செய்திகள் :

ஆக. 22ல் பிகாரில் பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி!

post image

பிரதமர் நரேந்திர மோடி ஆகஸ்ட் 22ல் கயாஜி மாவட்டத்தில் பல்வேறு திட்டங்களைத் தொடங்கிவைத்து பேரணியில் உரையாற்ற உள்ளதாக துணை முதல்வர் சாம்ராட் சௌத்ரி புதன்கிழமை தெரிவித்தார்.

பிரதமரின் விழாவிற்கான ஏற்பாடுகளை மேற்பார்வையிட சௌத்ரி சமீபத்தில் கயாஜிக்குச் சென்றிருந்தார்.

இதுதொடர்பாக துணை முதல்வரின் எக்ஸ் பதிவில்,

பிரதமர் மோடி மீண்டும் பிகாருக்கு வருகை தருகிறார். ஆகஸ்ட் 22ல் கயாஜிக்கு வரும் பிரதமர் கங்கை நதியின் மீது பிகாரின் முதல் ஆறு வழிப் பாலம் மற்றும் ரூ. 1,200 கோடி மதிப்பிலான மேம்பாட்டுத் திட்டங்களைத் திறந்துவைத்து அடிக்கல் நாட்ட உள்ளார்.

நாட்டின் மிகவும் பிரபலமான தலைவரான பிரதமர் மோடியின் பேச்சைக் கேட்க நீங்கள் அனைவரும் கயாஜிக்கு வருமாறு நான் கேட்டுக்கொள்கிறேன்

முன்னதாக கடந்த ஏப்ரல் முதல் மோதிஹாரி, சிவான், மதுபானி, பாட்னா ஆகிய இடங்களுக்கு பிரதமர் சென்றிருந்தார். இந்த ஆண்டு இறுதியில் பிகார் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Ahead of the Bihar assembly elections, Prime Minister Narendra Modi will visit Gayaji district on August 22 to launch several projects and address a public rally, Deputy Chief Minister Samrat Choudhary said on Wednesday.

கேரளத்தில் சிறுமி பலி: மூளையைத் தின்னும் அமீபா உடலுக்குள் எப்படி நுழைகிறது?

கேரளத்தில் மூளையைத் தின்னும் அமீபா தொற்றால் 9 வயது சிறுமி மரணமடைந்துள்ளார். மேலும் ஒரு 3 மாதக் குழந்தை மற்றும் 40 வயது நபர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கின்றனர். கேரளத்தில் ... மேலும் பார்க்க

தில்லி முதல்வரை தாக்கியவர் நாய் பிரியரா..? கைதானவரின் பின்னணி என்ன?

தில்லி முதல்வர் ரேகா குப்தா தாக்கப்பட்ட விவகாரத்தில் குஜராத்தைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.தில்லியின் சிவில் லைன்ஸில் உள்ள ரேகா குப்தாவின் வீட்டில், புதன்கிழமை காலை நடைபெற்ற மக்களின் குறை... மேலும் பார்க்க

நாடாளுமன்றத்தில் ராஜீவ் காந்தி படத்துக்கு சோனியா, ராகுல் மலர்தூவி மரியாதை!

நாடாளுமன்றத்தில் வளாகத்தில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் புகைப்படத்துக்கு காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.நாடு முழுவதும் மறைந்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் பிரதமருமான ராஜீ... மேலும் பார்க்க

தே.ஜ. கூட்டணி வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணன் வேட்புமனு தாக்கல்!

குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்காக தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணன் புதன்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தார்.நாட்டின் 14-ஆவது குடியரசு துணைத் தலைவரான ஜகதீப் தன்கர் ஜூலை 21-இல் தனது ... மேலும் பார்க்க

அப்பா, உங்கள் கனவை நிறைவேற்றுவதே என் குறிக்கோள்! ராகுல் உருக்கம்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்த நாளையொட்டி, அவரது மகனும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி உருக்கமான கருத்தை பகிர்ந்துள்ளார்.நாடு முழுவதும் மறைந்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் பி... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூர்: 3 - 12 வகுப்புகளுக்கு சிறப்பு பாடத் தொகுப்பு!

ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையை மாணவர்களுக்கு கற்பிக்கும் வகையில் இரண்டு சிறப்பு பாடத் தொகுப்புகளை தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்சிஆர்டிசி) வெளியிட்டுள்ளது.’ஆபரேஷன் சிந்தூர் -... மேலும் பார்க்க