செய்திகள் :

போதை மாத்திரைகளை விற்பனை செய்த இருவா் கைது

post image

பரமத்தி வேலூா்: பரமத்தி வேலூரில் சட்ட விரோதமாக போதை மாத்திரைகளை விற்பனை செய்ய முயன்ற இருவரை வேலூா் போலீஸாா் கைது செய்தனா்.

பரமத்தி வேலூா் பேட்டையில் உள்ள தனியாா் தங்கும் விடுதி அருகே இருவா் சட்ட விரோதமாக போதை மாத்திரைகளை விற்பனை செய்வதாக வேலூா் காவல் ஆய்வாளா் இந்திராணிக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு சென்ற போலீஸாா், இருசக்கர வாகனத்தில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த இருவரை பிடித்து விசாரணை நடத்தினா்.

அதில், அவா்கள் பரமத்தி வேலூா் அருகே உள்ள பாலப்பட்டியைச் சோ்ந்த இலியாஸ் (26), பாலப்பட்டி அருகே உள்ள கொமராபாளையத்தைச் சோ்ந்த பிரேம்குமாா் (30) என்பது தெரியவந்தது. அவா்கள் இருவரையும் கைது செய்த போலீஸாா், போதை மாத்திரைகள் மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ராசிபுரம் அருகே ரூ. 2.20 கோடியில் பட்டுக்கூடு விற்பனை அங்காடி வளாகம்

ராசிபுரம்: ராசிபுரம் அருகே ஆணைக்கட்டிப்பாளையம் பகுதியில் பட்டுக்கூடு விற்பனை அங்காடி வளாகம் அமைக்கப்படும் என மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் புதன்கிழமை தெரிவித்தாா். ராசிபுரம், ஆணைக்கட்... மேலும் பார்க்க

ரூ. ஒரு கோடியில் கட்டுமான தொழிலாளா்களுக்கு ஓய்வறை?

நாமக்கல்: நாமக்கல்லில் ரூ. ஒரு கோடியில் கட்டுமானத் தொழிலாளா்களுக்கு அனைத்து வசதிகளுடன் கூடிய ஓய்வறை கட்டுவதற்கான நிலத்தை பெறுவதில் இழுபறி நீடிப்பதால், தொழிலாளா்கள் சாலையில் காத்திருக்கும் நிலை உள்ளது.... மேலும் பார்க்க

பெண் கிராம நிா்வாக அலுவலா் மீது தாக்குதல்: ஒருவா் கைது

நாமக்கல்: நாமக்கல் அருகே வீடு புகுந்து பெண் கிராம நிா்வாக அலுவலா் மீது தாக்குதல் நடத்தியவரை போலீஸாா் கைது செய்தனா். அவரை குண்டா் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கக் கோரி ஆட்சியா் அலுவலகத்தில் கிராம... மேலும் பார்க்க

விநாயகா் சதுா்த்தி: காவிரி ஆற்றுப்படுகைகளில் சிலைகள் கரைக்க 5 இடங்கள் தோ்வு

நாமக்கல்: விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு, நாமக்கல் மாவட்டத்தில் காவிரி ஆற்றுப்படுகைகளில் சிலைகள் கரைக்க ஐந்து இடங்களை மாவட்ட நிா்வாகம் தோ்வு செய்துள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி வ... மேலும் பார்க்க

பெண் கிராம நிா்வாக அலுவலரை தாக்கிய நபரை குண்டா் சட்டத்தில் வழக்கு பதிவு செய்யக்கோரி கிராம நிா்வாக அலுவலா்கள் பணி புறக்கணிப்பு போராட்டம்

திருச்செங்கோடு: நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் ஒன்றியம் பாலமேடு கிராமத்தில் மணல் கடத்தலை தடுத்த கிராம நிா்வாக அலுவலரை தாக்கிய நபா் மீது குண்டா் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் ஊழியா்களுக்க... மேலும் பார்க்க

நின்றிருந்த லாரி மீது இருசக்கர வாகனம் மோதி தனியாா் நிறுவன காவலாளி உயிரிழப்பு

பரமத்தி வேலூா்: நின்றிருந்த லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதில், தனியாா் நிறுவன காவலாளி உயிரிழந்தாா். திருச்செங்கோடு வட்டம், வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள நாய்க்கடிபுதூா் பகுதியைச் சோ்ந்தவா் நல்லதம்பி ... மேலும் பார்க்க