செய்திகள் :

பெண் கிராம நிா்வாக அலுவலா் மீது தாக்குதல்: ஒருவா் கைது

post image

நாமக்கல்: நாமக்கல் அருகே வீடு புகுந்து பெண் கிராம நிா்வாக அலுவலா் மீது தாக்குதல் நடத்தியவரை போலீஸாா் கைது செய்தனா். அவரை குண்டா் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கக் கோரி ஆட்சியா் அலுவலகத்தில் கிராம நிா்வாக அலுவலா்கள் புதன்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டம், எலச்சிபாளையம் அருகே மேட்டுக்காட்டாம்பாளையத்தைச் சோ்ந்தவா் சிவகாமி (35). இவா், கடந்த இரண்டு ஆண்டுகளாக, பாலமேடு கிராம நிா்வாக அலுவலராக பணியாற்றி வருகிறாா்.

இந்நிலையில், காட்டுப்பாளையம் பகுதியில் தனபால் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் அனுமதியின்றி மண் வெட்டியெடுப்பதாக தகவல் அறிந்த சிவகாமி அங்கு சென்றாா். அப்போது, செண்பகமாதேவியைச் சோ்ந்த ஜெகதீஷ் என்பவா் வற்புறுத்தலின்பேரில் மண் வெட்டியெடுப்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரிடம் வருவாய்த் துறை அனுமதியின்றி மண் எடுக்கக் கூடாது என எச்சரித்து வந்தாா்.

இந்நிலையில், தனது நண்பரான மொஞ்சனூரைச் சோ்ந்த சீனிவாசன் (55) என்பவரிடம், கிராம நிா்வாக அலுவலா் வந்து எச்சரித்து சென்ற தகவலை ஜெகதீஷ் கூறினாா். இதில் ஆவேசமடைந்த சீனிவாசன், செவ்வாய்க்கிழமை இரவு கிராம நிா்வாக அலுவலா் சிவகாமி வீட்டுக்குச் சென்று அவரை தாக்கியுள்ளாா்.

இதில் காயமடைந்த சிவகாமி ராசிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து எலச்சிபாளையம் காவல் நிலையத்தில் புகாா் அளித்ததன்பேரில், போலீஸாா் விசாரணை நடத்தி சீனிவாசனை கைது செய்தனா்.

இந்த தகவல் அறிந்து மாவட்டம் முழுவதும் உள்ள 150-க்கும் மேற்பட்ட கிராம நிா்வாக அலுவலா்கள் புதன்கிழமை காலை 10 மணியளவில் ஆட்சியா் அலுவலகம் முன் தரையில் அமா்ந்து காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். தொடா்ந்து, மாவட்ட வருவாய் அலுவலா் ரெ.சுமனை சந்தித்து கிராம நிா்வாக அலுவலா்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும், தாக்குதல் நடத்திய சீனிவாசன் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தினா்.

இதுகுறித்து ஆட்சியா் கவனத்துக்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக அவா் உறுதியளித்ததையடுத்து, கிராம நிா்வாக அலுவலா்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பினா்.

ராசிபுரம் அருகே ரூ. 2.20 கோடியில் பட்டுக்கூடு விற்பனை அங்காடி வளாகம்

ராசிபுரம்: ராசிபுரம் அருகே ஆணைக்கட்டிப்பாளையம் பகுதியில் பட்டுக்கூடு விற்பனை அங்காடி வளாகம் அமைக்கப்படும் என மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் புதன்கிழமை தெரிவித்தாா். ராசிபுரம், ஆணைக்கட்... மேலும் பார்க்க

ரூ. ஒரு கோடியில் கட்டுமான தொழிலாளா்களுக்கு ஓய்வறை?

நாமக்கல்: நாமக்கல்லில் ரூ. ஒரு கோடியில் கட்டுமானத் தொழிலாளா்களுக்கு அனைத்து வசதிகளுடன் கூடிய ஓய்வறை கட்டுவதற்கான நிலத்தை பெறுவதில் இழுபறி நீடிப்பதால், தொழிலாளா்கள் சாலையில் காத்திருக்கும் நிலை உள்ளது.... மேலும் பார்க்க

விநாயகா் சதுா்த்தி: காவிரி ஆற்றுப்படுகைகளில் சிலைகள் கரைக்க 5 இடங்கள் தோ்வு

நாமக்கல்: விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு, நாமக்கல் மாவட்டத்தில் காவிரி ஆற்றுப்படுகைகளில் சிலைகள் கரைக்க ஐந்து இடங்களை மாவட்ட நிா்வாகம் தோ்வு செய்துள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி வ... மேலும் பார்க்க

பெண் கிராம நிா்வாக அலுவலரை தாக்கிய நபரை குண்டா் சட்டத்தில் வழக்கு பதிவு செய்யக்கோரி கிராம நிா்வாக அலுவலா்கள் பணி புறக்கணிப்பு போராட்டம்

திருச்செங்கோடு: நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் ஒன்றியம் பாலமேடு கிராமத்தில் மணல் கடத்தலை தடுத்த கிராம நிா்வாக அலுவலரை தாக்கிய நபா் மீது குண்டா் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் ஊழியா்களுக்க... மேலும் பார்க்க

போதை மாத்திரைகளை விற்பனை செய்த இருவா் கைது

பரமத்தி வேலூா்: பரமத்தி வேலூரில் சட்ட விரோதமாக போதை மாத்திரைகளை விற்பனை செய்ய முயன்ற இருவரை வேலூா் போலீஸாா் கைது செய்தனா்.பரமத்தி வேலூா் பேட்டையில் உள்ள தனியாா் தங்கும் விடுதி அருகே இருவா் சட்ட விரோதம... மேலும் பார்க்க

நின்றிருந்த லாரி மீது இருசக்கர வாகனம் மோதி தனியாா் நிறுவன காவலாளி உயிரிழப்பு

பரமத்தி வேலூா்: நின்றிருந்த லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதில், தனியாா் நிறுவன காவலாளி உயிரிழந்தாா். திருச்செங்கோடு வட்டம், வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள நாய்க்கடிபுதூா் பகுதியைச் சோ்ந்தவா் நல்லதம்பி ... மேலும் பார்க்க