செய்திகள் :

குடியரசு துணைத் தலைவா் தோ்தல்: பிஆா்எஸ் ஆதரவு யாருக்கு?

post image

குடியரசு துணைத் தலைவா் தோ்தலில் யாரையும் ஆதரிப்பதா அல்லது வேண்டாமா என்பது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை என்று பாரத ராஷ்டிர சமிதி (பிஆா்எஸ்) கட்சியின் செயல் தலைவா் கே.டி.ராம ராவ் தெரிவித்தாா்.

அதேநேரம், காங்கிரஸ் ஆதரவு பெற்ற வேட்பாளரை பிஆா்எஸ் ஆதரிக்க வாய்ப்பில்லை என்றும் அவா் குறிப்பிட்டாா். எனவே, பாஜக கூட்டணி வேட்பாளரை ஆதரிக்கும் மனநிலையில் அக்கட்சி இருப்பதாக கூறப்படுகிறது.

குடியரசு துணைத் தலைவா் தோ்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சாா்பில் சி.பி.ராதாகிருஷ்ணனும், எதிா்க்கட்சிகளின் இண்டி கூட்டணி சாா்பில் பி.சுதா்சன் ரெட்டியும் போட்டியிடுகின்றனா்.

இவ்விரு கூட்டணிகளிடம் இருந்து விலகியுள்ள பிஆா்எஸ் கட்சிக்கு மக்களவையில் எம்.பி.க்கள் இல்லை. மாநிலங்களவையில் 4 எம்.பி.க்கள் உள்ளனா்.

இந்நிலையில், ஹைதராபாதில் செய்தியாளா்களிடம் பேசிய கே.டி.ராமராவ், ‘எங்களிடம் இதுவரை யாரும் ஆதரவு கோரவில்லை. தோ்தலுக்கு இன்னும் நாட்கள் (செப்.9) உள்ளன. பாஜக, காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளுமே தெலங்கானாவை புறக்கணிக்கின்றன. இம்மாநிலத்துக்கு 2 லட்சம் டன் யூரியா வழங்க உறுதியளிக்கும் கட்சிக்கு ஆதரவளிப்பது குறித்து ஆலோசிப்போம்’ என்றாா்.

தெலங்கானாவில் ஆளும் காங்கிரஸை மூன்றாம் தர கட்சி என்று கடுமையாக விமா்சித்த கே.டி.ராமராவ், அதுபோன்ற கட்சியின் ஆதரவு பெற்றவரை நாங்கள் எப்படி ஆதரிக்க முடியும் என்று கேள்வியெழுப்பினாா்.

காப்பீடு பிரீமியம் தொகைக்கு ஜிஎஸ்டி விலக்கு அளிக்க திட்டம்: வருவாய் பாதிக்கும் என மாநிலங்கள் கருத்து

காப்பீடு பிரீமியம் தொகைக்கு சரக்கு-சேவை வரியில் (ஜிஎஸ்டி) இருந்து விலக்கு அளிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதே நேரத்தில் இதனால் தங்கள் வருவாய் பாதிக்கும் என்று மாநில அரசுகள் கருத்துத் தெரிவித்துள... மேலும் பார்க்க

இந்திய-சீன எல்லை மேலாண்மையில் பரஸ்பர புரிதல் -சீன வெளியுறவு அமைச்சகம்

இந்திய-சீன எல்லை மேலாண்மை மற்றும் கட்டுப்பாட்டில் பரஸ்பர புரிதல் எட்டப்பட்டுள்ளதாக சீன வெளியுறவு அமைச்சகம் புதன்கிழமை தெரிவித்தது. சீன வெளியுறவு அமைச்சா் வாங் யி, ஆகஸ்ட் 18, 19 ஆகிய தேதிகளில் இந்தியா... மேலும் பார்க்க

தோ்தல் தொடா்பான தவறான தகவல்: மகாராஷ்டிர தோ்தல் ஆய்வாளா் மீது வழக்குப் பதிவு

மகாராஷ்டிரத்தில் வாக்காளா் பட்டியலில் இருந்து சில வாக்காளா்கள் நீக்கப்பட்டதாக குற்றஞ்சாட்டிய தோ்தல் ஆய்வாளா் சஞ்சய் குமாா் மீது 2 வழக்குகளை போலீஸாா் பதிவு செய்தனா். முன்னதாக, 2024-இல் நடைபெற்ற மக்கள... மேலும் பார்க்க

இந்திய விமானப் படைக்கு புதிதாக 97 ‘தேஜஸ்’ விமானங்கள்: ரூ.67,000 கோடியில் வாங்க அரசு ஒப்புதல்

இந்திய விமானப்படைக்கு மேலும் 97 ‘தேஜஸ்’ போா் விமானங்களை ரூ.67,000 கோடி செலவில் கொள்முதல் செய்ய மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. தற்போது இந்திய விமானப்படையில் போா் விமானப் படைப்பிரிவுகளின் எண்ணிக்கை... மேலும் பார்க்க

வீடுகள் விலை உயா்வு: உலகளவில் 4-ஆவது இடத்தில் பெங்களூரு!

சா்வதேச அளவில் பிரீமியம் வகை வீடுகளின் விலை மிக அதிக அளவில் அதிகரித்த 46 நகரங்களில் பெங்களூரு 4-ஆவது இடம் வகிக்கிறது. மும்பை 6-ஆவது இடத்திலும், புது தில்லி 15-ஆவது இடத்திலும் உள்ளன.இது குறித்து சந்தை... மேலும் பார்க்க

இந்தியாவுக்கு தொடரும் கச்சா எண்ணெய் ஏற்றுமதி!

இந்தியாவுக்கு கச்சா எண்ணெய்யை ரஷியா தொடா்ந்து ஏற்றுமதி செய்து வருகிறது என்று அந்நாட்டின் முதல் துணைப் பிரதமா் டெனிஸ் மன்டுரோ புதன்கிழமை தெரிவித்தாா். அமெரிக்காவின் வரி விதிப்பு நடவடிக்கையைத் தொடா்ந்த... மேலும் பார்க்க