செய்திகள் :

பாலியல் தொழிலுக்காகக் கடத்தல்! அமெரிக்காவில் 5 இந்தியர்கள் கைது!

post image

பாலியல் தொழிலுக்காக சிறுமிகளை கடத்திய வழக்கில் 5 இந்தியர்களை அமெரிக்க காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

அமெரிக்காவின் நெப்ராஸ்கா மாகாணத்தில் மனித கடத்தலில் ஈடுபடும் கும்பலைக் குறிவைத்து கடந்த வாரம் மிகப்பெரிய அளவிலான சோதனையை காவல்துறையினர் நடத்தினர்.

ஒமாஹா மெட்ரோ பகுதிகளில் உள்ள விடுதிகளில் நடத்தப்பட்ட சோதனையில், 12 வயதுக்குள்பட்ட 10 பேர், 17 ஆண்கள் மற்றும் பெண்கள் என மொத்தம் 27 பேரைக் காவல்துறையினர் மீட்டனர்.

இவர்களிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அனைவரும் கடத்தப்பட்டு விடுதி பணிக்காக பயன்படுத்தியது தெரியவந்துள்ளது. நீண்ட நேர வேலை, குறைவான ஊதியம், சிலருக்கு ஊதியமே வழங்கவில்லை என்பது தெரியவந்துள்ளது. மேலும், சில பெண்களையும் சிறுமிகளையும் கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த சோதனையின்போது, பாதிக்கப்பட்டவர்கள் அசுத்தமான இடத்தில் கரப்பான்பூச்சிகள் ஊர்ந்து செல்வதற்கு மத்தியில், தரையில் படுத்து உறங்கிக் கொண்டிருந்த காட்சிகளைக் கண்டதாக காவல்துறையினர் நீதிமன்றத்தில் விவரித்துள்ளனர்.

இந்த விடுதிகளை நடத்திவந்த அமெரிக்க வாழ் இந்தியர்களான கெந்தகுமார் செளத்ரி (36), ரஷ்மி அஜித் சமானி (42), அமித் செளத்ரி (32), அமித் பாபுபாய் செளத்ரி (33), மற்றும் மகேஷ்குமார் செளத்ரி (38) ஆகிய 5 பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இவர்கள் மீது ஆள் கடத்தல், பெண்களை கட்டாய பாலியல் தொழிலில் ஈடுபடுத்துதல், விசா மோசடி, கொள்ளை, போலி ஆவணங்கள் தயாரித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவர்கள் ரொக்கமாக வைத்திருந்த 5.65 லட்சம் அமெரிக்க டாலர்களை (இந்திய மதிப்பின்படி ரூ. 5 கோடி) காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

மேலும், விடுதிகள் மற்றும் அவர்களுக்கு சொந்தமான சொத்துகள் அனைத்தையும் அமெரிக்க காவல்துறையினர் முடக்கிவைத்துள்ளனர்.

US police have arrested 5 Indians in connection with sex trafficking

இதையும் படிக்க : தில்லி முதல்வர் மீது தாக்குதல்: குறைகேட்பு கூட்டத்தில் பரபரப்பு!

ஆப்கனில் பேருந்து தீப்பிடித்தது: 71 பேர் உடல் கருகி பலி!

ஆப்கானிஸ்தானில் புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்ற பேருந்து தீப்பிடித்து விபத்துக்குள்ளானதில் 71 பேர் உடல் கருகி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாகாண அரசு செய்தித் தொடர்பாளர் அஹ்மதுல்லா முத... மேலும் பார்க்க

ரஷியா - உக்ரைன் போரை நிறுத்தவே இந்தியா மீது வரி விதிப்பு: வெள்ளை மாளிகை

ரஷியா - உக்ரைன் இடையேயான போரை நிறுத்துவதற்காகவே இந்தியா மீது கூடுதல் வரியை அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்ததாக வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யும... மேலும் பார்க்க

புதிய போா் நிறுத்த திட்டம்: வெள்ளிக்கிழமை பதிலளிக்கிறது இஸ்ரேல்

காஸாவில் போா் நிறுத்தம் மேற்கொள்ளவும், அங்கு இன்னும் பிணைக் கைதிகளாகப் பிடித்துவைக்கப்பட்டுள்ள அனைவரையும் விடுவிக்கவும் மத்தியஸ்தா்களால் புதிதாக முன்வைக்கப்பட்டு, ஹமாஸ் படையினரால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள... மேலும் பார்க்க

பாகிஸ்தான் கனமழை: உயிரிழப்பு 706-ஆக உயா்வு

பாகிஸ்தானின் வடமேற்கு பகுதிகளில் ஜூன் 26 முதல் பெய்துவரும் அளவுக்கு அதிகமான மழை காரணமாக உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை 706-ஆக உயா்ந்தது. இது குறித்து தேசிய பேரிடா் மேலாண்மை அமைப்பு கூறியத... மேலும் பார்க்க

புதின்-ஸெலென்ஸ்கி பேச்சுவாா்த்தை: ஏற்பாடுகளைத் தொடங்கினாா் டிரம்ப்

வாஷிங்டன், ஆக. 19: உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர ரஷிய அதிபா் விளாதிமிா் புதினுக்கும், உக்ரைன் அதிபா் வோலோதிமிா் ஸெலென்ஸ்கிக்கும் இடையே நேரடி பேச்சுவாா்த்தை நடத்துவதற்கான ஏற்பாடுகளைத் தொடங்கியுள்ளதா... மேலும் பார்க்க

காஸாவில் சண்டை நிறுத்தத்துக்கு ஹமாஸ் சம்மதம்! இஸ்ரேலின் பதிலை எதிர்நோக்கி...

காஸாவில் சண்டை நிறுத்தம் ஏற்பட முன்மொழியப்பட்டுள்ள ஒப்பந்தத்துக்கு ஹமாஸ் தரப்பால் திங்கள்கிழமை இரவில் சம்மதம் தெரிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், அடுத்தக்கட்டமாக, இஸ்ரேல் தரப்பின் பதிலுக்காக காத்திருக்கிற... மேலும் பார்க்க