செய்திகள் :

ஒண்டிவீரன் நினைவு நாள்: எடப்பாடி கே. பழனிசாமி மரியாதை!

post image

சுதந்திரப் போராட்ட வீரரான ஒண்டிவீரனின் 254 ஆவது நினைவு நாளையொட்டி, ராணிப்பேட்டையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனி்சாமி ஒண்டிவீரன் உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இந்திய சுதந்திரப் போராட்ட வீரா் ஒண்டிவீரனின் 254-ஆவது நினைவு நாள் புதன்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது. இதனையொட்டி, ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு தனியார் விடுதியில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்து அவரது உருவப்படத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி மலர்தூவிதூவி மரியாதை செலுத்தினார்.

இதில் அதிமுக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

திருநெல்வேலி மாவட்டம், நெற்கட்டும் செவல் பகுதியைச் சோ்ந்த ஒண்டிவீரன் பட்டியல் சமூகத்தைச் சோ்ந்த முதல் சுதந்திரப் போராட்ட வீரா் ஆவாா். பூலித்தேவன் படையில் தளபதியாக இருந்த இவா், ஆங்கிலேயப் படைகளைத் தனியாகச் சென்று அழித்ததால், ஒண்டிவீரன் என அழைக்கப்பட்டாா்.

பாளையங்கோட்டையில் ஒண்டிவீரன் நினைவாக 2016 ஆம் ஆண்டு மணிமண்டபம் கட்டப்பட்டு, அப்போதைய முதல்வா் ஜெயலலிதாவால் திறந்து வைக்கப்பட்டது. 1771 ஆம் ஆண்டு இயற்கை எய்திய ஒண்டிவீரனுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 20-ஆம் நாள் நினைவு நாள் அனுசரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

மேட்டூர் அணை 5-ஆவது முறையாக நிரம்பியது!

On the occasion of the 254th death anniversary of freedom fighter Ondiveeran, AIADMK General Secretary Edappadi Palaniswami paid tribute to the portrait of Ondiveeran in Ranipet.

தில்லியில் 50-க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

தில்லியில் ஒரே நாளில் சுமார் 50-க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு புதன்கிழமை(ஆக.20) வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதை அடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். தில்லியில் உள்ள 32 பள்... மேலும் பார்க்க

தங்கம் விலை குறைந்தது: இன்றைய நிலவரம்!

சென்னை: சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ.440 குறைந்து ரூ.73,440-க்கு விற்பனையாகிறது.ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் இருந்தே சென்னையில் தங்கம் விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வந்த நிலையில்,... மேலும் பார்க்க

விருத்தாசலம் அருகே கார் விபத்தில் 3 பேர் பலி; 3 பேர் காயம்!

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகே புதன்கிழமை காலை நிகழ்ந்த சாலை விபத்தில் 3 பேர் பலியாகினர், 3 பேர் காயமடைந்தனர்.கடலூர் மாவட்டம், விருத்தாசலம் ஒன்றியம் எருமனூர் கிராமத்தை சேர்ந்த ஐயப்பன், ஆதினேஷ், வ... மேலும் பார்க்க

தமிழகத்தில் 10 இடங்களில் என்ஐஏ சோதனை

திண்டுக்கல், தென்காசி, கொடைக்கானல் உள்ளிட்ட 10 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் புதன்கிழமை காலை முதல் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.திருச்சியில் அப்சல் கான் என்பவரது வீட்டில் ... மேலும் பார்க்க

மேட்டூர் அணை 5-ஆவது முறையாக நிரம்பியது!

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதால் அதன் முழு கொள்ளளவான 120 அடியை நடப்பாண்டில் ஐந்தாவது முறையாக நிரம்பியுள்ளதால், காவிரி கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்ட... மேலும் பார்க்க

மேட்டூர் அணை நிலவரம்!

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120.9 அடியாக புதன்கிழமை காலை உயர்ந்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் புதன்கிழமை காலை 120.9 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1,16,683 கன அடியாக ... மேலும் பார்க்க