செய்திகள் :

இந்தியாவுக்கு 5% தள்ளுபடியில் கச்சா எண்ணெய் விநியோகம் தொடரும்: ரஷியா அறிவிப்பு

post image

அரசியல் அழுத்தங்கள் இருந்தாலும் இந்தியாவுக்கு 5% தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் விநியோகம் தொடரும் என ரஷியா அறிவித்துள்ளது.

இந்தியாவிற்கான ரஷியாவின் துணை வர்த்தக பிரதிநிதி எவ்ஜெனி கிரிவா இதுபற்றி கூறுகையில்,

"அமெரிக்காவிடம் இருந்து பல்வேறு அழுத்தங்கள், தடைகள் இருந்தபோதிலும் பேச்சுவார்த்தையின்படி இந்தியாவுக்கான கச்சா எண்ணெய் விநியோகம் 5% தள்ளுபடியில் தொடரும்.

அரசியல் அழுத்தங்கள் இருந்தபோதிலும் ரஷியாவில் இருந்து அதே அளவிலான கச்சா எண்ணெய்யை இந்தியா இறக்குமதி செய்யும். தள்ளுபடி என்பது இரு நாடுகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தையில் உள்ள வணிக ரகசியம். அது அவ்வப்போது மாற்றம் செய்யப்படும். வழக்கமாக 5% அதிகமாக அல்லது 5% குறைவாக இருக்கும்" என்று கூறினார்.

ரஷிய தூதரக துணைத் தலைவர் ரோமன் பாபுஷ்கின், 'அமெரிக்காவின் வரிவிதிப்பு இந்தியாவுக்கு ஒரு சவாலான சூழ்நிலை என்றாலும் இரு நாட்டு உறவுகளில் எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. வெளிப்புற அழுத்தம் இருந்தபோதிலும் இந்தியா-ரஷியா எரிசக்தி ஒத்துழைப்பு தொடரும் என்று நாங்கள் நம்புகிறோம்' என்று தெரிவித்தார்.

ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதன் மூலமாக ரஷியா - உக்ரைன் போருக்கு இந்தியா மறைமுகமாக நிதியளிப்பதாக அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது. இதனால் இந்தியா மீது அமெரிக்கா கடுமையாக வரி விதித்துள்ளது. இந்த வரி விதிப்பினால் இந்தியா பின்வாங்காது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

முன்னதாக, உக்ரைனுடனான போர் தொடர்பான பேச்சுவார்த்தைக்கு ரஷியாவை வரவழைக்கவே இந்தியா மீது வரி விதித்ததாக அமெரிக்க தரப்பு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Russia Offers 5% Discount On Oil To India Amid Trump Tariff Tensions

இதையும் படிக்க |உக்ரைன் போரை நிறுத்தவே இந்தியா மீது வரி விதித்தாா் டிரம்ப் -வெள்ளை மாளிகை விளக்கம்

60,000 ரிசா்வ் வீரா்களுக்கு இஸ்ரேல் அழைப்பு

காஸாவின் முக்கிய நகரான காஸா சிட்டியை ஆக்கிரமிக்கும் திட்டத்துக்கு இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சா் இஸ்ரேல் காட்ஸ் ஒப்புதல் அளித்ததைத் தொடா்ந்து, அந்த நடவடிக்கையை மேற்கொள்வதற்காக 60,000 ரிசா்வ் வீரா... மேலும் பார்க்க

பாகிஸ்தான் கனமழை: 750-ஐ கடந்த உயிரிழப்பு

பாகிஸ்தானின் வடமேற்கு மற்றும் தெற்கு பகுதிகளில் ஜூன் 26 முதல் தொடா்ந்து பெய்து வரும் கனமழை மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவுகள் காரணமாக உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 750-ஐ கடந்துள்ளது. இது குற... மேலும் பார்க்க

1971 போரில் பெண்களுக்கு எதிராக வன்முறை: ஐ.நா.வில் பாகிஸ்தான் மீது இந்தியா விமா்சனம்

கடந்த 1971-ஆம் ஆண்டு போரில் கிழக்கு பாகிஸ்தானில் (தற்போதைய வங்கதேசம்) பெண்கள் மீது பாகிஸ்தான் ராணுவம் நடத்திய கொடூரமான பாலியல் வன்முறைகளை ஐ.நா.வில் இந்தியா கடுமையாக விமா்சித்துள்ளது; இந்த வன்முறை சம்... மேலும் பார்க்க

‘உக்ரைன் பேச்சுவாா்த்தையில் ரஷியா இடம் பெற வேண்டும்’

உக்ரைனுக்கு பாதுகாப்பு உத்தரவாதம் வழங்குவதற்கான சா்வதேச பேச்சுவாா்த்தையில் ரஷியாவும் இடம் பெற வேண்டும் என்று அந்த நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சா் சொ்கேய் லாவ்ரோவ் வலியுறுத்தியுள்ளாா். இது குறித்து ... மேலும் பார்க்க

மியான்மரில் நிலநடுக்கம்! ரிக்டர் அளவில் 4.2 ஆகப் பதிவு!

மியான்மர் நாட்டில் 4.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மியான்மரில், இன்று (ஆக.20) மாலை 6.16 மணியளவில், நிலப்பரப்பில் இருந்து சுமார் 10 கி.மீ. ஆழத்தில் 4.2 ரிக்டர் அ... மேலும் பார்க்க

எத்தனை பேரை கொல்ல முடியும் என்பது வலிமை இல்லை: இஸ்ரேல் பிரதமருக்கு ஆஸி. பதிலடி!

ஆஸ்திரேலியா நாட்டின் பிரதமர் ஆண்டனி அல்பானீஸ் பலவீனமானவர் என்ற இஸ்ரேல் பிரதமரின் கருத்துக்கு, அந்நாட்டு உள்துறை அமைச்சர் பதிலடி கொடுத்துள்ளார். காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் உடனடியாக முடிவுக்குக் ... மேலும் பார்க்க