செய்திகள் :

``அப்பாகூட கடவுளை பார்க்க போறோம்'' - தந்தையுடன் உயிரை மாய்த்த குழந்தைகள்; கடலூரில் நடந்த சோகம்

post image

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த காட்டாண்டிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ராஜகுரு, சுகன்யா தம்பதியினர்.

இவர்களுக்கு 12 வயதில் ஒரு மகனும், 7 வயதில் ஒரு மகளும் இருந்தனர். கடந்த மாதம் கணவன் மனைவிக்கு இடையே நடந்த கருத்து வேறுபாடு காரணமாக வீட்டில் கழிவறையை சுத்தப்படுத்த வைத்திருந்த ஆசிட்டை குடித்து தற்கொலைக்கு முயற்சித்தார் சுகன்யா . அதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற சுகன்யா, கடந்த ஒன்றரை மாதமாக தன்னுடைய தாயார் வீட்டில் வசித்து வருகிறார்.

Representational Image

குழந்தைகள் குமரகுரு, தாரணிஸ்ரீ இருவரும் காடாம்புலியூரில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்த நிலையில், நேற்று முன்தினம் இருவரும் பள்ளிக்கு செல்லவில்லை. அன்று மதியம் தன்னுடைய உறவினர்களுக்கு ராஜா, அவரது மகன் குமரகுரு, தாரணிஸ்ரீ ஆகிய 3 பேரும் வாட்ஸ் அப்பில் ஒரு வாய்ஸ் மெசஜ் போட்டிருந்தனர்.

வாய்ஸ்மெசஜ்

அதில் பேசும் ராஜா, "நான் படித்த முட்டாள். தப்பான முடிவை எடுக்கிறேன். மன்னித்து விடுங்கள்" என்று கூறியிருந்தார். அதேபோல குழந்தைகள் குமரகுரு, தாரணிஸ்ரீ இருவரும், "நாங்கள் அப்பாவுடன் கடவுளை பார்க்க போகிறேன்" என வாய்ஸ்மெசஜ் போட்டிருந்தனர்.

அதைக் கேட்டு அதிர்ந்த உறவினர்கள் உடனடியாக பண்ருட்டி இந்திராகாந்தி சாலையில் உள்ள அவரது வீட்டிற்கு வந்து பார்த்த போது, அங்கு ராஜகுரு, குமரகுரு, தாரணிஶ்ரீ ஆகிய மூவரும் ஒரே துாக்கில் சடலமாக தொங்கிக் கொண்டிருந்தனர்.

சடலம்

குடும்ப பிரச்னை காரணமா?

தகவலறிந்த பண்ருட்டி போலீஸார் 3 பேரின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பண்ருட்டி போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர்.

போலீஸாரின் முதல் கட்ட விசாரணையில் குடும்ப பிரச்னை காரணமாக ராஜா, தனது குழந்தைகளுடன் இந்த விபரீத செயலை செய்திருக்கலாம் என தெரிய வந்துள்ளது.

Delhi CM: டெல்லி முதல்வர் ரேகாவை தாக்கிய குஜராத் இளைஞர் கைது; நடந்த சம்பவத்திற்கு காரணம் என்ன?

டெல்லி முதல்வர் ரேகா குப்தா மீது தாக்குதல் டெல்லி முதல்வர் ரேகா குப்தா இன்று காலையில் தனது வீட்டில் வாராந்திர மக்கள் குறை கேட்பு நிகழ்ச்சியை நடத்திக்கொண்டிருந்தார். அந்நேரம் அங்கு வந்த ஒருவர் முதல்வர்... மேலும் பார்க்க

NIA Raid: திண்டுக்கல்லில் 8 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை; காரணம் என்ன?

தஞ்சாவூர் மாவட்டம் திருப்புவனத்தில், பாமகவை சேர்ந்த ராமலிங்கம் என்பவர் 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். மத மாற்றம் செய்வதை கண்டித்ததற்காக ராமலிங்கம் கொலை செய்யபட்டதா... மேலும் பார்க்க

நாமக்கல்: கிட்னி விற்பனையைத் தொடர்ந்து கல்லீரல் விற்பனை; பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த அதிர்ச்சி தகவல்

நாமக்கல் மாவட்டத்தில் சட்டவிரோதமாக கிட்னி விற்பனையைத் தொடர்ந்து கல்லீரல் விற்பனை நடந்துள்ளது. நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அலமேடு பகுதியைச் சேர்ந்தவர் தேவி. இவரது கணவர் பிரிந்து சென்ற நிலையில், 18 வ... மேலும் பார்க்க

ராஜஸ்தான்: கணவனைக் கொன்று டிரமில் உப்பு போட்டு அடைத்து தப்பி ஓடிய பெண்; காதலனுடன் சிக்கியது எப்படி?

ராஜஸ்தான் மாநிலத்தில் கைர்தல்-திஜாரா என்ற இடத்தில் வசிப்பவர் சுனிதா. இவருக்குத் திருமணமாகி மூன்று குழந்தைகள் இருக்கின்றன. அவர்கள் அங்கு வாடகை வீட்டில் வசித்து வந்தனர். இவரது கணவர் ஹன்ஸ்ராம் அங்குள்ள ச... மேலும் பார்க்க

செல்போனில் மூழ்கியதை கண்டித்த தாய்; 7 மாதக் குழந்தையுடன் குளத்தில் குதித்து தற்கொலை செய்த இளம்பெண்!

கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை அருகே உள்ள சரல்விளையில் வசித்து வருபவர்அப்துல்கலாம் ஆசாத். இவருக்கு சாரா என்ற மனைவியும், இரண்டு மகன்களும், ஒரு மகளும் இருந்தனர். பி.ஏ பட்டதாரியான மகள் ஷர்மி (வயது 26) என்... மேலும் பார்க்க

போலீஸை டோரில் தொங்க விட்டு டெம்போவை ஓட்டிய டிரைவர்; நடுரோட்டில் அதிர்ச்சி சம்பவம் - என்ன நடந்தது?

வாகன சோதனையில் போலீசார்கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் அமைந்துள்ளது பத்மநாபபுரம் போக்குவரத்து காவல் நிலையம். டிராபிக் சப் இன்ஸ்பெக்டர் அசோக் தலைமையில், போலீசார் நேற்று முன்தினம் இரவு தக்கலை பழைய பேரு... மேலும் பார்க்க