செய்திகள் :

தில்லியில் அபாய அளவுக்கு கீழே செல்லும் யமுனை நதி!

post image

புது தில்லி: தில்லியில் யமுனை நதி அபாய அளவுக்கு கீழே பாய்கிறது.

யமுனை நதியில் எச்சரிக்கை குறி 204.5 மீட்டா். அதே நேரத்தில் ஆபத்து குறி 205.3 மீட்டா் ஆகும். மேலும், ஆற்றின் அருகாமையில் இருப்பவா்களை வெளியேற்றும் நடவடிக்கை 206 மீட்டரில் தொடங்குகிறது.

வியாழக்கிழமை காலை யமுனை நதியின் நீர்மட்டம் ஆற்றின் ஓட்டம் மற்றும் வெள்ள அபாயங்களை கண்காணிப்பதற்கான முக்கியக் கண்காணிப்பு புள்ளியில் அபாய அளவான 205 மீட்டராக இருந்தது.

கனமழை காரணமாக ஆற்றில் 1.78 லட்சம் கனஅடி தண்ணீர் வந்ததால், ஹத்னிகுண்ட் தடுப்பணையின் 18 கதவுகளும் திறக்கப்பட்டன, இதன் விளைவாக ஆற்றின் நீர் மட்டம் உயர்ந்தது.

கடந்த சில வாரங்களாக நீர் மட்டத்தில் ஏற்பட்ட தொடர்ச்சியான மாற்றத்தால் நிர்வாகம் விழிப்புடன் இருந்து தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

முன்னதாக, புதன்கிழமை தில்லி முதல்வர் ரேகா குப்தா, நிரம்பி வழியும் யமுனை நதியின் நீர் நுழைந்த யமுனை நகரில் உள்ள குடியிருப்புப் பகுதிகளைப் பார்வையிட்டார். பின்னர், நிலைமை முழுமையாகக் கட்டுக்குள் உள்ளது. புதன்கிழமை காலையில் நீர்மட்டம் 206 மீட்டரை நெருங்கியது, ஆனால் இன்னும் அபாய அளவைத் தாண்டவில்லை. தண்ணீர் ஓரிரு நாட்களில் குறையும். மேலும் தில்லியில் வெள்ளம் போன்ற சூழ்நிலை இல்லை என்றும், இரண்டு நாட்களுக்குள் நீர் மட்டம் குறையும் என்றும் உறுதியளித்தார்.

கண்காணிப்பு மற்றும் மேலாண்மைப்பு தொடர்ந்து உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது. வெள்ளம் போன்ற சூழ்நிலையை சமாளிக்க தேவையான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் உணவு மற்றும் தண்ணீரை வழங்கப்பட்டு வருகிறது. மருத்துவ வசதிகளும் அளிக்கப்பட்டு வருகிறது.

பாதுகாப்பான இடத்திற்குச் செல்ல விரும்புவோருக்கு தேவையான ஏற்பாடுகளை நிர்வாகம் செய்துள்ளது, அவர்களுக்கு தங்க இடம் மற்றும் உணவு வழங்குவதோடு, பாதிக்கப்பட்ட பகுதியில் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குகிறது என்று அவர் கூறினார்.

முன்னதாக, கனமழை காரணமாக ஆற்றில் 1.78 லட்சம் கனஅடி தண்ணீர் வந்ததால், ஹத்னிகுண்ட் தடுப்பணையின் 18 கதவுகளும் திறக்கப்பட்டன, இதன் விளைவாக நீர்மட்டம் உயர்ந்தது.

நீர்ப்பாசனத் துறையின் நிர்வாகப் பொறியாளர் விஜய் கார்க் கூறுகையில், "சமீபத்திய மழைக்குப் பிறகு ஆற்றில் 1.78 லட்சம் கனஅடி தண்ணீர் வந்துள்ளது. இது இந்த பருவத்தின் அதிகபட்ச நீர்மட்டம்" என்றார்.

தொடர் மழை காரணமாக ஆறுகளில் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது, மேலும் பல பகுதிகளில் வெள்ளம் போன்ற சூழ்நிலைகள் காணப்படுகின்றன.

ஜகதீப் தன்கா் எங்கு மறைந்துள்ளாா்? -ராகுல் கேள்வி

The Yamuna River in the national capital is flowing close to the danger level.

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு!

மேட்டூர்: மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 40,750 கன அடியிலிருந்து வினாடிக்கு 56,996 கன அடியாக அதிகரித்துள்ளது.காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக காவிரியில... மேலும் பார்க்க

ஒண்டிவீரன் நினைவு நாள்: எடப்பாடி கே. பழனிசாமி மரியாதை!

சுதந்திரப் போராட்ட வீரரான ஒண்டிவீரனின் 254 ஆவது நினைவு நாளையொட்டி, ராணிப்பேட்டையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனி்சாமி ஒண்டிவீரன் உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.இந்திய சுதந்தி... மேலும் பார்க்க

தில்லியில் 50-க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

தில்லியில் ஒரே நாளில் சுமார் 50-க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு புதன்கிழமை(ஆக.20) வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதை அடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். தில்லியில் உள்ள 32 பள்... மேலும் பார்க்க

தங்கம் விலை குறைந்தது: இன்றைய நிலவரம்!

சென்னை: சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ.440 குறைந்து ரூ.73,440-க்கு விற்பனையாகிறது.ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் இருந்தே சென்னையில் தங்கம் விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வந்த நிலையில்,... மேலும் பார்க்க

விருத்தாசலம் அருகே கார் விபத்தில் 3 பேர் பலி; 3 பேர் காயம்!

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகே புதன்கிழமை காலை நிகழ்ந்த சாலை விபத்தில் 3 பேர் பலியாகினர், 3 பேர் காயமடைந்தனர்.கடலூர் மாவட்டம், விருத்தாசலம் ஒன்றியம் எருமனூர் கிராமத்தை சேர்ந்த ஐயப்பன், ஆதினேஷ், வ... மேலும் பார்க்க

தமிழகத்தில் 10 இடங்களில் என்ஐஏ சோதனை

திண்டுக்கல், தென்காசி, கொடைக்கானல் உள்ளிட்ட 10 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் புதன்கிழமை காலை முதல் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.திருச்சியில் அப்சல் கான் என்பவரது வீட்டில் ... மேலும் பார்க்க