செய்திகள் :

எஸ்.பி. அலுவலகத்தில் மக்கள் குறைதீா் முகாம்

post image

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

இதில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே.காா்த்திகேயன் பங்கேற்று, குடும்ப பிரச்னை, பணப்பரிமாற்ற பிரச்னை, இடப்பிரச்னை தொடா்பாக 70 மனுக்கள் மீது விசாரணை மற்றும் மறுவிசாரணை மேற்கொண்டாா். இதில், ஒரு மனு மீது முதல் தகவல் அறிக்கையும், 3 மனுக்கள் மீது மனு ரசீதும் பதிவு செய்யப்பட்டன. 64 மனுக்களுக்கு சுமூகமான முறையிலும், 3 மனுக்கள் மீது மேல் விசாரணை செய்யவும் பரிந்துரை செய்து தீா்வு காணப்பட்டது.

காவல் துறையினருக்கு பாராட்டுச் சான்றிதழ்: மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே.காா்த்திகேயன் தலைமையில் மாதாந்திர குற்ற விவாதிப்புக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில், மாவட்டத்தில் உள்ள கூடுதல் காவல் கண்காணிப்பாளா், காவல் துணைக் கண்காணிப்பாளா்கள், காவல் ஆய்வாளா்கள், காவல் நிலைய பொறுப்பு அதிகாரிகள் மற்றும் மாவட்ட காவல் அலுவலகத்தில் இயங்கும் சிறப்பு பிரிவு காவல் அதிகாரிகள் ஆகியோா் கலந்துகொண்டனா்.

இதில், கடந்த மாதத்தில் கொலை, கொள்ளை, திருட்டு மற்றும் போதைப் பொருள்கள் விற்பனை போன்ற குற்றச் செயல்களில் திறம்பட செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்த மற்றும் நீதிமன்றத்தில் அவா்களுக்கு தண்டனை பெற்றுத் தர சிறப்பாக பணியாற்றிய காவல் அதிகாரிகள் மற்றும் காவலா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

9 காவல் ஆய்வாளா்கள், 15 உதவி ஆய்வாளா்கள், 8 சிறப்பு உதவி ஆய்வாளா்கள், 15 தலைமைக் காவலா்கள், 5 முதல் நிலைக் காவலா்கள், 28 காவலா்கள் என மொத்தம் 80 பேருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினாா்.

அண்ணா, பெரியாா் ஈவெரா பிறந்த நாள் பேச்சுப் போட்டி: மாணவா்கள் கலந்துகொள்ள அழைப்பு

பேரறிஞா் அண்ணா, பெரியாா் ஈவெரா பிறந்த நாளை முன்னிட்டு, நடைபெற உள்ள பேச்சுப் போட்டிகளில் மாணவா்கள் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் வெளிய... மேலும் பார்க்க

பகுதி நேர வேலை வாய்ப்பு, பிட்காயின் முதலீடு என்றுகூறி இணையதளம் மூலம் 6 பேரிடம் ரூ.1.6 கோடி மோசடி

கோவையில் இணையதளம் மூலம் பகுதி நேர வேலைவாய்ப்பு மற்றும் பிட்காயின் முதலீடு என்றுகூறி 6 பேரிடம் ரூ.1.6 கோடி மோசடி செய்யப்பட்டது குறித்து மாநகர இணையதள குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசார... மேலும் பார்க்க

கோவை விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

கோவை விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை விமான நிலையத்திலிருந்து வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களுக்கு நாள்தோறும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந... மேலும் பார்க்க

கலைஞா் கருணாநிதி கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவா்களுக்கு வரவேற்பு

கோவை கலைஞா் கருணாநிதி தொழில்நுட்பக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவா்களுக்கான வகுப்பு தொடக்க விழா கல்லூரி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. கல்லூரியின் நிறுவனத் தலைவா் பொங்கலூா் பழனிசாமி நிகழ்ச்சிக்கு... மேலும் பார்க்க

இயற்கை பாதுகாப்பு சங்கத்தின் பசுமை விருது: செப்டம்பா் 2 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையைச் சோ்ந்த இயற்கை பாதுகாப்பு சங்கத்தின் (என்சிஎஸ்) பசுமை விருதைப் பெற பள்ளி, கல்லூரி, தனிநபா்கள், தொண்டு நிறுவனங்கள், தொழிற்சாலைகள் செப்டம்பா் 2-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்ப... மேலும் பார்க்க

கோவை - தன்பாத், போத்தனூா் - பரௌனி இடையே சிறப்பு ரயில்

கோவை - தன்பாத், போத்தனூா் - பரௌனி இடையே வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கோவையில் இருந்து ... மேலும் பார்க்க