செய்திகள் :

22 ஆண்டுகளுக்குப் பிறகு மகனும் தந்தையும்... படப்பிடிப்பு தொடங்கியது!

post image

நடிகர் ஜெயராமும் அவரது மகன் காளிதாஸும் இணைந்து புதிய படத்தில் நடிக்கிறார்கள்.

ஆகாஷங்கள் ஆயிரம் எனப் பெயரிடப்பட்ட இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியதாக படக்குழு தெரிவித்துள்ளது.

மலையாளத்தின் மூத்த நடிகராக இருக்கும் ஜெயராம் (59 வயது) தனது மகனுடன் 22 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்து நடிக்கிறார்.

கடைசியாக இவர்கள் இருவரும் இணைந்து 2003-இல் ’என்ட வீடு அப்புவிண்டேயும்’ என்ற படத்தில் நடித்திருந்தார்கள். இதற்காக காளிதாஸுக்கு சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான கேரள அரசின் விருது கிடைத்திருந்தது.

ஆகாஷங்கள் ஆயிரம் என்ற இந்தப் படத்தினை தமிழில் ஆசைகள் ஆயிரம் என்றும் வெளியாகவிருக்கிறது.

ஸ்ரீகோகுலம் புரடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தினை ஜி.பிரஜித் இயக்குகிறார்.

இந்தப் படத்தின் கதையை ஜூட் அந்தோனி, அரவிந்த் ராஜேந்திர இணைந்து எழுதியிருக்கிறார்கள்.

ஜெயராம் கடைசியாக கேம் சேஞ்சர், ரெட்ரோ படத்திலும் நடித்திருக்க, காளிதாஸ் ஜெயராம் ராயன் படத்தில் நடித்திருந்தார்.

தமிழில் மீன் குழம்பும் மண் பானையும் படத்தில் அறிமுகமான காளிதாஸ் ஜெயராம், பாவக் கதைகள் இணையத் தொடரில் தங்கம் என்ற கதையில் சதார் என்ற திருநங்கையாக நடித்து அசத்தினார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பெரும் வெற்றிபெற்ற விக்ரம் படத்தில் கமலின் மகனாக சிறிய வேடத்தில் நடித்துள்ளார்.

Malayalam film"Akshakal Aayiram", which marks father-son duo Jayaram and Kalidas's first collaboration after 22 years, has begun production.

ஆண்டின் சிறந்த வீரர் விருது... அதிகமுறை வென்று முகமது சாலா சாதனை!

லிவர்பூல் கால்பந்து வீரர் முகமது சாலா மூன்றாவது முறையாக பிஎஃப்ஏ ஆண்டின் சிறந்த வீரர் விருதை வென்று சாதனை படைத்துள்ளார். எகிப்திய நாட்டைச் சேர்ந்த முகமது சாலா (33) இங்கிலாந்தின் பிரீமியர் லீக்கில் லிவர... மேலும் பார்க்க

அசோக் செல்வன், நிமிஷா நடிப்பில் புதிய படம்!

நடிகர்கள் அசோக் செல்வன், நிமிஷா சஜயன் நடிக்கும் புதிய படத்தின் பூஜை இன்று நடைபெற்றுள்ளது.நடிகர் அசோக் செல்வன் தமிழில் வளர்ந்துவரும் நடிகராக இருக்கிறார். அதேபோல், சித்தா மற்றும் டிஎன்ஏ திரைப்படங்களில் ... மேலும் பார்க்க

ஜெயிலர் வசூலைக் கூலி முறியடிக்குமா? திருப்பூர் சுப்பிரமணியம் பதில்!

கூலி திரைப்படம் குறித்து திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் பேசியுள்ளார்.நடிகர் ரஜினிகாந்த் நடித்த கூலி திரைப்படம் ஆக. 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. கலவையான விமர்ச... மேலும் பார்க்க

கார்த்தியுடன் இணைந்து நடிக்கும் ஜீவா?

நடிகர் கார்த்தி நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு வில்லனாக ஜீவா நடிக்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.நடிகர் கார்த்தி மெய்யழகன் வெற்றிக்குப் பின் வா வாத்தியார் படத்தின் வெளியீட்டிற்காகக் காத்திருக்... மேலும் பார்க்க

மம்மூட்டிக்கு என்ன ஆனது? மோகன்லால் பதிவால் ரசிகர்கள் நெகிழ்ச்சி!

நடிகர் மம்மூட்டி நோய் பாதிப்பிலிருந்து மீண்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.மலையாள சினிமாவின் அடையாளங்களில் ஒருவரான மம்மூட்டி 74 வயதிலும் தோற்றத்தில் இளமையாகவே இருக்கிறார். இதனால், ரசிகர்கள் பலரும் 74 வ... மேலும் பார்க்க

மகளிா் ஒருநாள் உலகக் கோப்பை: ரேணுகா உள்ளே; ஷஃபாலி வெளியே

மகளிருக்கான ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடவுள்ள இந்திய அணி 15 பேருடன் செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டது.லேசான காயம் காரணமாக மாா்ச் முதல் களம் காணாமல் இருந்த வேகப்பந்து வீச்சாளா் ரேண... மேலும் பார்க்க