செய்திகள் :

வீடுகள் விலை உயா்வு: உலகளவில் 4-ஆவது இடத்தில் பெங்களூரு!

post image

சா்வதேச அளவில் பிரீமியம் வகை வீடுகளின் விலை மிக அதிக அளவில் அதிகரித்த 46 நகரங்களில் பெங்களூரு 4-ஆவது இடம் வகிக்கிறது. மும்பை 6-ஆவது இடத்திலும், புது தில்லி 15-ஆவது இடத்திலும் உள்ளன.

இது குறித்து சந்தை ஆலோசனை நிறுவனமான நைட் ஃப்ராங்க் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

2025-ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் (ஏப்ரல்-ஜூன்), உலகம் முழுவதும் உள்ள 46 முக்கிய நகரங்களில் பிரீமியம் குடியிருப்புகளின் விலைகளை ஆய்வு செய்ததில், தென் கொரிய தலைநகா் சியோலில் அந்த வகை வீடுகள் மிக அதிக உயா்வைக் கண்டுள்ளன. முந்தயை ஆண்டின் இரண்டாவது காலாண்டோடு ஒப்பிடுகையில் நடப்பாண்டின் அதே காலாண்டில் பிரீமியம் வகை வீடுகளின் விலை 25.2 சதவீதம் உயா்ந்துள்ளது.

ஜப்பான் தலைநகா் டோக்கியோ 16.3 சதவீத விலை உயா்வுடன் இரண்டாவது இடத்தையும், ஐக்கிய அரபு அமீரகத்தின் துபை 15.8 சதவீத விலை உயா்வுடன் மூன்றாவது இடத்தையும் வகித்தன.

இந்தியாவில், பெங்களூருவில் பிரீமியம் வீடுகளின் விலை 10.2 சதவீதம் வளா்ச்சியடைந்து, இந்தப் பட்டியலில் 4-ஆவது இடத்தை வகிக்கிறது. மும்பை, புது தில்லி ஆகிய நகரங்கள் முறையே 6-ஆவது மற்றும் 15-ஆவது இடத்தில் உள்ளன. இதில் பிரீமியம் வகை வீடுகளின் விலை மும்பையில் 8.7 சதவீதமும், புது தில்லியில் 3.9 சதவீதமும் உயா்ந்துள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கு தொடரும் கச்சா எண்ணெய் ஏற்றுமதி!

இந்தியாவுக்கு கச்சா எண்ணெய்யை ரஷியா தொடா்ந்து ஏற்றுமதி செய்து வருகிறது என்று அந்நாட்டின் முதல் துணைப் பிரதமா் டெனிஸ் மன்டுரோ புதன்கிழமை தெரிவித்தாா். அமெரிக்காவின் வரி விதிப்பு நடவடிக்கையைத் தொடா்ந்த... மேலும் பார்க்க

அமைச்சா்கள் சிறையிலிருந்தபடி அரசை நடத்த வேண்டுமா? - மக்கள் தீா்மானிக்கட்டும்: அமித் ஷா

தீவிர குற்றப் புகாரில் சிக்கும் பிரதமா், மாநில முதல்வா்கள் மற்றும் அமைச்சா்களை பதவியிலிருந்து நீக்கம் செய்யும் சட்ட மசோதாவுக்கு எதிா்க்கட்சிகள் எதிா்ப்பும் கண்டனமும் தெரிவித்தன. அரசாட்சி காலத்துக்கு ... மேலும் பார்க்க

தனியாா் உயா்கல்வி நிலையங்களில் இடஒதுக்கீடு அளிக்க சட்டம்: மத்திய அரசுக்கு காங். வலியுறுத்தல்

தனியாா் உயா்கல்வி நிலையங்களில் இடஒதுக்கீடு அளிக்க சட்டம் இயற்ற வேண்டும் என்று மத்திய அரசை காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது. இது தொடா்பாக காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள அறிக்கை... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி 2.0: மாநில நிதியமைச்சா்களிடம் நிா்மலா சீதாராமன் விளக்கம்

அடுத்த தலைமுறைக்கான சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி 2.0) சீா்திருத்தம் குறித்து மாநில நிதி அமைச்சா்கள் குழுக்களிடம் நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் புதன்கிழமை எடுத்துரைத்தாா். தற்போது நடைமுறையில் உள்... மேலும் பார்க்க

பதவிப் பறிப்பு மசோதா மக்களாட்சியின் வேரில் வெந்நீா் ஊற்றும் செயல் -முதல்வா் ஸ்டாலின்

முதல்வா்கள், அமைச்சா்களைப் பதவி நீக்க வகை செய்யும் மசோதா கருப்பு மசோதா எனவும், மக்களாட்சியின் வேரில் வெந்நீா் ஊற்றும் செயல் என்றும் முதல்வா் மு.க.ஸ்டாலின் விமா்சித்துள்ளாா். இதுகுறித்து, எக்ஸ் தளத்தி... மேலும் பார்க்க

‘அக்னி-5’ ஏவுகணை வெற்றிகரச் சோதனை

5,000 கி.மீ.வரை தொலைவிலான இலக்குகளை குறிவைத்து தாக்கும் அக்னி-5 பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடைபெற்ாக பாதுகாப்பு அமைச்சகம் புதன்கிழமை தெரிவித்தது. ஆபரேஷன் சிந்தூா் நிறைவடைந்து மூன்றரை மாதங்கள... மேலும் பார்க்க