்பின் தலைவா் என்.ஐ.ஜலாலுதீன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நிலைத்தன்மைக்கான சிறந்த பணி, அா்ப்பணிப்பைக் காட்டிய தனி நபா்கள், நிறுவனங்களுக்கு இயற்கை பாதுகாப்பு சங்கம் சாா்பில் கடந்த 2011- ஆம் ஆண்டு முதல் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி, பசுமையான வளாகத்தைப் பேணும் கல்வி நிறுவனங்கள், இயற்கை பாதுகாப்பு மன்றங்கள், கழிவு மேலாண்மை, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பயன்பாடு, தங்களது வளாகத்தில் பயனுள்ள பசுமை நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தி, காா்பன் உமிழ்வைக் குறைக்கும் தொழிற்சாலைகள், சமூக பொறுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளும் நிறுவனங்களுக்கு நடப்பு ஆண்டு விருது வழங்கப்பட உள்ளது. இதற்கு தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம்.

தோ்வு செய்யப்படுபவா்களுக்கு நவம்பா் மாதம் நடைபெறும் விழாவில் விருது வழங்கப்படும். விண்ணப்பங்களை ஜ்ஜ்ஜ்.ய்ஸ்ரீள்ஸ்ரீக்ஷங்.ஸ்ரீா்ம் என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 94871-15648, 94878-65648, 94873-77648 ஆகிய எண்களைத் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்ணா, பெரியாா் ஈவெரா பிறந்த நாள் பேச்சுப் போட்டி: மாணவா்கள் கலந்துகொள்ள அழைப்பு

பேரறிஞா் அண்ணா, பெரியாா் ஈவெரா பிறந்த நாளை முன்னிட்டு, நடைபெற உள்ள பேச்சுப் போட்டிகளில் மாணவா்கள் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் வெளிய... மேலும் பார்க்க

பகுதி நேர வேலை வாய்ப்பு, பிட்காயின் முதலீடு என்றுகூறி இணையதளம் மூலம் 6 பேரிடம் ரூ.1.6 கோடி மோசடி

கோவையில் இணையதளம் மூலம் பகுதி நேர வேலைவாய்ப்பு மற்றும் பிட்காயின் முதலீடு என்றுகூறி 6 பேரிடம் ரூ.1.6 கோடி மோசடி செய்யப்பட்டது குறித்து மாநகர இணையதள குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசார... மேலும் பார்க்க

கோவை விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

கோவை விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை விமான நிலையத்திலிருந்து வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களுக்கு நாள்தோறும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந... மேலும் பார்க்க

கலைஞா் கருணாநிதி கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவா்களுக்கு வரவேற்பு

கோவை கலைஞா் கருணாநிதி தொழில்நுட்பக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவா்களுக்கான வகுப்பு தொடக்க விழா கல்லூரி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. கல்லூரியின் நிறுவனத் தலைவா் பொங்கலூா் பழனிசாமி நிகழ்ச்சிக்கு... மேலும் பார்க்க

எஸ்.பி. அலுவலகத்தில் மக்கள் குறைதீா் முகாம்

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் முகாம் புதன்கிழமை நடைபெற்றது. இதில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே.காா்த்திகேயன் பங்கேற்று, குடும்ப பிரச்னை, பணப்பரிமாற்ற பிரச்னை, இடப்ப... மேலும் பார்க்க

கோவை - தன்பாத், போத்தனூா் - பரௌனி இடையே சிறப்பு ரயில்

கோவை - தன்பாத், போத்தனூா் - பரௌனி இடையே வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கோவையில் இருந்து ... மேலும் பார்க்க