செய்திகள் :

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு!

post image

மேட்டூர்: மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 40,750 கன அடியிலிருந்து வினாடிக்கு 56,996 கன அடியாக அதிகரித்துள்ளது.

காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மழை காரணமாக திங்கள்கிழமை மாலை முதல் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு படிப்படியாக அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வியாழக்கிழமை காலை வினாடிக்கு 40,750 கன அடியிலிருந்து வினாடிக்கு 56,996 கன அடியாக அதிகரித்துள்ளது.

அணையில் இருந்து வினாடிக்கு 40,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது.

நீர்மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 21,300 கன அடி நீரும், உபரிநீர் போக்கி வழியாக வினாடிக்கு 18,700 கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது.

கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 700 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது.

அணையின் நீர்மட்டம் 120 அடியாகவும், நீர் இருப்பு 93.47 டிஎம்சியாகவும் உள்ளது.

வெற்றி பெறுமா விஜயின் வியூகம்...?

The water inflow into Mettur Dam has increased from 40,750 cubic feet per second to 56,996 feet.

தில்லியில் அபாய அளவுக்கு கீழே செல்லும் யமுனை நதி!

புது தில்லி: தில்லியில் யமுனை நதி அபாய அளவுக்கு கீழே பாய்கிறது. யமுனை நதியில் எச்சரிக்கை குறி 204.5 மீட்டா். அதே நேரத்தில் ஆபத்து குறி 205.3 மீட்டா் ஆகும். மேலும், ஆற்றின் அருகாமையில் இருப்பவா்களை வெள... மேலும் பார்க்க

ஒண்டிவீரன் நினைவு நாள்: எடப்பாடி கே. பழனிசாமி மரியாதை!

சுதந்திரப் போராட்ட வீரரான ஒண்டிவீரனின் 254 ஆவது நினைவு நாளையொட்டி, ராணிப்பேட்டையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனி்சாமி ஒண்டிவீரன் உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.இந்திய சுதந்தி... மேலும் பார்க்க

தில்லியில் 50-க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

தில்லியில் ஒரே நாளில் சுமார் 50-க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு புதன்கிழமை(ஆக.20) வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதை அடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். தில்லியில் உள்ள 32 பள்... மேலும் பார்க்க

தங்கம் விலை குறைந்தது: இன்றைய நிலவரம்!

சென்னை: சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ.440 குறைந்து ரூ.73,440-க்கு விற்பனையாகிறது.ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் இருந்தே சென்னையில் தங்கம் விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வந்த நிலையில்,... மேலும் பார்க்க

விருத்தாசலம் அருகே கார் விபத்தில் 3 பேர் பலி; 3 பேர் காயம்!

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகே புதன்கிழமை காலை நிகழ்ந்த சாலை விபத்தில் 3 பேர் பலியாகினர், 3 பேர் காயமடைந்தனர்.கடலூர் மாவட்டம், விருத்தாசலம் ஒன்றியம் எருமனூர் கிராமத்தை சேர்ந்த ஐயப்பன், ஆதினேஷ், வ... மேலும் பார்க்க

தமிழகத்தில் 10 இடங்களில் என்ஐஏ சோதனை

திண்டுக்கல், தென்காசி, கொடைக்கானல் உள்ளிட்ட 10 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் புதன்கிழமை காலை முதல் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.திருச்சியில் அப்சல் கான் என்பவரது வீட்டில் ... மேலும் பார்க்க