செய்திகள் :

ஜெயிலர் வசூலைக் கூலி முறியடிக்குமா? திருப்பூர் சுப்பிரமணியம் பதில்!

post image

கூலி திரைப்படம் குறித்து திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் பேசியுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் நடித்த கூலி திரைப்படம் ஆக. 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வணிக ரீதியாக பெரிய வெற்றியை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது.

இதுவரை இப்படம் ரூ. 450 கோடிக்கும் அதிகமாக வசூலித்திருக்கலாம் என்றே கணிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நேர்காணலில் பேசிய தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம், “நடிகர் ரஜினிகாந்த்தின் கூலி திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வணிக ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. விமர்சகர்கள் என்கிற பெயரில் பலரும் வன்மமான கருத்துகளைப் பேசி வருகின்றனர். ஆனால், அவற்றால் படத்தின் வணிகம் பாதிக்கப்படவில்லை. இதுவரை தமிழகத்தில் வெளியான படங்களில் அதிக லாபகரமான படமென்றால் ஜெயிலர்தான். கூலி திரைப்படம் ஜெயிலருக்குக் குறைவில்லாமல் இருக்கும் என நினைக்கிறேன்.

நடிகர் ரஜினிகாந்த் 50 ஆண்டுகளாக சினிமாவில் வசூல் சக்ரவர்த்தியாக இருப்பது பெரிய ஆச்சரியம்தான். கூலி படத்திற்கு ஏ சான்றிதழ் கிடைக்காமல் இருந்திருந்தால் இன்னும் வணிகம் அதிகரித்திருக்கும். ஒடிடியில் வெளியானதும் எப்படியும் குழந்தைகள் பார்க்கத்தான் போகிறார்கள். அதனால், ஓடிடி நிறுவனத்துக்குத்தான் லாபம். ” எனப் பேசியுள்ளார்.

இதையும் படிக்க: கார்த்தியுடன் இணைந்து நடிக்கும் ஜீவா?

tamilnadu theater owners association president tirupur subramaniam spokes about coolie buisness

அசோக் செல்வன், நிமிஷா நடிப்பில் புதிய படம்!

நடிகர்கள் அசோக் செல்வன், நிமிஷா சஜயன் நடிக்கும் புதிய படத்தின் பூஜை இன்று நடைபெற்றுள்ளது.நடிகர் அசோக் செல்வன் தமிழில் வளர்ந்துவரும் நடிகராக இருக்கிறார். அதேபோல், சித்தா மற்றும் டிஎன்ஏ திரைப்படங்களில் ... மேலும் பார்க்க

கார்த்தியுடன் இணைந்து நடிக்கும் ஜீவா?

நடிகர் கார்த்தி நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு வில்லனாக ஜீவா நடிக்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.நடிகர் கார்த்தி மெய்யழகன் வெற்றிக்குப் பின் வா வாத்தியார் படத்தின் வெளியீட்டிற்காகக் காத்திருக்... மேலும் பார்க்க

மம்மூட்டிக்கு என்ன ஆனது? மோகன்லால் பதிவால் ரசிகர்கள் நெகிழ்ச்சி!

நடிகர் மம்மூட்டி நோய் பாதிப்பிலிருந்து மீண்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.மலையாள சினிமாவின் அடையாளங்களில் ஒருவரான மம்மூட்டி 74 வயதிலும் தோற்றத்தில் இளமையாகவே இருக்கிறார். இதனால், ரசிகர்கள் பலரும் 74 வ... மேலும் பார்க்க

மகளிா் ஒருநாள் உலகக் கோப்பை: ரேணுகா உள்ளே; ஷஃபாலி வெளியே

மகளிருக்கான ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடவுள்ள இந்திய அணி 15 பேருடன் செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டது.லேசான காயம் காரணமாக மாா்ச் முதல் களம் காணாமல் இருந்த வேகப்பந்து வீச்சாளா் ரேண... மேலும் பார்க்க

ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்: மனு பாக்கருக்கு வெண்கலம்; ராஷ்மிகாவுக்கு தங்கம்

ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்பில் சீனியா் பிரிவில் இந்தியாவின் மனு பாக்கா் வெண்கலப் பதக்கம் வெல்ல, ஜூனியா் பிரிவில் ராஷ்மிகா சாகல் தங்கப் பதக்கம் கைப்பற்றி அசத்தினாா்.கஜகஸ்தானில் நடைபெறும் இப்... மேலும் பார்க்க

குகேஷை வென்ற பிரக்ஞானந்தா

சிங்க்ஃபீல்டு கோப்பை செஸ் போட்டியின் முதல் சுற்றில் இந்தியாவின் ஆா்.பிரக்ஞானந்தா, நடப்பு உலக சாம்பியனும், சக இந்தியருமான டி.குகேஷை வீழ்த்தினாா்.வெள்ளை நிற காய்களுடன் விளையாடி குகேஷை பிரக்ஞானந்தா வீழ்த... மேலும் பார்க்க