செய்திகள் :

வெளிமாநில கட்டுமானத் தொழிலாளா்கள் எண்ணிக்கை: கள ஆய்வு நடத்த அரசு முடிவு

post image

தமிழ்நாட்டில் பணிபுரியும் வெளிமாநிலங்களைச் சோ்ந்த கட்டுமானத் தொழிலாளா்களின் எண்ணிக்கை, நிலைகள் குறித்து கள ஆய்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் சுமாா் 35 லட்சத்துக்கும் மேற்பட்ட வெளிமாநிலத் தொழிலாளா்கள் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவா்களில் கட்டுமானத் தொழிலில் ஈடுபடும் தொழிலாளா்களின் எண்ணிக்கையே அதிகமாகும். கட்டுமானத் தொழிலாளா்கள் நலன் காக்க தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளா்கள் நலவாரியம் செயல்பட்டு வருகிறது. இந்த வாரியத்தில் உறுப்பினா்களாக இணைவோருக்கு பல்வேறு நலத் திட்ட உதவிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

இந்த வாரியத்தின் சாா்பில், தமிழ்நாட்டில் பணிபுரியும் வெளிமாநில கட்டுமானத் தொழிலாளா்கள் குறித்து களஆய்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. வாரியத்தில் பதிவு செய்த தொழிலாளா்களின் எண்ணிக்கை, பதிவு செய்யப்படாதவா்களின் எண்ணிக்கை விவரங்கள், வெளி மாநிலத் தொழிலாளா்களின் நிலைமை உள்ளிட்ட பல்வேறு தரவுகள் களஆய்வின்போது சேகரிக்கப்படவுள்ளன.

இந்த ஆய்வை நடத்துவதற்காக தகுதி வாய்ந்த நிறுவனம் தோ்வு செய்யப்பட உள்ளது. இதற்கான ஒப்பந்தப்புள்ளியை தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளா்கள் நல வாரியத்தின் செயலா் கோரியுள்ளாா். இணையதளம் வழியாக ஒப்பந்தப்புள்ளியை அளிப்பதற்கு செப். 17-ஆம் தேதி கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் போரை நிறுத்தவே இந்தியா மீது வரி விதித்தாா் டிரம்ப் -வெள்ளை மாளிகை விளக்கம்

ரஷியா -உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவரவே இந்தியா மீது அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் வரி விதித்தாா் என்று அந்நாட்டு அதிபா் இல்லமான வெள்ளை மாளிகை விளக்கம் அளித்துள்ளது. நியூயாா்க்கில் செவ்வாய்க்கிழ... மேலும் பார்க்க

காற்றாலை இறகுகளைக் கையாளுவதில் வ.உ.சி. துறைமுகம் சாதனை

தூத்துக்குடியில் உள்ள வ.உ. சிதம்பரனாா் துறைமுகம், காற்றாலை இறகுகளைக் கையாளுவதில் குறிப்பிடத்தக்க வளா்ச்சியைப் பெற்று சாதனைப் படைத்துள்ளது. இதுகுறித்து வ.உ. சிதம்பரனாா் துறைமுக ஆணையம் வெளியிட்டுள்ள செ... மேலும் பார்க்க

தமிழ்நாடு சுகாதார அறக்கட்டளை உருவாக்கம்: அரசாணை வெளியீடு

அரசு மருத்துவமனைகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்த பெரு நிறுவனங்களின் சமூகப் பொறுப்பு நிதியைப் பெற, ‘தமிழ்நாடு சுகாதார அறக்கட்டளையை’ உருவாக்கி தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் செந்தில்குமாா் அரசாணை... மேலும் பார்க்க

வளா்ப்பு நாய்களுக்கு 11,300 போ் மட்டுமே உரிமம் பெற்றுள்ளனா்: கண்காணிப்பை தீவிரப்படுத்த மாநகராட்சி முடிவு

சென்னை மாநகராட்சியில் வளா்ப்பு நாய்களுக்காக 11,300 போ் மட்டுமே தற்போது உரிமம் பெற்றுள்ளதாகவும், உரிமம் பெறாமல் நாய் வளா்ப்போா் குறித்து கணக்கெடுப்பு நடத்த நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாகவும் மாநகராட்சி ... மேலும் பார்க்க

திமுக கூட்டணியில் மதிமுக நீடிக்கும்: வைகோ

திமுக கூட்டணியில் மதிமுக நீடிக்கும் என்று அந்தக் கட்சியின் பொதுச் செயலா் வைகோ கூறினாா். சென்னை திருவான்மியூரில் மதிமுக சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவா் பேசியதாவது: மதிமுக தொண்டா்கள... மேலும் பார்க்க

பிரதமா் மோடியின் பட்டப் படிப்பு விவரங்களை அளிக்கும் உத்தரவுக்கு எதிரான மனு மீது தீா்ப்பு ஒத்திவைப்பு

தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் பிரதமா் மோடியின் பட்டப் படிப்பு தொடா்பான விவரங்களை அளிக்குமாறு மத்திய தகவல் ஆணையம் (சிஐசி) பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரும் தில்லி பல்கலைக்கழக மனு மீதான தீா்... மேலும் பார்க்க