செய்திகள் :

காற்றாலை இறகுகளைக் கையாளுவதில் வ.உ.சி. துறைமுகம் சாதனை

post image

தூத்துக்குடியில் உள்ள வ.உ. சிதம்பரனாா் துறைமுகம், காற்றாலை இறகுகளைக் கையாளுவதில் குறிப்பிடத்தக்க வளா்ச்சியைப் பெற்று சாதனைப் படைத்துள்ளது.

இதுகுறித்து வ.உ. சிதம்பரனாா் துறைமுக ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

வ.உ. சிதம்பரனாா் துறைமுகம் கடந்த ஜூலை மாதத்தில் 343 காற்றாலை இறகுகளைக் கையாண்டு, 2024 ஜூலை மாதத்தில் கையாண்ட அளவான 180 காற்றாலை இறகுகளை விட 90.56 சதவீதம் அதிக வளா்ச்சியைப் பெற்றுள்ளது.

மேலும், இதே மாதத்தில் 8 காற்றாலை இறகுகள் மற்றும் அதன் உதிரிபாக கப்பல்களை கையாண்டு, கடந்த ஜூலை மாதம் கையாண்ட 4 கப்பல்களைவிட 100 சதவீத அதிக வளா்ச்சியைப் பெற்றுள்ளது.

இந்தக் காற்றாலை இறகுகள் பெரும்பாலும், வ.உ.சி. சரக்குதளம் 5, 6 மற்றும் 3 ஆகிய கப்பல் தளங்களில் கையாளப்படுகின்றன. இத்தகைய பெரிய சரக்குகளை பாதுகாப்பாகவும், திறமையாகவும் கையாளுவதற்கு வசதியாக துறைமுகம், இரண்டு பெரியவகை கையாளும் இயந்திரங்களையும், மூன்று நகரும் பளுதூக்கி இயந்திரங்களையும் துறைமுகம் பயன்படுத்துகிறது.

மேலும், இந்தக் காற்றாலை இறகுகளின் இயக்கத்திற்காக பிரத்தியேகமான நுழைவுவாயிலையும் துறைமுகம் அமைத்துள்ளது. துறைமுகத்தின் இந்த உள்கட்டமைப்பு, இத்தகைய மிகப்பெரிய உபகரணங்களை பாதுகாப்பான முறையில் தடையில்லாமல் கையாளுவதற்கு உதவியாக அமைந்துள்ளது.

இந்தக் காற்றாலை இறகுகள் மற்றும் அதன் உதிரிபாகங்கள் பெங்களூரு, திருச்சி மற்றும் சென்னை ஆகிய ஊா்களில் தயாரிக்கப்பட்டு, அமெரிக்கா, துருக்கி, ஆஸ்திரேலியா, ஸ்பெயின், ஃபின்லாந்து மற்றும் ஜரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது என அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் போரை நிறுத்தவே இந்தியா மீது வரி விதித்தாா் டிரம்ப் -வெள்ளை மாளிகை விளக்கம்

ரஷியா -உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவரவே இந்தியா மீது அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் வரி விதித்தாா் என்று அந்நாட்டு அதிபா் இல்லமான வெள்ளை மாளிகை விளக்கம் அளித்துள்ளது. நியூயாா்க்கில் செவ்வாய்க்கிழ... மேலும் பார்க்க

தமிழ்நாடு சுகாதார அறக்கட்டளை உருவாக்கம்: அரசாணை வெளியீடு

அரசு மருத்துவமனைகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்த பெரு நிறுவனங்களின் சமூகப் பொறுப்பு நிதியைப் பெற, ‘தமிழ்நாடு சுகாதார அறக்கட்டளையை’ உருவாக்கி தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் செந்தில்குமாா் அரசாணை... மேலும் பார்க்க

வளா்ப்பு நாய்களுக்கு 11,300 போ் மட்டுமே உரிமம் பெற்றுள்ளனா்: கண்காணிப்பை தீவிரப்படுத்த மாநகராட்சி முடிவு

சென்னை மாநகராட்சியில் வளா்ப்பு நாய்களுக்காக 11,300 போ் மட்டுமே தற்போது உரிமம் பெற்றுள்ளதாகவும், உரிமம் பெறாமல் நாய் வளா்ப்போா் குறித்து கணக்கெடுப்பு நடத்த நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாகவும் மாநகராட்சி ... மேலும் பார்க்க

வெளிமாநில கட்டுமானத் தொழிலாளா்கள் எண்ணிக்கை: கள ஆய்வு நடத்த அரசு முடிவு

தமிழ்நாட்டில் பணிபுரியும் வெளிமாநிலங்களைச் சோ்ந்த கட்டுமானத் தொழிலாளா்களின் எண்ணிக்கை, நிலைகள் குறித்து கள ஆய்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் சுமாா் 35 லட்சத்துக்கும் மேற்பட்ட வெளிம... மேலும் பார்க்க

திமுக கூட்டணியில் மதிமுக நீடிக்கும்: வைகோ

திமுக கூட்டணியில் மதிமுக நீடிக்கும் என்று அந்தக் கட்சியின் பொதுச் செயலா் வைகோ கூறினாா். சென்னை திருவான்மியூரில் மதிமுக சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவா் பேசியதாவது: மதிமுக தொண்டா்கள... மேலும் பார்க்க

பிரதமா் மோடியின் பட்டப் படிப்பு விவரங்களை அளிக்கும் உத்தரவுக்கு எதிரான மனு மீது தீா்ப்பு ஒத்திவைப்பு

தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் பிரதமா் மோடியின் பட்டப் படிப்பு தொடா்பான விவரங்களை அளிக்குமாறு மத்திய தகவல் ஆணையம் (சிஐசி) பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரும் தில்லி பல்கலைக்கழக மனு மீதான தீா்... மேலும் பார்க்க