ஷ்ரேயாஸ் ஐயர் தேர்வு செய்யப்படாதது நன்றியற்றது: அஸ்வின் ஆதங்கம்!
இன்று நாடாளுமன்றத்தில் 3 முக்கிய மசோதாக்கள் தாக்கல்; என்னென்ன மசோதாக்கள், அவை எதற்காக?
3 முக்கிய மசோதாக்கள்
இன்று நாடாளுமன்றத்தில் 3 முக்கிய மசோதாக்கள் தாக்கலை பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசு அறிமுகப்படுத்தவுள்ளது.
குற்றங்களில் ஈடுபடும் பிரதமர், மத்திய அமைச்சர்கள், முதல்வர் ஆகியோரை பதவி நீக்கம் செய்வதற்கான மசோதா
ஆன்லைன் கேமிங் ஊக்குவிப்பு மற்றும் ஒழுங்குமுறை மசோதா
ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து
உள்ளிட்ட மூன்று மசோதாக்கள் இன்றைய நாடாளுமன்றத்தில் இடம்பெறும் என்று கூறப்படுகிறது.

பதவி நீக்கம் செய்வதற்கான மசோதா
பிரதமர், மத்திய அமைச்சர்கள், முதல்வர் ஆகியோர் கடுமையான குற்றங்களில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டால், அவர்களைப் பதவி நீக்கம் செய்வதற்கான மசோதாக்களை நாடாளுமன்றத்தில் புதன்கிழமை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படக் கூடிய குற்றங்களில் கைது செய்யப்பட்டு தொடர்ந்து 30 நாள்கள் காவலில் வைக்கப்பட்டால், 31-ஆவது நாள் அவர்கள் பதவிநீக்கம் செய்யப்படுவர்.
இதற்காக யூனியன் பிரதேச அரசு திருத்த மசோதா 2025, அரசமைப்பு (130- ஆவது திருத்தம்) மசோதா 2025, ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு திருத்த மசோதா 2025 ஆகிய 3 மசோதாக்களை நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
ஆன்லைன் கேமிங் மசோதா
மத்திய அரசு ‘ஆன்லைன் கேமிங் ஊக்குவிப்பு மற்றும் ஒழுங்குமுறை மசோதா, 2025’-ஐ பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது.
ஏற்கெனவே தமிழ்நாடு, ஹரியானா, தெலுங்கானா, நாகாலாந்து, மேகாலயா உள்ளிட்ட பல மாநிலங்கள் ஆன்லைன் விளையாட்டுகளை கட்டுப்படுத்தும் விதமாக தனித்தனிச் சட்டங்கள் உள்ள நிலையில், மத்திய அரசு ஒரே சட்டமாக கொண்டு வர இம்மசோதாவை அறிவித்துள்ளது.
இந்த மசோதா இ-ஸ்போர்ட்ஸ், கல்வி மற்றும் சமூக விளையாட்டுகளை ஊக்குவித்து ஒழுங்குபடுத்துவது, ஆன்லைன் சூதாக இருக்கும் பணவிளையாட்டுகளைத் தடைசெய்து, இளைஞர்கள் மற்றும் பாதிக்கப்படக்கூடிய மக்களை சமூக–பொருளாதார பாதிப்புகளிலிருந்து பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது இம்மசோதா.

ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து
ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய, அரசியலமைப்பு சட்டப்பிரிவு 370-ஐ, கடந்த 2019 ஆகஸ்ட் 5-ஆம் தேதி மத்திய பா.ஜ.க அரசு ரத்து செய்தது.
இதையடுத்து அம்மாநிலம், ஜம்மு - காஷ்மீர், லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன. இந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை 2023 டிசம்பரில் உச்ச நீதிமன்றம் உறுதி செய்து, விரைவில் மாநில அந்தஸ்து வழங்கும்படி வலியுறுத்தியிருந்தது.
அந்த சமயத்தில் முதல்வர் ஒமர் அப்துல்லா உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பலரும் இதே கோரிக்கையை மத்திய அரசுக்கு முன்வைத்தனர்.
பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் ஜம்மு - காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து மீண்டும் அளிக்கப்படும் என தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் ஜம்மு - காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்குவது தொடர்பான மசோதா இன்று தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs