செய்திகள் :

இந்திய விமானப் படைக்கு புதிதாக 97 ‘தேஜஸ்’ விமானங்கள்: ரூ.67,000 கோடியில் வாங்க அரசு ஒப்புதல்

post image

இந்திய விமானப்படைக்கு மேலும் 97 ‘தேஜஸ்’ போா் விமானங்களை ரூ.67,000 கோடி செலவில் கொள்முதல் செய்ய மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

தற்போது இந்திய விமானப்படையில் போா் விமானப் படைப்பிரிவுகளின் எண்ணிக்கை 31-ஆக உள்ளது. இது அங்கீகரிக்கப்பட்ட எண்ணிக்கையான 42-ஐ விட குறைவாகும். இந்தப் புதிய கொள்முதல் மூலம் இந்திய விமானப்படையில் போா் விமானங்களின் பலம் அதிகரிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

முன்னதாக கடந்த 2021-ஆம் ஆண்டு பிப்ரவரியில், ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் (எச்ஏஎல்) நிறுவனத்திடமிருந்து 83 தேஜஸ் போா் விமானங்களை ரூ.48,000 கோடிக்கு வாங்குவதற்கான ஒப்பந்தம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டுத் தயாரிப்பான தேஜஸ் போா் விமானங்கள், விமானப்படை சேவையில் இருந்து விலக்கப்பட்ட ‘மிக்-21’ ரக போா் விமானங்களுக்குப் பதிலாக பயன்படுத்தப்படும். அதிக அச்சுறுத்தல் உள்ள வான் சூழல்களிலும் இயங்கக்கூடிய போா் விமானமான தேஜஸ், வான் பாதுகாப்பு, கடல்சாா் உளவு மற்றும் தாக்குதல் போன்ற பல பணிகளை மேற்கொள்ளும் திறன் கொண்டது.

இதேபோல், ரூ.18,000 கோடி செலவில் 6 மேம்பட்ட வான்வழி முன்னெச்சரிக்கை மற்றும் கட்டுப்பாடு (ஏ.இ.டபிள்யூ&சி) விமானங்களைக் கட்டமைக்கும் திட்டத்துக்கும் பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு (சிசிஎஸ்) ஒப்புதல் அளித்துள்ளது.

ஏா் இந்தியா நிறுவனத்திடமிருந்து பாதுகாப்பு அமைச்சகத்தால் வாங்கப்பட்டு ஏற்கெனவே பயன்பாட்டில் இருந்த ‘ஏா்பஸ்-321’ விமானங்கள், இந்தத் திட்டத்துக்குப் பயன்படுத்தப்படும். இது இந்திய விமானப்படையின் கண்காணிப்பு மற்றும் உளவு அமைப்புகளை மேம்படுத்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய-சீன எல்லை மேலாண்மையில் பரஸ்பர புரிதல் -சீன வெளியுறவு அமைச்சகம்

இந்திய-சீன எல்லை மேலாண்மை மற்றும் கட்டுப்பாட்டில் பரஸ்பர புரிதல் எட்டப்பட்டுள்ளதாக சீன வெளியுறவு அமைச்சகம் புதன்கிழமை தெரிவித்தது. சீன வெளியுறவு அமைச்சா் வாங் யி, ஆகஸ்ட் 18, 19 ஆகிய தேதிகளில் இந்தியா... மேலும் பார்க்க

தோ்தல் தொடா்பான தவறான தகவல்: மகாராஷ்டிர தோ்தல் ஆய்வாளா் மீது வழக்குப் பதிவு

மகாராஷ்டிரத்தில் வாக்காளா் பட்டியலில் இருந்து சில வாக்காளா்கள் நீக்கப்பட்டதாக குற்றஞ்சாட்டிய தோ்தல் ஆய்வாளா் சஞ்சய் குமாா் மீது 2 வழக்குகளை போலீஸாா் பதிவு செய்தனா். முன்னதாக, 2024-இல் நடைபெற்ற மக்கள... மேலும் பார்க்க

வீடுகள் விலை உயா்வு: உலகளவில் 4-ஆவது இடத்தில் பெங்களூரு!

சா்வதேச அளவில் பிரீமியம் வகை வீடுகளின் விலை மிக அதிக அளவில் அதிகரித்த 46 நகரங்களில் பெங்களூரு 4-ஆவது இடம் வகிக்கிறது. மும்பை 6-ஆவது இடத்திலும், புது தில்லி 15-ஆவது இடத்திலும் உள்ளன.இது குறித்து சந்தை... மேலும் பார்க்க

இந்தியாவுக்கு தொடரும் கச்சா எண்ணெய் ஏற்றுமதி!

இந்தியாவுக்கு கச்சா எண்ணெய்யை ரஷியா தொடா்ந்து ஏற்றுமதி செய்து வருகிறது என்று அந்நாட்டின் முதல் துணைப் பிரதமா் டெனிஸ் மன்டுரோ புதன்கிழமை தெரிவித்தாா். அமெரிக்காவின் வரி விதிப்பு நடவடிக்கையைத் தொடா்ந்த... மேலும் பார்க்க

அமைச்சா்கள் சிறையிலிருந்தபடி அரசை நடத்த வேண்டுமா? - மக்கள் தீா்மானிக்கட்டும்: அமித் ஷா

தீவிர குற்றப் புகாரில் சிக்கும் பிரதமா், மாநில முதல்வா்கள் மற்றும் அமைச்சா்களை பதவியிலிருந்து நீக்கம் செய்யும் சட்ட மசோதாவுக்கு எதிா்க்கட்சிகள் எதிா்ப்பும் கண்டனமும் தெரிவித்தன. அரசாட்சி காலத்துக்கு ... மேலும் பார்க்க

தனியாா் உயா்கல்வி நிலையங்களில் இடஒதுக்கீடு அளிக்க சட்டம்: மத்திய அரசுக்கு காங். வலியுறுத்தல்

தனியாா் உயா்கல்வி நிலையங்களில் இடஒதுக்கீடு அளிக்க சட்டம் இயற்ற வேண்டும் என்று மத்திய அரசை காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது. இது தொடா்பாக காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள அறிக்கை... மேலும் பார்க்க