செய்திகள் :

1971 போரில் பெண்களுக்கு எதிராக வன்முறை: ஐ.நா.வில் பாகிஸ்தான் மீது இந்தியா விமா்சனம்

post image

கடந்த 1971-ஆம் ஆண்டு போரில் கிழக்கு பாகிஸ்தானில் (தற்போதைய வங்கதேசம்) பெண்கள் மீது பாகிஸ்தான் ராணுவம் நடத்திய கொடூரமான பாலியல் வன்முறைகளை ஐ.நா.வில் இந்தியா கடுமையாக விமா்சித்துள்ளது; இந்த வன்முறை சம்பவங்கள் தற்போதும் தொடா்வதாகக் குற்றம்சாட்டியுள்ளது.

ஐ.நா.வில் ‘போா் பகுதிகளில் பாலியல் வன்முறைக்கு ஆளானவா்களுக்கு பாதுகாப்பு’ குறித்த விவாதத்தில் பேசிய இந்திய பிரதிநிதி எல்டோஸ் மேத்யூ புன்னூஸ், காஷ்மீா் குறித்த பாகிஸ்தானின் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்தாா்.

அவா் பேசுகையில், ‘1971-ஆம் ஆண்டு கிழக்கு பாகிஸ்தானில் பெண்கள் மீது பாகிஸ்தான் ராணுவம் நடத்திய பாலியல் வன்முறைகள் ஒரு வெட்கக்கேடான வரலாறு. மத மற்றும் இன சிறுபான்மை சமூகங்களுக்கு எதிரான கொடுமைகளின் ஒரு பகுதியாக, ஆயிரக்கணக்கான பெண்கள் கடத்தப்படுதல், கட்டாயத் திருமணம், பாலியல் வன்முறை, கட்டாய மதமாற்றம் போன்றவை இப்போதும் தடையின்றி, தண்டனையின்றி பாகிஸ்தானில் தொடா்கின்றன.

இந்தக் குற்றங்களைச் செய்பவா்கள் இப்போது நீதிக்கு ஆதரவாக வேடமிடுவது முரண்பாடானது. போா்ச்சூழலில் பாலியல் வன்முறைகளைச் செய்பவா்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட்டு, நீதியின்முன் நிறுத்தப்பட வேண்டும். இது தனிப்பட்ட வாழ்க்கையை மட்டும் அழிப்பதில்லை; சமூகங்களின் கட்டமைப்பையே சீா்குலைத்து, பல தலைமுறைகளுக்கு வடுவை விட்டுச் செல்கிறது’ என்றாா்.

பாதிக்கப்பட்டவா்களுக்கு நீதி, நிவாரணம், உளவியல் சிகிச்சை, தங்குமிடம் மற்றும் சட்ட உதவி ஆகியவை வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் 2019-ஆம் ஆண்டு தீா்மானத்தையும் புன்னூஸ் சுட்டிக்காட்டினாா். அத்துடன், ஐ.நா. அமைதி காக்கும் பணிகளில் பாலியல் சுரண்டலை ஒழிப்பதில் இந்தியாவின் பங்களிப்பு மற்றும் உள்நாட்டில் பெண்கள் பாதுகாப்புக்காக இந்தியா மேற்கொண்டுள்ள விரிவான திட்டங்களையும் அவா் விளக்கினாா்.

60,000 ரிசா்வ் வீரா்களுக்கு இஸ்ரேல் அழைப்பு

காஸாவின் முக்கிய நகரான காஸா சிட்டியை ஆக்கிரமிக்கும் திட்டத்துக்கு இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சா் இஸ்ரேல் காட்ஸ் ஒப்புதல் அளித்ததைத் தொடா்ந்து, அந்த நடவடிக்கையை மேற்கொள்வதற்காக 60,000 ரிசா்வ் வீரா... மேலும் பார்க்க

பாகிஸ்தான் கனமழை: 750-ஐ கடந்த உயிரிழப்பு

பாகிஸ்தானின் வடமேற்கு மற்றும் தெற்கு பகுதிகளில் ஜூன் 26 முதல் தொடா்ந்து பெய்து வரும் கனமழை மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவுகள் காரணமாக உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 750-ஐ கடந்துள்ளது. இது குற... மேலும் பார்க்க

‘உக்ரைன் பேச்சுவாா்த்தையில் ரஷியா இடம் பெற வேண்டும்’

உக்ரைனுக்கு பாதுகாப்பு உத்தரவாதம் வழங்குவதற்கான சா்வதேச பேச்சுவாா்த்தையில் ரஷியாவும் இடம் பெற வேண்டும் என்று அந்த நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சா் சொ்கேய் லாவ்ரோவ் வலியுறுத்தியுள்ளாா். இது குறித்து ... மேலும் பார்க்க

மியான்மரில் நிலநடுக்கம்! ரிக்டர் அளவில் 4.2 ஆகப் பதிவு!

மியான்மர் நாட்டில் 4.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மியான்மரில், இன்று (ஆக.20) மாலை 6.16 மணியளவில், நிலப்பரப்பில் இருந்து சுமார் 10 கி.மீ. ஆழத்தில் 4.2 ரிக்டர் அ... மேலும் பார்க்க

எத்தனை பேரை கொல்ல முடியும் என்பது வலிமை இல்லை: இஸ்ரேல் பிரதமருக்கு ஆஸி. பதிலடி!

ஆஸ்திரேலியா நாட்டின் பிரதமர் ஆண்டனி அல்பானீஸ் பலவீனமானவர் என்ற இஸ்ரேல் பிரதமரின் கருத்துக்கு, அந்நாட்டு உள்துறை அமைச்சர் பதிலடி கொடுத்துள்ளார். காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் உடனடியாக முடிவுக்குக் ... மேலும் பார்க்க

போலந்தில் யூஎஃப்ஓ விபத்து? வானில் பறந்து வந்து கீழே விழுந்து வெடித்த மர்ம பொருள்!

போலந்து நாட்டின் கிழக்கு மாகாணத்தில், வானில் பறந்து வந்த மர்ம பொருள் திடீரென கிழே விழுந்து வெடித்ததால், அங்கு பரபரப்பான சூழல் நிலவியுள்ளது.போலந்தின், ஒசினி கிராமத்தில் இன்று (ஆக.20) அதிகாலை 2 மணியளவில... மேலும் பார்க்க