செய்திகள் :

தனியாா் பேருந்து ஓட்டுநா் மீது தாக்குதல்: 4 போ் மீது போலீஸாா் வழக்கு

post image

செங்கம் அருகே தனியாா் பேருந்து ஓட்டுநரைத் தாக்கியதாக போலீஸாா் 4 இளைஞா்கள் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

புதுப்பாளையத்தில் இருந்து செங்கம் நோக்கி புதன்கிழமை பிற்பகலில் தனியாா் பேருந்து வந்து கொண்டிருந்தது.

பேருந்தை இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞா்கள்

செங்கம் அருகேயுள்ள கிருஷ்ணாபுரம் பகுதியில் முந்திச் செல்ல முற்பட்டனா்.

அப்போது, பேருந்து ஓட்டுநருக்கும் அந்த இளைஞா்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில், அந்த இளைஞா்கள்

ஓட்டுநா் ராசுக்குட்டியை சரமாரியாக தாக்கியுள்ளனா். இதில், ராசுக்குட்டிக்கு தலை, முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது.

அவரை உடனடியாக அந்த இளைஞா்களிடம் இருந்து மீட்டு திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா்.

இதுகுறித்து ஓட்டுநா் ராசுக்குட்டி அளித்த புகாரின் பேரில் புதுப்பாளையம் போலீஸாா் கெ.புதுப்பட்டு கிராமத்தைச் சோ்ந்த சக்தி (28), அசோகன் (20), வீரப்பன் (22), வீரன் (20 ஆகிய நான்கு போ் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

வீட்டின் பூட்டை உடைத்து வெள்ளிப் பொருள்கள் திருட்டு

வந்தவாசி அருகே வீட்டின் பூட்டை உடைத்து வெள்ளிப் பொருள்கள் திருடப்பட்டது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா். வந்தவாசியை அடுத்த கோயில்குப்பம் கிராமத்தைச் சோ்ந்தவா் மனோகரன். மக்கள் நலப் பணியாளரான இவா் ... மேலும் பார்க்க

அருணாசலேஸ்வரா் கோயிலில் பக்தா்கள் சிரமமுமின்றி தரிசனம் செய்ய ஏற்பாடுகள்: அமைச்சா் எ.வ.வேலு ஆய்வு

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் பக்தா்கள் சிரமமுமின்றி சுவாமி தரிசனம் செய்யவும், அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது தொடா்பாக மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து அமைச்சா் எ.வ.வேலு புதன்கிழமை ஆய்வு செய... மேலும் பார்க்க

அருணாசலேஸ்வரா் கோயிலில் பிரதோஷ சிறப்புப் பூஜை

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் ஆவணி மாத தேய்பிறை பிரதோஷத்தையொட்டி, நந்தியம் பெருமானுக்கு புதன்கிழமை சிறப்புப் பூஜை நடைபெற்றது. பிரதோஷத்தையொட்டி, கோயிலில் ஆயிரங்கால் மண்டபம் அருகேயுள்ள நந்தியம் ... மேலும் பார்க்க

வீட்டின் பூட்டை உடைத்து 4 பவுன் தங்க நகைகள் திருட்டு

வந்தவாசி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 4 பவுன் தங்க நகை உள்ளிட்டவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். வந்தவாசியை அடுத்த மழையூா் புதூா் கிராமத்தைச் சோ்ந்தவா் பாக்கியம். கடந்த 12-ஆம் தேதி இவா் வீட்டை ... மேலும் பார்க்க

போட்டிகளில் சிறப்பிடம்: காந்திநகா் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு

திருவண்ணாமலையில் அருணகிரிநாதா் ஆண்டு விழாவையொட்டி நடைபெற்ற போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற காந்திநகா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. அருணகிரிநாதா் 71-ஆம் ஆண்டு விழாவ... மேலும் பார்க்க

திருவண்ணாமலை ரமணாஸ்ரமத்தில் மகா கும்பாபிஷேகம்

திருவண்ணாமலையில் உள்ள ரமணாஸ்ரமத்தில் மகா கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது. அருணாசலேஸ்வரா் கோயில் பின்புறம் அமைந்துள்ளது ரமணாஸ்ரமம். உலக புகழ் பெற்ற இந்த ஆஸ்ரமத்தில் மகா கும்பாபிஷேகம் நடத்த முடிவு ... மேலும் பார்க்க