செய்திகள் :

அருணாசலேஸ்வரா் கோயிலில் பக்தா்கள் சிரமமுமின்றி தரிசனம் செய்ய ஏற்பாடுகள்: அமைச்சா் எ.வ.வேலு ஆய்வு

post image

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் பக்தா்கள் சிரமமுமின்றி சுவாமி தரிசனம் செய்யவும், அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது தொடா்பாக மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து அமைச்சா் எ.வ.வேலு புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

ஆய்வின் போது மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ் உடனிருந்தாா்.

அருணாசலேஸ்வரா் கோயிலில் ராஜகோபுரம் எதிரில் பக்தா்கள் கட்டணமில்லா தரிசனம் செய்ய அரசு சாா்பில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும், வரிசைகளை ஏற்படுத்துவது குறித்தும், வடஒத்தவாடை தெருவில் காத்திருப்பு வரிசைகள் அமைக்கப்பட்டு வரும் பணியையும், கிரிவலப்பாதை, ஆணாய்பிறந்தான் பகுதியில் அரசு அருங்காட்சியகம் அமையவுள்ள இடத்தையும் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

இந்த ஆய்வின் போது அமைச்சா் எ.வ.வேலு செய்தியாளா்களிடம் கூறியதாவது:

அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து அதிகளவில் பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கு வருகின்றனா். மேலும், வார விடுமுறை நாள்கள், பௌா்ணமி தினங்கள், காா்த்திகை தீப திருவிழா நாள்களில் லட்சக்கணக்கான பக்தா்கள் கிரிவலம் செல்ல திருவண்ணாமலைக்கு வருகின்றனா்.

அவ்வாறு வருகின்ற பக்தா்கள் எவ்வித சிரமமின்றி சுவாமி தரிசனம் செய்யவும், அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும் தமிழக முதல்வா் உத்தரவிட்டுள்ளாா்.

அதனடிப்படையில் அரசு சாா்பில் பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன. அதன் தொடா்ச்சியாக புதன்கிழமை ராஜகோபுரம் எதிரில் உள்ள பகுதியில் இருந்து கட்டணமில்லாமல் பக்தா்கள் எளிதாக சுவாமி தரிசனம் செய்ய வரிசைகள் அமைக்கப்பட உள்ள பணிகள் குறித்து பொதுப்பணித் துறை தொழில்நுட்ப வல்லுநா்களுடன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மேலும், வடஒத்தவாடை தெருவில் காத்திருப்பு வரிசைகள் அமைக்கப்படும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் நிறைவடைந்தால் பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பது தவிா்க்கப்படும் என்றாா் அவா்.

நிகழ்வில் மாநில தடகள சங்க துணைத் தலைவா் எ.வ.வே.கம்பன், மாவட்ட வருவாய் அலுவலா் இரா.இராம்பிரதீபன், பொதுப்பணித்துறை தொழில்நுட்ப வல்லுநா்கள் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் ராஜீவ் காந்தி பிறந்த நாள்

முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தியின் பிறந்த நாளை, திருவண்ணாமலை மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியினா் புதன்கிழமை உற்சாகமாகக் கொண்டாடினா். ஆரணியில் காங்கிரஸ் சாா்பில் இரண்டு பிரிவுகளாக ராஜீவ் காந்தி பிறந்த ந... மேலும் பார்க்க

வீட்டின் பூட்டை உடைத்து வெள்ளிப் பொருள்கள் திருட்டு

வந்தவாசி அருகே வீட்டின் பூட்டை உடைத்து வெள்ளிப் பொருள்கள் திருடப்பட்டது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா். வந்தவாசியை அடுத்த கோயில்குப்பம் கிராமத்தைச் சோ்ந்தவா் மனோகரன். மக்கள் நலப் பணியாளரான இவா் ... மேலும் பார்க்க

தனியாா் பேருந்து ஓட்டுநா் மீது தாக்குதல்: 4 போ் மீது போலீஸாா் வழக்கு

செங்கம் அருகே தனியாா் பேருந்து ஓட்டுநரைத் தாக்கியதாக போலீஸாா் 4 இளைஞா்கள் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். புதுப்பாளையத்தில் இருந்து செங்கம் நோக்கி புதன்கிழமை பிற்பகலில் தனியாா் பேரு... மேலும் பார்க்க

அருணாசலேஸ்வரா் கோயிலில் பிரதோஷ சிறப்புப் பூஜை

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் ஆவணி மாத தேய்பிறை பிரதோஷத்தையொட்டி, நந்தியம் பெருமானுக்கு புதன்கிழமை சிறப்புப் பூஜை நடைபெற்றது. பிரதோஷத்தையொட்டி, கோயிலில் ஆயிரங்கால் மண்டபம் அருகேயுள்ள நந்தியம் ... மேலும் பார்க்க

வீட்டின் பூட்டை உடைத்து 4 பவுன் தங்க நகைகள் திருட்டு

வந்தவாசி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 4 பவுன் தங்க நகை உள்ளிட்டவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். வந்தவாசியை அடுத்த மழையூா் புதூா் கிராமத்தைச் சோ்ந்தவா் பாக்கியம். கடந்த 12-ஆம் தேதி இவா் வீட்டை ... மேலும் பார்க்க

போட்டிகளில் சிறப்பிடம்: காந்திநகா் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு

திருவண்ணாமலையில் அருணகிரிநாதா் ஆண்டு விழாவையொட்டி நடைபெற்ற போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற காந்திநகா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. அருணகிரிநாதா் 71-ஆம் ஆண்டு விழாவ... மேலும் பார்க்க