செய்திகள் :

Delhi CM: டெல்லி முதல்வர் ரேகாவை தாக்கிய குஜராத் இளைஞர் கைது; நடந்த சம்பவத்திற்கு காரணம் என்ன?

post image

டெல்லி முதல்வர் ரேகா குப்தா மீது தாக்குதல்

டெல்லி முதல்வர் ரேகா குப்தா இன்று காலையில் தனது வீட்டில் வாராந்திர மக்கள் குறை கேட்பு நிகழ்ச்சியை நடத்திக்கொண்டிருந்தார்.

அந்நேரம் அங்கு வந்த ஒருவர் முதல்வர் ரேகாவிடம் சில ஆவணங்களை கொடுத்தார். அந்நேரம் அவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதத்தில் அந்த நபர் முதல்வர் ரேகா குப்தாவை கையை பிடித்து இழுத்து அடித்துள்ளார்.

பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இச்சம்வத்தில் சதி இருப்பதாக பா.ஜ.க குற்றம் சாட்டி இருக்கிறது. முதல்வர் ரேகா குப்தாவை தாக்கிய நபரை டெல்லி போலீஸார் உடனே கைது செய்துள்ளனர்.

டெல்லி முதல்வர் ரேகா குப்தா
டெல்லி முதல்வர் ரேகா குப்தா

சம்பவத்திற்கு காரணம் என்ன?

அவரிடம் விசாரணை நடத்தியபோது அவரது பெயர் ராஜேஷ் சக்ரியா(40) என்று தெரிய வந்தது.

அவரது சொந்த ஊர் குஜராத் மாநிலம் ராஜ்கோட் என்றும், அவரது உறவினர் ஒருவர் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டு இருப்பதாகவும் விசாரணையில் தெரிய வந்தது.

அவரை விடுவிக்க உதவும்படி கேட்டுத்தான் முதல்வர் ரேகாவிடம் ராஜேஷ் சென்றுள்ளார். அது தொடர்பான ஆவணங்களை கொடுத்தபோதுதான் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ராஜேஷ் கோபத்தில் கையை பிடித்து இழுத்து முறுக்கி அடித்துள்ளார்.

ராஜேஷ் சம்பவ இடத்தில் மது அருந்தி இருந்ததாக சிலர் தெரிவித்துள்ளனர். ஆனால் அது உறுதி செய்யப்படவில்லை.

சம்பவத்தின் போது பாதுகாப்பான அழைத்துச் செல்லப்பட்ட ரேகா

என்ன காரணத்திற்காக ராஜேஷ் அவ்வாறு நடந்து கொண்டார் என்பது குறித்து விசாரித்து வருவதாக டெல்லி போலீஸ் கமிஷனர் கே.சிங் தெரிவித்துள்ளார்.

குஜராத் போலீஸார் ராஜ்கோட்டில் ராஜேஷ் தாயாரை விசாரணைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

ராஜேஷ் தாயார் போலீஸாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில், "தனது மகன் விலங்குகள் நல ஆர்வலர். தெரு நாய் தொடர்பான வழக்கு தொடர்பாக டெல்லி செல்வதாக கூறிவிட்டு சென்றான். அவன் டெல்லி முதல்வரை சென்று பார்ப்பான் என்று எங்களுக்கு தெரியாது. அவன் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவன்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

``அப்பாகூட கடவுளை பார்க்க போறோம்'' - தந்தையுடன் உயிரை மாய்த்த குழந்தைகள்; கடலூரில் நடந்த சோகம்

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த காட்டாண்டிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ராஜகுரு, சுகன்யா தம்பதியினர்.இவர்களுக்கு 12 வயதில் ஒரு மகனும், 7 வயதில் ஒரு மகளும் இருந்தனர். கடந்த மாதம் கணவன் மனைவிக்கு... மேலும் பார்க்க

NIA Raid: திண்டுக்கல்லில் 8 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை; காரணம் என்ன?

தஞ்சாவூர் மாவட்டம் திருப்புவனத்தில், பாமகவை சேர்ந்த ராமலிங்கம் என்பவர் 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். மத மாற்றம் செய்வதை கண்டித்ததற்காக ராமலிங்கம் கொலை செய்யபட்டதா... மேலும் பார்க்க

நாமக்கல்: கிட்னி விற்பனையைத் தொடர்ந்து கல்லீரல் விற்பனை; பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த அதிர்ச்சி தகவல்

நாமக்கல் மாவட்டத்தில் சட்டவிரோதமாக கிட்னி விற்பனையைத் தொடர்ந்து கல்லீரல் விற்பனை நடந்துள்ளது. நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அலமேடு பகுதியைச் சேர்ந்தவர் தேவி. இவரது கணவர் பிரிந்து சென்ற நிலையில், 18 வ... மேலும் பார்க்க

ராஜஸ்தான்: கணவனைக் கொன்று டிரமில் உப்பு போட்டு அடைத்து தப்பி ஓடிய பெண்; காதலனுடன் சிக்கியது எப்படி?

ராஜஸ்தான் மாநிலத்தில் கைர்தல்-திஜாரா என்ற இடத்தில் வசிப்பவர் சுனிதா. இவருக்குத் திருமணமாகி மூன்று குழந்தைகள் இருக்கின்றன. அவர்கள் அங்கு வாடகை வீட்டில் வசித்து வந்தனர். இவரது கணவர் ஹன்ஸ்ராம் அங்குள்ள ச... மேலும் பார்க்க

செல்போனில் மூழ்கியதை கண்டித்த தாய்; 7 மாதக் குழந்தையுடன் குளத்தில் குதித்து தற்கொலை செய்த இளம்பெண்!

கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை அருகே உள்ள சரல்விளையில் வசித்து வருபவர்அப்துல்கலாம் ஆசாத். இவருக்கு சாரா என்ற மனைவியும், இரண்டு மகன்களும், ஒரு மகளும் இருந்தனர். பி.ஏ பட்டதாரியான மகள் ஷர்மி (வயது 26) என்... மேலும் பார்க்க

போலீஸை டோரில் தொங்க விட்டு டெம்போவை ஓட்டிய டிரைவர்; நடுரோட்டில் அதிர்ச்சி சம்பவம் - என்ன நடந்தது?

வாகன சோதனையில் போலீசார்கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் அமைந்துள்ளது பத்மநாபபுரம் போக்குவரத்து காவல் நிலையம். டிராபிக் சப் இன்ஸ்பெக்டர் அசோக் தலைமையில், போலீசார் நேற்று முன்தினம் இரவு தக்கலை பழைய பேரு... மேலும் பார்க்க