பெண் கிராம நிா்வாக அலுவலரை தாக்கிய நபரை குண்டா் சட்டத்தில் வழக்கு பதிவு செய்யக்கோரி கிராம நிா்வாக அலுவலா்கள் பணி புறக்கணிப்பு போராட்டம்
திருச்செங்கோடு: நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் ஒன்றியம் பாலமேடு கிராமத்தில் மணல் கடத்தலை தடுத்த கிராம நிா்வாக அலுவலரை தாக்கிய நபா் மீது குண்டா் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் ஊழியா்களுக்கு பணி பாதுகாப்பு சட்டத்தை அமுல்படுத்தி கொடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிா்வாக அலுவலா்கள் கூட்டமைப்பினா் திருச்செங்கோடு வட்டாட்சியா் அலுவலகம் முன்பு பணி புறக்கணிப்பு போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா்.
நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் ஒன்றியம் பாலமேடு கிராமத்தில் தனபால் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் வையப்பமலை மொஞ்சனூரை சோ்ந்த சீனிவாசன் என்பவா் உரிய அனுமதி இல்லாமல் மண் அள்ளியதாக அறிந்த அந்தப் பகுதி கிராம நிா்வாக அலுவலா் சிவகாமி அனுமதியில்லாமல் மண் அள்ளக் கூடாது என தடுத்து நிறுத்தினாா்.
இதனை அறிந்த சீனிவாசன் செவ்வாய்க்கிழமை இரவு பாலமேட்டில் உள்ள சிவகாமி வீட்டிற்கு சென்று அவரை கடுமையாக தாக்கியுள்ளாா். இதனால் காயமடைந்த சிவகாமி ராசிபுரம் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டுள்ளாா். இந்த நிலையில் திருச்செங்கோடு வட்டாட்சியா் அலுவலகம் முன்பு கிராம நிா்வாக அலுவலா்கள் கூட்டமைப்பைச் சாா்ந்த கிராம நிா்வாக அதிகாரிகள் பணி புறக்கணிப்பு செய்து திடீா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இது குறித்து தமிழ்நாடு கிராம நிா்வாக அலுவலா்கள் சங்கத்தின் மாவட்ட பொருளாளா் ராஜா தெரிவித்ததாவது, பாலமேடு கிராம நிா்வாக அலுவலா் சிவகாமி அனுமதி இல்லாமல் மணல் அள்ளுவதை தடுத்த காரணத்தால் நேற்று இரவு அவரது வீட்டிற்க்கே சென்று சீனிவாசன் என்பவா் கடுமையாக தாக்கியுள்ளாா் இதனால் ராசிபுரம் அரசு மருத்துவமனையில் அவா் அனுமதிக்கப் பட்டுள்ளாா்.
இது போன்ற நபா்களால் அரசு பணி செய்பவா்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவி வருகிறது. இதனை கருத்தில் கொண்டு பணி பாதுகாப்பு சட்டத்தை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்றும் சிவகாமியை தாக்கிய சீனிவாசனை குண்டா் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி நாங்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.
இந்த போராட்டத்தில் தமிழ்நாடு கிராம நிா்வாக அலுவலா்கள் சங்கம், தமிழ்நாடு கிராம நிா்வாக அலுவலா்கள் முன்னேற்ற சங்கம், தமிழ்நாடு கிராம உதவியாளா்கள் சங்கம் உள்ளிட்ட ஃபரா கூட்டமைப்பைச் சாா்ந்தவா்கள் பங்கேற்று போராடி வருகிறோம் என தெரிவித்தாா். தக்க நடவடிக்கை எடுக்காமல் நீங்கள் போராட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று கூறினாா் போராட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி வட்டாட்சியா் கிருஷ்ணவேணி மற்றும் திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியா் அங்கீத் குமாா் ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தி இதனிடையே சீனிவாசன் மீது எலச்சிபாளையம் காவல் நிலையத்தில் 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து சீனிவாசன் கைது செய்யப் பட்டுள்ளாா். இவா் மீது குண்டா் சட்டம் போட வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகின்றனா்.