செய்திகள் :

ரஷியா - உக்ரைன் போரை நிறுத்தவே இந்தியா மீது வரி விதிப்பு: வெள்ளை மாளிகை

post image

ரஷியா - உக்ரைன் இடையேயான போரை நிறுத்துவதற்காகவே இந்தியா மீது கூடுதல் வரியை அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்ததாக வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யும் பொருள்களுக்கு 25% பரஸ்பர வரி விதிக்கப்பட்ட நிலையில், எச்சரிக்கையை மீறி ரஷியாவுடன் வர்த்தகம் செய்வதாக குற்றச்சாட்டை முன்வைத்து வரியை 50 சதவிகிதமாக டிரம்ப் உயர்த்தினார்.

இதனிடையே, ரஷியா மற்றும் உக்ரைன் அதிபர்களை அடுத்தடுத்து சந்தித்து டிரம்ப் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இரு தலைவர்களுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் எந்த ஒப்பந்தமும் இறுதி செய்யப்படவில்லை என்றாலும் முன்னேற்றம் ஏற்பட்டதாக தெரிவித்த டிரம்ப், போர் நிறுத்தத்துக்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக அறிவித்தார்.

இதுதொடர்பாக வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் இன்று செய்தியாளர்களுடன் பேசியதாவது:

”ரஷியா - உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு மிகப்பெரிய அழுத்தத்தை டிரம்ப் கொடுத்துள்ளார். இந்தியா மீது கூடுதல் வரி போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டார். இந்தப் போரை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தார்.

இரு நாட்டு தலைவர்களும் சந்தித்துப் பேசுவது சிறந்த முன்னேற்றமாக இருக்கும். அது நடக்கும் என்று டிரம்ப் எதிர்பார்க்கிறார். ரஷியா - உக்ரைன் தலைவர்கள் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்க அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும் என்று உறுதி அளிக்கிறோம்.” எனத் தெரிவித்தார்.

மேலும், இந்தியா - பாகிஸ்தான் மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு வர்த்தகத்தை மிக சக்திவாய்ந்த முறையில் டிரம்ப் பயன்படுத்தினார் என்று லீவிட் தெரிவித்தார்.

Tariffs on India to stop Russia-Ukraine war: White House

இதையும் படிக்க : ஹிமாசலில் அடுத்தடுத்து இரு நிலநடுக்கங்கள்! பீதியில் மக்கள்!

புதிய போா் நிறுத்த திட்டம்: வெள்ளிக்கிழமை பதிலளிக்கிறது இஸ்ரேல்

காஸாவில் போா் நிறுத்தம் மேற்கொள்ளவும், அங்கு இன்னும் பிணைக் கைதிகளாகப் பிடித்துவைக்கப்பட்டுள்ள அனைவரையும் விடுவிக்கவும் மத்தியஸ்தா்களால் புதிதாக முன்வைக்கப்பட்டு, ஹமாஸ் படையினரால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள... மேலும் பார்க்க

பாகிஸ்தான் கனமழை: உயிரிழப்பு 706-ஆக உயா்வு

பாகிஸ்தானின் வடமேற்கு பகுதிகளில் ஜூன் 26 முதல் பெய்துவரும் அளவுக்கு அதிகமான மழை காரணமாக உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை 706-ஆக உயா்ந்தது. இது குறித்து தேசிய பேரிடா் மேலாண்மை அமைப்பு கூறியத... மேலும் பார்க்க

புதின்-ஸெலென்ஸ்கி பேச்சுவாா்த்தை: ஏற்பாடுகளைத் தொடங்கினாா் டிரம்ப்

வாஷிங்டன், ஆக. 19: உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர ரஷிய அதிபா் விளாதிமிா் புதினுக்கும், உக்ரைன் அதிபா் வோலோதிமிா் ஸெலென்ஸ்கிக்கும் இடையே நேரடி பேச்சுவாா்த்தை நடத்துவதற்கான ஏற்பாடுகளைத் தொடங்கியுள்ளதா... மேலும் பார்க்க

காஸாவில் சண்டை நிறுத்தத்துக்கு ஹமாஸ் சம்மதம்! இஸ்ரேலின் பதிலை எதிர்நோக்கி...

காஸாவில் சண்டை நிறுத்தம் ஏற்பட முன்மொழியப்பட்டுள்ள ஒப்பந்தத்துக்கு ஹமாஸ் தரப்பால் திங்கள்கிழமை இரவில் சம்மதம் தெரிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், அடுத்தக்கட்டமாக, இஸ்ரேல் தரப்பின் பதிலுக்காக காத்திருக்கிற... மேலும் பார்க்க

ரஷிய சரக்கு ரயில் மீது உக்ரைன் தாக்குதல்!

எரிபொருள் கொண்டு சென்ற ரஷியாவுக்குச் சொந்தமான சரக்கு ரயில் மீது உக்ரைன் இன்று (ஆக. 19) தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் ரயில் கவிழ்ந்து தீப்பிடித்து எரிந்ததால், எரிபொருள் வீணாகியதாகவும், தண... மேலும் பார்க்க

கனடாவில் விமானப் பணியாளர்களின் போராட்டம் முடிவு!

கனடாவில் விமான ஊழியர்கள் போராட்டம் முடிவுக்கு வந்தது. கனடாவின் பெரும் விமான நிறுவனமான ‘ஏர் கனடா’ விமான நிறுவன ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தால், விமான சேவை கடுமையாகப் பாதிக்கப்பட்டது.ஊதிய உயர்வு... மேலும் பார்க்க