செய்திகள் :

சிறுவன் பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு 14 ஆண்டுகள் சிறை!

post image

ஆவடி அருகே 7 வயது சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்தும் புதன்கிழமை திருவள்ளூர் மாவட்ட போக்ஸோ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அருகே முத்தாப்புதுப் பேட்டையைச் சேர்ந்தவர் 7 வயது சிறுவன். கடந்த 14.4.2023 அன்று அதே பகுதியைச் சேர்ந்த திருமால் மகன் பிரவீன்(19) சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து சிறுவன் பெற்றோரிடம் தெரிவித்ததால், இதுதொடர்பாக பட்டாபிராம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் பிரவீன் மீது போலீஸார் வழக்குப் பதிந்து கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உள்படுத்தினர். மேலும், இந்த வழக்கு விசாரணையும் கடந்த 2 ஆண்டுகளாக திருவள்ளூர் மாவட்ட போக்ஸோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் இறுதியாக போக்ஸோ நீதிபதி உமா மகேஸ்வரி முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் குற்றம் நிருபிக்கப்பட்டதால் பிரவீனுக்கு 14 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்தும் நீதிபதி தீர்ப்பு வழங்கினார். அதைத்தொடர்ந்து அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் இளைஞரைப் பாதுகாப்பாக அழைத்துச் சென்று புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

The Thiruvallur District POCSO Court on Wednesday sentenced a youth to 14 years in prison and a fine of Rs. 25,000 for sexually assaulting a 7-year-old boy near Avadi.

கொள்ளிடம் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

மேட்டூர் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டியதால் கொள்ளிடம் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று(ஆகஸ்ட் 20) காலை 8.00 மணியளவில் அதன் முழு க... மேலும் பார்க்க

தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்கும் தீர்மானத்தை ரத்து செய்ய முடியாது: உயர் நீதிமன்றம்

சென்னை: சென்னை மாநகராட்சியின் இரண்டு மண்டலங்களில் தூய்மை பணிகளை தனியாருக்கு வழங்கும் வகையில் மாநகராட்சி நிறைவேற்றிய தீர்மானத்தை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.சென்னை மாநகராட்சியின், ... மேலும் பார்க்க

மதிமுகவில் இருந்து மல்லை சத்யா தற்காலிக நீக்கம்!

மதிமுக துணை பொதுச் செயலாளர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் மல்லை சத்யாவை தற்காலிகமாக நீக்குவதாக அந்த கட்சியின் தலைவர் வைகோ அறிவித்துள்ளார்.மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோவுக்கும் மல்லை சத்யாவ... மேலும் பார்க்க

இல.கணேசனுக்கு நாளை புகழஞ்சலி கூட்டம்

மறைந்த நாகாலாந்து ஆளுநர் இல.கணேசனுக்கு புகழஞ்சலி கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கில் வியாழக்கிழமை (ஆக.21) மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளது. நாகாலாந்து ஆளுநராக இருந்த இல.கணேசன் உடல் நலக்குறைவால் கடந்த ஆக.15-ஆ... மேலும் பார்க்க

எஸ்.ஐ. பணியிடம்: பதவி உயா்வு, நேரடி நியமனத்துக்கு இனி பொதுவான தோ்வு: தமிழக அரசு உத்தரவு

காவல் உதவி ஆய்வாளா் காலிப் பணியிடங்களை நிரப்ப பின்பற்றப்படும் பதவி உயா்வு, நேரடி நியமனம் போன்ற நடைமுறைகளுக்கு இனி பொதுவான தோ்வு முறை பின்பற்றப்படும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான உத்தரவை உள... மேலும் பார்க்க

வார இறுதி விடுமுறைக்கு 1,040 சிறப்பு பேருந்துகள்

வார இறுதி விடுமுறை தினங்களை சனிக்கிழமை (ஆக.23) மற்றும் ஞாயிற்றுக்கிழமை (ஆக.24) முன்னிட்டு கூடுதலாக 1,040 சிறப்பு பேருந்துகளை இயக்கப்படவுள்ளதாக அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது. சென்னை க... மேலும் பார்க்க