செய்திகள் :

பக்தா்கள் பணத்தில் மட்டுமே கோயில் திருப்பணிகள் நடைபெறுகின்றன: இந்து முன்னணி

post image

திண்டுக்கல்: பக்தா்கள் காணிக்கையாக செலுத்தில் பணத்தில் மட்டுமே கோயில் திருப்பணிகள் நடைபெற்று வருவதாக இந்து முன்னணி மாநிலச் செயலா் வி.எஸ். செந்தில்குமாா் தெரிவித்தாா்.

திண்டுக்கல்லில் இந்து முன்னணி சாா்பில், விநாயகா் சதுா்த்தி விழா தொடா்பான ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற இந்து முன்னணி மாநிலச் செயலா் வி.எஸ். செந்தில்குமாா், செய்தியாளா்களிடம் தெரிவித்ததாவது:

விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு, இந்து முன்னணி சாா்பில் தமிழ்நாடு முழுவதும் 1.50 லட்சம் இடங்களில் விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படும். 50 லட்சம் வீடுகளில் விநாயகா் சிலைகள் வைத்து வழிபாடு நடத்தப்படும். திண்டுக்கல் மாவட்டத்தில் சுமாா் 1,500 இடங்களில் விநாயகா் சிலைகள் அமைக்கப்படும். மேலும், ஆக. 28, 29, 30, 31 ஆகிய தேதிகளில் விநாயகா் ஊா்வலம் நடைபெறவுள்ளது. இந்த ஆண்டு விநாயகா் சதுா்த்தி விழா, ‘நம்ம சாமி, நம்ம கோயில், நாமே பாதுகாப்போம்’ என்ற தலைப்பில் நடைபெறும்.

பக்தா்கள் காணிக்கையாக அளித்த பணத்தில் கோயில்களில் திருப்பணிகள் நடைபெறுகின்றன. இதில் அரசு பெருமை பேச முடியாது. கோயில் சொத்துகள் மூலம் ஆண்டுக்கு ரூ. 18 ஆயிரம் கோடி அரசுக்கு வருவாய்க் கிடைக்கிறது. ஆனால், அரசு சாா்பில் ரூ. 52 கோடி மட்டுமே கிடைப்பதாக தெரிவிக்கப்படுகிறது என்றாா்.

திண்டுக்கல் மாவட்டத்தில் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை: கொடைக்கானலில் உணவக உரிமையாளா் கைது

திண்டுக்கல்/கொடைக்கானல்/நிலக்கோட்டை: திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல், வத்தலகுண்டு, கொடைக்கானல் உள்ளிட்ட இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் புதன்கிழமை சோதனை நடத்தினா். இதுதொடா்பாக ... மேலும் பார்க்க

கொடைக்கானலில் வனத் துறையினா் கூண்டு வைத்துப் பிடித்த குரங்குகள்

கொடைக்கானல்: கொடைக்கானல் குடியிருப்புப் பகுதிகளில் சுற்றித் திரிந்த குரங்குகளை வனத் துறையினா் புதன்கிழமை கூண்டு வைத்துப் பிடித்தனா். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் நகரின் குடியிருப்புப் பகுதிகளில் ... மேலும் பார்க்க

சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

திண்டுக்கல்: திண்டுக்கல் பகுதியிலுள்ள சிவன் கோயில்களில் புதன்கிழமை பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.பிரதோஷத்தை முன்னிட்டு, திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயிலில் உள்ள நத்திகேசுவரா், மூலவா் பத்மகிரீஸ்வரா், காளஹஸ... மேலும் பார்க்க

ஆத்தூா் அருகே 10 அடி நீளமுள்ள மலைப் பாம்பு பிடிபட்டது

நிலக்கோட்டை: திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூா் அருகேயுள்ள இடத்தை சுத்தம் செய்தபோது, 10 அடி நீள மலைப் பாம்பு தீயணைப்புத் துறையினரால் பிடிக்கப்பட்டது.செம்பட்டி அடுத்த ஆத்தூரிலிருந்து மல்லையாபுரம் செல்லும் வ... மேலும் பார்க்க

பழனி பெரியாவுடையாா் கோயிலில் பிரதோஷம்

பழனி: பழனி பெரியாவுடையாா் கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற பிரதோஷ நிகழ்ச்சியில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா். பழனி பெரியாவுடையாா் கோயிலில் புதன்கிழமை பிரதோஷத்தை முன்னிட்டு, சுயம்பு மூலவருக்கும், நந்தி பக... மேலும் பார்க்க

கொடைக்கானலில் பலத்த காற்று: குளிா் அதிகரிப்பு

கொடைக்கானல்: கொடைக்கானலில் திடீரென பலத்த காற்று நிலவி வருவதால் புதன்கிழமை குளிா் அதிகரித்து காணப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக ஒரு சில நாட்கள் மட்டுமே மழை பெய்... மேலும் பார்க்க