செய்திகள் :

``கைது செய்யப்பட்டாலே பிரதமர், முதல்வர், அமைச்சர்களைப் பதவி நீக்க மசோதா'' - மத்திய அரசு அதிரடி

post image

இன்று நாடாளுமன்றத்தில் 3 முக்கிய மசோதாக்கள் தாக்கலை பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசு அறிமுகப்படுத்தவுள்ளது.

இதில் முக்கியமாக பிரதமர், மத்திய அமைச்சர்கள், முதல்வர் ஆகியோர் கடுமையான குற்றங்களில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டால், அவர்களைப் பதவி நீக்கம் செய்வதற்கான மசோதாக்களை நாடாளுமன்றத்தில் புதன்கிழமை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

பிரதமர் மோடி

குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படக் கூடிய குற்றங்களில் கைது செய்யப்பட்டு தொடர்ந்து 30 நாள்கள் காவலில் வைக்கப்பட்டால், 31-ஆவது நாள் அவர்கள் பதவிநீக்கம் செய்யப்படுவர். இதற்கு முன்பு வரை முதல்வர் அல்லது அமைச்சர்களுக்கு நீதிமன்றங்கள் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தால் மட்டுமே அவர்கள் பதவியை இழப்பார்கள்.

இதற்காக யூனியன் பிரதேச அரசு திருத்த மசோதா 2025, அரசமைப்பு (130- ஆவது திருத்தம்) மசோதா 2025, ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு திருத்த மசோதா 2025 ஆகிய 3 மசோதாக்களை நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

மோடி, அமித் ஷா

இந்த மசோதா நிறைவேறினால், பிரதமர், முதலமைச்சர், அமைச்சர்கள் பதவிக்காலத்தில் தொடர்ந்து 30 நாட்கள் கைது செய்யப்பட்டுக் காவலில் வைக்கப்பட்டால், 31-வது நாளில் அவர்கள் தானாகவே பதவியை இழப்பார் என்று கூறப்படுகிறது.

அரசியலமைப்பு ஒழுக்கத்தைப் பாதுகாக்கவும், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மீதான நம்பிக்கையை உறுதி செய்யவும் இச்சட்டம் கொண்டுவரப்படுவதாகக் கூறப்படுகிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

இன்று நாடாளுமன்றத்தில் 3 முக்கிய மசோதாக்கள் தாக்கல்; என்னென்ன மசோதாக்கள், அவை எதற்காக?

3 முக்கிய மசோதாக்கள்இன்று நாடாளுமன்றத்தில் 3 முக்கிய மசோதாக்கள் தாக்கலை பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசு அறிமுகப்படுத்தவுள்ளது. குற்றங்களில் ஈடுபடும் பிரதமர், மத்திய அமைச்சர்கள், முதல்வர் ஆகியோரை பதவி நீ... மேலும் பார்க்க

TVK: தவெக மாநாட்டு பேனரில் அண்ணா, எம்ஜிஆர் படங்கள் ஏன்? - தவெக நிர்மல்குமார் பதில்

மதுரை தவெக மாநாடுமதுரையில் தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு நாளை ஆகஸ்ட் 21-ம் தேதி நடக்கவுள்ளது. 500 ஏக்கரில் மாநாட்டுக்கான திடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், சுமார் 10 லட்சம் தொண்டர்க... மேலும் பார்க்க

₹33,000 கோடி சந்தையை கட்டுப்படுத்தப் போகும் சட்டம்; `ஆன்லைன் கேமிங் மசோதா' - ஏன்? எதற்காக?

ஆன்லைன் கேமிங்இந்தியாவில் ஆன்லைன் கேமிங் துறை வேகமாக வளர்ந்து வரும் சூழலில், பணவிளையாட்டுகள் மூலமாக சமூக - பொருளாதார சிக்கல்கள் அதிகரித்து வருவதை கவனத்தில் கொண்டு, மத்திய அரசு ‘ஆன்லைன் கேமிங் ஊக்குவிப... மேலும் பார்க்க

``கூட்டணி அழுத்ததால் நம்பி நிற்கும் மக்களுக்கு அநீதி இழைக்கிறார் திருமா!" - NTK வெண்ணிலா தாயுமானவன்

"தூய்மைப் பணியாளர்கள் 13 நாட்கள் போராட்டத்தையும் பேச்சுவார்த்தையும் முன்னெடுத்த நிலையில் அது தோல்வியில் முடிந்திருக்கிறதே!""தூய்மைப் பணியாளர்களின் போராட்டத்தை கையாள்வதில் தி.மு.க அரசுதான் அப்பட்டமாக த... மேலும் பார்க்க

சென்சார் போர்டை எதிர்த்து வெற்றிமாறன் போட்ட வழக்கு; மனுஷி படத்தை பார்வையிடும் நீதிபதி

மனுஷி படத்தில் இடம்பெற்றுள்ள ஆட்சேபகரமான காட்சிகளை நீக்க கூறியதை எதிர்த்து தயாரிப்பாளர் வெற்றிமாறன் தாக்கல் செய்த வழக்கில், படத்தை ஆகஸ்ட் 24 ஆம் தேதி பார்வையிட உள்ளார், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந... மேலும் பார்க்க

குடியரசு துணைத் தலைவர்: ’அரசியல் பின்புலம் இல்லாத ஒருவரை.!’ - கார்கே வீட்டு கூட்டத்தின் பின்னணி

துணை குடியரசுத் தலைவர் வேட்பாளராக அரசியல் பின்புலம் இல்லாத ஒருவரை நிறுத்த இந்தியா கூட்டணி கட்சிகள் முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. குடியரசு துணைத் தலைவர் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன... மேலும் பார்க்க